இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

இது என்னது ?

சில்லி ரூஸ்டரா,இல்ல சில்லி சிக்கன்னா

-

-


-






-


-





சாப்பிடுத பொருள்கள் என்னமா காமடி பண்ணுது !!!!

ரொம்ப கடிக்க போறேன்!!!
தெரியுது??சாரி
யாரும் என்னிய திட்டாதீங்க


ஐயோ வெறும் காத்துதான்ப்பா வருது

விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீனை

பாடத்த கவனிங்க,

நாம செருப்பை கடிக்க ஒரே வழி இதுதான் !(பாதமான பன்)

நான் சிவப்பு மனிதன்

பன்னுக்கு கோவம் வந்தால்

இரு வந்து உன்னை புழியறேன்.

ஆறடி சுவருதான் ஆசையை பிரிக்குமா தக்காளியே !!!


ஓ பட்டர்ஃப்ளை,

அழகோவியம் குளிக்கப் போகுது



நீங்க நெய் விளக்கு ஏத்துவீங்க மா விளக்கு ஏத்துவீங்க
நாங்கள்ளாம்.............இப்படியும் ஏத்துவோம்ல


எப்புடி..........

Bun-னின் கையில் உற்றுப்பார்த்தேன் ஒற்றை நாணயம்,

பகவத்கீதை


இ‌ந்து ம‌க்க‌ளி‌ன் பு‌னித நூலாக‌க் கருத‌ப்படுவது பக‌வ‌த் ‌கீதையாகு‌ம். மகாபார‌த‌த்‌தி‌ல் நடைபெறு‌ம் குருஷே‌த்‌திர‌ப் போ‌ர் தொட‌ங்குவத‌ற்கு மு‌ன்ன‌ர் எ‌திர‌ணியை பா‌ர்வை‌யி‌ட்டஅ‌ர்ஜூன‌ன்,

இருபக்கங்களிலும் தலைசிறந்த வீரர்கள் கூடியிருந்ததைப் பார்த்து உறவினர்களையும் நண்பர்களையும் அழித்துக் கிடைக்கும் வெற்றியை நினைத்துக் கலங்கினான் .

க்ஷத்ரிய தர்மத்தை விட்டுச் செல்ல நினைக்கும் பார்த்தனுக்கு சோக மோஹத்தைத் தவிர்க்குமாறு “ஸ்ரீபகவத் கீதை” என்னும் பெயரில் 18 அத்யாயங்களில் ஸ்ரீகிருஷ்ண பகவான் அரிய உபதேசம் செய்தார். அந்த அத்யாயங்கள் பின்வருமாறு:

1. அர்ஜுந விஷாதயோகம்
2. ஸாங்க்ய யோகம்
3. கர்ம யோகம்
4. ஞானகர்ம ஸந்யாஸ யோகம்
5. கர்ம ஸந்யாஸ யோகம்
6. ஆத்ம ஸம்யம யோகம்
7. ஞான விஞ்ஞான யோகம்
8. அக்ஷரப்ரஹ்ம யோகம்
9. ராஜவித்யா ராஜ குஹ்ய யோகம்
10. விபூதி யோகம்
11. விஸ்வரூப தர்சந யோகம்
12. பக்தி யோகம்
13. க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
14. குணத்ரய விபாக யோகம்
15. புருஷோத்தம யோகம்
16. தைவாஸுர ஸம்பத்விபாக யோகம்
17. ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்
18. மோக்ஷ ஸந்யாஸ யோகம்

யோகம் என்னும் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் இங்கு அதற்குத் தலைப்பு எனப் பொருள் கொள்ளல் வேண்டும்.
————–
தகவல் & படம் இணையத்திலிருந்து

மருத்துவர் சிரிப்பு



"டாக்டர்;ஒரு சின்ன சந்தேகம் கேட்டா தப்பா நினைக்கக் கூடாது;

நோயாளி;கேளுங்கள் டாக்டர் ஐயா

டாக்டர்; ஆப்ரேசனுக்கு அப்பறம் நான் பீசை யார்கிட்ட போய் வங்கறது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"டாக்டர்;ஐயா எனக்கு வயிறு எரியுது ...


நான் பீஸே சொல்லலை அதுக்குள்ள எப்படி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"ஏன் சிஸ்டர் திடிர்னு எனக்கு ஆப்ரேஷன் வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டார்?


"டாக்டருக்கு திடிர்னு வேற இடத்தில் இருந்து பணம் வந்துட்டதாம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
''ஊசிபோட்ட பிறகு எதுக்கு டாக்டர் ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க?


இல்ல' உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னுபாக்க ஆசையா இருக்கு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"நீங்க தான் டிஸ்சார்ஜ் ஆயாச்சே, இன்னும்ஏன் வீட்டுக்குப் போகாம இங்கேயே இருக்கீங்க"

பஸ் சார்ஜ் இல்ல டாக்டர் ''!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"டெம்பரேச்சர் தாறுமாறா இருக்கே....!''


