இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

விதியா ? மதியா ? அ’வ’தியா ?

விதியா ? மதியா ? அ’வ’தியா ?



எழுதியவர் தாத்தா கல்பட்டார்


ஒரு கிராமத்துலெ பட்டி மன்றம் ஒண்ணு நடந்தீச்சு. கிராமம் இல்லியா? அங்கெ என்ன கலைவாணர் அரங்கமா கெடெய்க்குது பட்டி மன்றம் நடத்த. ஒரு வீட்டுத் திண்ணெலெ முக்காலி ஒண்ணுமேலெ நடுவர் குந்திகினாரு. அவருக்கு ரெண்டு பக்கமும் எதிர் எதிர் அணிங்க குந்திகினாங்க. ஜனங்கள்ளாம் தரெலெ குந்திகினாங்க.

நடுவர் சொன்னாரு,


"இன்னிக்கி நடடக்கப் போற பட்டி மன்றத்துக்குத் தலைப்பு 'எது பெரிசு? விதியா? மதியா? அவதியா' ங்கறது. ரெண்டு அணிக்கும் பேசுறதுக்காக பல ஊருங்கள்ளேருந்து நம்ம ஊருக்கு பெரியவங்க வந்திருக்காங்க. அவங்க என்ன சொல்றாங்க கேப்போம்" என்று.
ஒரு அணித் தலைவர் ஆரம்பித்தார், "நடுவர் அவர்களே, எதிர் அணிப் பேச்சாளர்களே. கூடி இருக்கும் பொது மக்களே! என்னெக் கேட்டா நான் விதிதான் பெரிசுன்னு சொல்லுவேன். எப்படின்னு கேக்குறீங்களா? இப்ப கூட பாருங்க நான் இன்னிக்கி இங்கெ வந்து பேசுவேன்னு நெனெக்கெவே இல்லீங்க. பக்கத்து டவுனுக்குப் போகலாம்னுதான் பஸ் ஏறினேங்க. வெய்ய வேளெ. நல்ல தூக்கம். பஸ்ஸு நின்னீச்சு. நம்மஊருதான் வந்திடிச்சாகும்னு எறங்கீட்டேங்க. பஸ்ஸும் போயிடிச்சு. அப்பலதான் பாத்தேன் கண்ணுக் கெட்டினதூரம் வரெ பொட்டல் காடுதான். ஒரே தாகம். பக்கத்துல தண்ணி கெடெய்க்கு;மான்னு கூட எறங்கினவங்களெக் கேட்டேங்க. அவங்க சொன்னாங்க ரெண்டு கல்லு தூரம் இந்த வண்டிப் பாதேலெயெ நடந்தா ஒரு கிராமம் வரும். அங்கெ தண்ணி கெடெக்கும்னு. நான் நெனெக்கெவே இல்லீங்க எங்கெ வருவேன். ஒங்க முன்னாடி பேசுவேன்னு. அத்யுதாங்க விதி. நீங்களே சொல்லுங்க விதி பெரிசா இல்லியான்னு"



எதிர் அணித் தலைவர் படக்கென்று எழுந்தார். "அய்யா நடுவரே, மகா ஜனங்களே, இப்போ பேசினாரே விதிதான் பெரிசு. நான் இங்கெ இன்னிக்கி வருவேன். ஒங்க முன்னடி பேசுவேன்னு நெனெக்கெலே. விதியினாலெ தான் இங்கெ வந்து சேந்தேன்னு. அவரு பஸ்ஸு டிக்கெட்டு வாங்கும் போது நான் வரிசெலெ அவரு பின்னாடிதான் நின்னுகிட்டு இருந்தேன். இந்த கிராமத்துப் பேரெச் சொல்லிதான் டிக்கெட்டு கேட்டு வாங்கினாருங்க. அது மட்டும் இல்லீங்க. பஸ்ஸுலெ ஏறி ஒக்காந்ததும் பக்கத்து சீட்டுலெ இருந்தவரு கிட்டெ சொன்னாரு, "ஐயா நான் பஸ்ஸுலெ ஏறினாத் தூங்கிடுவேன். கொட்டப் பட்டி ஸ்டாப்பு வரத்துக்கு முன்னாடி என்னெக் கொஞ்சம் எளுப்பி வுட்டுருங்கனு சொன்னாருங்க இப்பொ சொல்லுங்க சாமார்த்தியமா விதிதான் பெரிசுன்னாரே அவரு அது சரியா இல்லெ சரியான நேரத்துலெ சரியான தகவலெக் கொடுத்த என்னோட மதி பெரிசான்னு. நீங்க மதியாலெ விதியெ வென்ன நளாயினி, சாவித்திரி இவங்க கதெயெக் கேட்டதில்லீங்க?"
முதலில் பேசியவர் ஆக்ரோஷத்தோட எளுந்து சொன்னாரு, "என்னெயப் பத்தின சொந்த தகவல்களெ இங்கெ எதிர் அணித் தலைவர் தனக்கு சாதகமா உபயோகிச்சுக் கிட்டதுக்கு நான் அவரெ வன்மையாகக் கண்டிக்கிறேன்."
"அமைதி அமைதி" என்றபடி மேலும் கீழுமாக கையெ அசெச்சுகிட்டு நடுவர் தலெயெ ரெண்டு கையாலேயும் அளுத்திப் புடிச்சுகிட்டு சொன்னாரு,

"அய்யா விதியும் பெரிசில்லெ மதியும் பெரிசில்லெ. ஒங்க சண்டெயெத் தீத்து வெய்க்க நான் படுற அவதிதான் பெரிசு"ந்னு.
கூட்டத்தில் இருந்த ஒருத்தரு தன் ஒரத்த குரலிலெ ஆரம்பிச்சாரு, "அய்யா ந...ந...நடுவரே வி...வி...விதியும் பெ...பெ...பெரிசில்லெ. ஒங்க அவதியும் பெ...பெ...பெரிசில்லெ. நி...நி...நீங்கள்ளாம் கு...கு...குந்திரிக்கீங்களே அந்தத் தி...தி...திண்ணெதான் பெ...பெ...பெரிசு. ஏன்னா நா...நா...நாங்க இங்கெ சு...சு...சுடுற த...த...தரெலெ கு...கு...குந்திகீறோம். நி...நி...நீங்க சொ...சொ...சொகமாமாத் தி...தி...திண்ணேலெ கு...கு...குந்திகீறீங்க."

ன்னு.
என்னங்க எதுனாச்சியும் புரிஞ்சீச்சுங்களா?


நடராஜன் கல்பட்டு


நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)