இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

மருத்துவர் சிரிப்பு



"டாக்டர்;ஒரு சின்ன சந்தேகம் கேட்டா தப்பா நினைக்கக் கூடாது;

நோயாளி;கேளுங்கள் டாக்டர் ஐயா

டாக்டர்; ஆப்ரேசனுக்கு அப்பறம் நான் பீசை யார்கிட்ட போய் வங்கறது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"டாக்டர்;ஐயா எனக்கு வயிறு எரியுது ...


நான் பீஸே சொல்லலை அதுக்குள்ள எப்படி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"ஏன் சிஸ்டர் திடிர்னு எனக்கு ஆப்ரேஷன் வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டார்?


"டாக்டருக்கு திடிர்னு வேற இடத்தில் இருந்து பணம் வந்துட்டதாம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
''ஊசிபோட்ட பிறகு எதுக்கு டாக்டர் ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க?


இல்ல' உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னுபாக்க ஆசையா இருக்கு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"நீங்க தான் டிஸ்சார்ஜ் ஆயாச்சே, இன்னும்ஏன் வீட்டுக்குப் போகாம இங்கேயே இருக்கீங்க"

பஸ் சார்ஜ் இல்ல டாக்டர் ''!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"டெம்பரேச்சர் தாறுமாறா இருக்கே....!''


நேத்து வெச்ச தெர்மாமீட்டர் டாக்டர் நர்ஸ் எடுக்க மறந்துட்டாங்க.....!''
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
''உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் அவங்களால பேச முடியாது!''
அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நோயாளி: டாக்டர் நீங்க எழுதிதந்த சீட்டுக்கு மருந்து தரமாட்டேங்கிறாங்க‌
டாக்டர்: அடா, இது நான் கிறிக்கி பார்த்த சீட்டு
(mindvoice: மத்த சீட்டுனா மட்டும் எழுதிதள்ளிருவீங்க பாரு)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நோயாளி : காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்.
டாக்டர் : (செக் பண்ணிவிட்டு) எனக்கு ஒன்னும் கேட்கலையே?
நோயாளி : அப்படியா! அப்போ ஏதாவது ஜங்ஷன்ல நின்னிருக்குமோ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹைக்கிரவுண்ட் ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை வார்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது!
சிரிக்க மறந்த சிந்தனைவாதிகளும்
உண்மைச் சம்பவம் பிடிக்காத யதார்த்தவாதிகளும் இதனை வாசித்து வயிற்றுவலி வாங்கிக்கொள்ள வேண்டாம்.......

விபத்து ஒன்றில் மார்பெலும்புக்கூடு சேதமடைந்து அறுவை சிகிச்சைக்காக வந்திருந்தார் ஒரு அன்பர். மருத்துவரின் கைவண்ணத்தால் திறம்பட செப்பனிடப்பட்டு பின்கவனிப்பு பகுதி(post operative ward)யில் தீவிர கவனிப்பில் இருந்தார். நுரையீரலின் சுவாச சக்தியை அதிகரிக்கும் பொருட்டு பலூன்
ஊதி ஊதி உடைக்கும்படி தலைமை மருத்துவர் அறிவுரை கூறியிருந்தார். ஊதும்போது நுரையீரல் சுருங்கி விரியும்.

மறுநாள் காலை உதவிமருத்துவர்கள், ஹவுஸ்சர்ஜன்ஸ், செவிலியர்கள் புடைசூழ தலைமை மருத்துவர் ரவுண்ட்ஸ்
வந்துகொண்டிருந்தார். வார்டில் நுழைந்ததும் படார் படார் என்றொரு சத்தம். எல்லோர் முகத்திலும் பேயறைந்தது போன்ற
அதிர்ச்சி. திட்டுவதற்கு வாயைத்திறந்த மருத்துவர் அடக்க
முடியாமல் சிரித்துவிட்டார். நம் மார்புக்கூடு நண்பர், மனைவி
பலூன் ஊதி ஊதி தர இருகையாலும் குழந்தைபோல் உடைத்துக் கொண்டிருந்தார், மருத்துவர் பார்த்துப் பாராட்டவேண்டுமென்று!!!!!

0 comments:

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)