இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

இந்தியாவின் சிறந்த விமான நிலையங்கள்

ஹைதராபாத்.... இந்தியாவின் சிறந்த விமான நிலையம்!

விமானப் போக்குவரத்தில் இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது இந்தியா. முன்பு தூங்கி வழிந்து கொண்டிருந்து இந்திய விமான நிலையங்கள் தற்போது மகா சுறுசுறுப்பாகக் காட்சியளிக்கின்றன. முக்கியமாக பெரிய விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீனப்படுத்தி வருகிறது விமானப் போக்குவரத்து இயக்கம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம், சமீபத்தில் இந்தியாவின் சிறந்த விமான நிலையமாக ஹைதராபாத்தை தேர்வு செய்துள்ளது. வாடிக்கையர் திருப்தி, விமானங்களின் வருகை, செக் இன் செய்யப்படும் முறை என பல்வேறு விஷயங்களில் பயணிகளின் திருப்தியை அடிப்படையாகக் கொண்டு ஹைதராபாத்துக்கு இந்த கவுரவத்தை அளித்துள்ளது இந்த நிறுவனம்.

இது தவிர இந்தியாவின் சிறந்த 10 விமான நிலையங்களையும் அறிவித்துள்ளனர்.அந்த வகையில் ஹைதராபாத் உள்பட இந்தியாவின் சிறந்த 10 விமான நிலையங்கள்...

1. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் [^], ஹைதராபாத்



ஹைதராபாத் நகரிலிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ளது இந்த விமான நிலையம்.

ஆண்டுக்கு 4 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையத்தில் எவ்வளவு பெரிய விமானமும் தரையிறங்கலாம்.


இந்திய அரசும் ஜிஎம்ஆர் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள விமான நிலையம் இது. ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் ஆகியவையும் இதன் பங்குதாரர்கள். 31 மாதங்களில் கட்டப்பட்டு கடந்த மார்ச் 2008-ல் பயன்பாட்டுக்குவிடப்பட்டது. இதில் 13 லவுஞ்ச்கள் உள்ளன.


சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கு 'Leadership Energy and Environment Design' விருது வழங்கப்பட்டது. உலகிலேயே இந்த விருது பெற்ற முதல் விமான நிலையம் ஹைதராபாத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2. இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம், டெல்லி

நாட்டின் மிகப்பெரிய விமான நிலையம் இதுவே. ஜிஎம்ஆர் குழுமம், ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா, ப்ராபோர்ட் மற்றும் மலேசியன் ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டுள்ளது. மூன்று டெர்மினல்கள் உள்ளன.

இதில் மூன்றாவது டெர்மினல் மிக சமீபத்தில் கட்டப்பட்டது. உலகத் தரத்தில் அமைந்த இந்த மூன்றாவது டெர்மினல் சர்வதேச நாடுகளையும் வியக்க வைத்துள்ளது. அத்தனை நவீன வசதி. உலகின் எட்டாவது பெரிய பயணிகள் டெர்மினல் இதுவே. இந்த ஒரு டெர்மினலில் மட்டும் 34 மில்லியன் பயணிகள் வந்து போகமுடியும், ஆண்டுக்கு.

ஆட்டோமேடிக் பார்க்கிங் வசதி உண்டு. ஒரே நேரத்தில் 4300 கார்களை 7 அடுக்குகளில் நிறுத்தலாம்.

இரண்டடுக்கு கட்டடமாக உள்ள இந்த மூன்றாம் டெர்மினலில் 168 செக்-இன் கவுண்டர்கள் உள்ளன. 48 விசாரணை அல்லது தொடர்பு கவுன்டர்கள், 78 ஏரோபிரிட்ஜஸ், 72 இம்மிக்ரேஷன் கவுன்டர்ஸ், 15 ஸ்கேன் கவுன்டர்கள் என பிரமாண்ட வசதிகள் இங்குள்ளது.

3. சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை

தெற்கு ஆசியாவில் அதிக பயணிகளைக் கையாளும் விமான நிலையம் என்ற பெருமைக்குரியது மும்பை விமான நிலையம். முன்பு சர்வதேச விமானங்கள் மற்றும் உள்ளூர் விமானங்களுக்கு தனித்தனி டெர்மினல்கள் இருந்தன.

இப்போது அவை ஒன்றாக்கப்பட்டு சத்ரபதி சிவாஜி விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. ஜிவிகே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய விமான நிலையம் 2006-ல் உருவாக்கப்பட்டது.

4. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம், கொல்கத்தா

கிழக்கு இந்தியாவின் பெரும் விமான சேவை மையம் கொல்கத்தா சர்வதேச விமான நிலையம். பங்களா தேஷ், பாங்காக் போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்துதான் செல்ல வேண்டும்.