நேத்து வெச்ச தெர்மாமீட்டர் டாக்டர் நர்ஸ் எடுக்க மறந்துட்டாங்க.....!''
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
''உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் அவங்களால பேச முடியாது!''
அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நோயாளி: டாக்டர் நீங்க எழுதிதந்த சீட்டுக்கு மருந்து தரமாட்டேங்கிறாங்க‌
டாக்டர்: அடா, இது நான் கிறிக்கி பார்த்த சீட்டு
(mindvoice: மத்த சீட்டுனா மட்டும் எழுதிதள்ளிருவீங்க பாரு)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நோயாளி : காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்.
டாக்டர் : (செக் பண்ணிவிட்டு) எனக்கு ஒன்னும் கேட்கலையே?
நோயாளி : அப்படியா! அப்போ ஏதாவது ஜங்ஷன்ல நின்னிருக்குமோ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹைக்கிரவுண்ட் ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை வார்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது!
சிரிக்க மறந்த சிந்தனைவாதிகளும்
உண்மைச் சம்பவம் பிடிக்காத யதார்த்தவாதிகளும் இதனை வாசித்து வயிற்றுவலி வாங்கிக்கொள்ள வேண்டாம்.......

விபத்து ஒன்றில் மார்பெலும்புக்கூடு சேதமடைந்து அறுவை சிகிச்சைக்காக வந்திருந்தார் ஒரு அன்பர். மருத்துவரின் கைவண்ணத்தால் திறம்பட செப்பனிடப்பட்டு பின்கவனிப்பு பகுதி(post operative ward)யில் தீவிர கவனிப்பில் இருந்தார். நுரையீரலின் சுவாச சக்தியை அதிகரிக்கும் பொருட்டு பலூன்
ஊதி ஊதி உடைக்கும்படி தலைமை மருத்துவர் அறிவுரை கூறியிருந்தார். ஊதும்போது நுரையீரல் சுருங்கி விரியும்.

மறுநாள் காலை உதவிமருத்துவர்கள், ஹவுஸ்சர்ஜன்ஸ், செவிலியர்கள் புடைசூழ தலைமை மருத்துவர் ரவுண்ட்ஸ்
வந்துகொண்டிருந்தார். வார்டில் நுழைந்ததும் படார் படார் என்றொரு சத்தம். எல்லோர் முகத்திலும் பேயறைந்தது போன்ற
அதிர்ச்சி. திட்டுவதற்கு வாயைத்திறந்த மருத்துவர் அடக்க
முடியாமல் சிரித்துவிட்டார். நம் மார்புக்கூடு நண்பர், மனைவி
பலூன் ஊதி ஊதி தர இருகையாலும் குழந்தைபோல் உடைத்துக் கொண்டிருந்தார், மருத்துவர் பார்த்துப் பாராட்டவேண்டுமென்று!!!!!

பழமொழிகள் ,


•அகத்தினழகு முகத்தில் தெரியும்.
•அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
•அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
•அடியாத மாடு படியாது.
•அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
•அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
•அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
•அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
•அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
•அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
•அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
•அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
•ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
•ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
•ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
•ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
•ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
•ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
•ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
•ஆழம் தெரியாமல் காலை விடாதே.
•ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
•ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
•ஆனைக்கும் அடிசறுக்கும்.
•இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
•இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
•உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
•உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
•ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
•எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
•எறும்பூரக் கல்லும் தேயும்.
•ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
•ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
•ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
•கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
•கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
•கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
•கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
•கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
•கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
•கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
•கழுதை அறியுமா கற்பூர வாசனை?
•காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
•காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
•காகம் திட்டி மாடு சாகாது.
•காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
•காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
•காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
•கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
•குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
•குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
•குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
•குரைக்கிற நாய் கடிக்காது.
•கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
•கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
•கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
•கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
•சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
•சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
•சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
•சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
•சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
•தடியெடுத்தவன் தண்டக்காரன்.
•தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
•தன் வினை தன்னைச் சுடும்.
•தனிமரம் தோப்பாகாது.
•தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
•தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
•தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
•தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
•தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
•நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
•நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
•நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
•நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
•நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
•நிறைகுடம் தளம்பாது.
•பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
•படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
•பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
•பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
•பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
•பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
•பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
•பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
•பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
•புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
•புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
•பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
•பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
•போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
•மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
•மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
•மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
•முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
•முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
•முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
•மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
•யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
•யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
•விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
•விரலுக்குத் தக்கதே வீக்கம்.
•விளையும் பயிரை முளையிலே தெரியும்.
•வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
•வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
•வெளுத்ததெல்லாம் பாலல்ல.
•வேலிக்கு ஓணான் சாட்சி.
•வைக்கோற் போர் நாய் போல

http://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகள்

சிந்திக்க! சிறக்க !!


சிந்திக்க :

நாம் வாயைத் திறக்கும் பொழுதெல்லாம் உள்ளத்தை திறக்கிறோம்.
இன்றைய நாளை இறுகப் பற்றிக் கொள், நாளை நாளைப் பற்றி அதிகம் நம்ப வேண்டாம்.
யார் யார் எதில் உயாந்தவர் என்பது இறப்பிற்கு பின்னே தெரியும்.
மனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையில் உள்ள முட்டையைப் போன்றது.
துணிவுடன் எதையும் செய், அதன் தன்மையில் புது அர்த்தங்கள் மலரும்.
வாதாடப் பலருக்குத் தெரியும், உரையாடுவது சிலருக்குத் தான் தெரியும்.




சிரிப்பின் வகைகள் :

ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகக்காரன்
மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்
இடம் பார்த்துச் சிரிப்பவன் எத்தன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்
தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி
தெரியாது என்று சிரிப்பவன் நடிகன்
இருக்கும் இடம் எல்லாம் சிரிப்பவன் கோமாளி
கண் பார்த்துச் சிரிப்பவன் கஞ்சன்
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)