ஆண்டுக்கு 8.5 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டது இந்த விமான நிலையம்.

5. சென்னை சர்வதேச விமான நிலையம், சென்னை

நகருக்குள்ளேயே அமைந்துள்ள ஒரே விமான நிலையம் என்ற பெருமை கொண்டது சென்னை விமான நிலையம். புதிதாக இரண்டாவது டெர்மினல் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ 2350 கோடி செலவில் அதிநவீனமயமாக்கப்பட்டு வருகிறது.

கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு ஆண்டுக்கு 50 மில்லியன் பயணிகளைக் கயாளும் திறன் கொண்ட முன்னணி விமான நிலையமாகத் திகழவிருக்கிறது சென்னை.

6. சர்தார் வல்லபபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத்

நாளொன்றுக்கு 150 விமானங்களைக் கையாளும் இந்த விமான நிலையம் 1124 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. மூன்று டெர்மினல்களைக் கொண்ட அகமதாபாத் விமான நிலையத்துக்கு நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் விமானங்கள் உண்டு.

ஆகஸ்ட் 14 முதல் இதன் புதிய டெர்மினல் இயக்கப்படுகிறது.

7. லோக்ப்ரிய கோபிநாத் போர்டோலாய் சர்வதேச விமான நிலையம், கவுகாத்தி

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விமான நிலையம் இந்திய விமானப் படைத் தளமாகவும் செயல்படுகிறது. முதன்முதலாக அசாம் மாநிலத்தின் முதல்வராக இருந்தவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான கோபிநாத் போர்டோலாய் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்காசிய நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவை உண்டு. எதிர்காலத்தில் இந்த விமான நிலையத்தை பெருமளவில் விஸ்தரித்து, கிழக்கு இந்தியாவின் முதன்மை விமான நிலையமாக்க மத்திய அரசு [^] திட்டமிட்டுள்ளது.

8. ராஜா சான்ஸி சர்வதேச விமான நிலையம், அமிர்தசரஸ்

தினசரி 90 விமானங்களைக் கையாளும் அமிர்தசரஸ் விமான நிலையம், சமீபத்தில்தான் முற்றாகப் புதுப்பிக்கப்பட்டது. முன்பு வெறும் 12770 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலிருந்த இந்த விமான நிலையம்,

இப்போது 40175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2009-ம் ஆண்டுதான் திறக்கப்பட்டது.

9.டபோலிம் விமான நிலையம், கோவா

கோவா மாநிலத்தின் ஒரே விமான நிலையம் இது. இந்திய ராணுவத்தின் விமானப் படைத் தளமாகவும் இது செயல்படுகிறது. இதந் ஏர் ட்ராபிக் கண்ட்ரோல் இந்தியக் கடற்படை வசமுள்ளது.

நாளொன்று 250 விமானங்கள் வருகை மற்றும் புறப்பாட்டுக்கேற்ற வகையில் கட்டப்பட்டுள்ளது கோவா விமான நிலையத்தின் உள்நாட்டு முனைமம்.

வெளிநாட்டு முனைமம் 1996-ல் கட்டப்பட்டது. இப்போது புதிய டெர்மினல் கட்டப்பட்டு வருகிறது.

10. பெங்களூரு சர்வதேச விமான நிலையம், பெங்களூரு

பெங்களூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது இந்த விமான நிலையம். 4000 ஏக்கரில் அமைந்துள்ள இந்தப் புதிய விமான நிலையம் 2008 முதல் செயல்படுகிறது. 2009-ல் நாளொன்றுக்கு 280 விமானங்களைக் கையாண்டது இந்த விமான நிலையம்.

பெங்களூரிலிருந்து இந்தியா மற்றும் உலகின் 50 முக்கிய நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது 9 மில்லியன் பயணிகளைக் கையாளும் பெங்களூரு விமான நிலையம், 2015-ல் 17 மில்லியன் பயணிகளைக் கையாளும் அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது.

11. கொச்சி சர்வதேச விமான நிலையம், கொச்சி

கொச்சியிலிருந்து 30 கிமீ தூரத்தில் நெடும்பாசேரி என்ற இடத்தில் உள்ளது இந்த விமான நிலையம்.

ரூ 31500 கோடியில் கட்டப்பட்டு, நாட்டிலேயே பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்ட முதல் விமான நிலையம் இதுதான். 30 நாடுகளைச் சேர்ந்த 10000 என்ஆர்ஐகள் இந்த விமான நிலையத்தில் முதலீடு செய்துள்ளனர்.

நந்தலாலா – விமர்சனம்

நந்தலாலா - நொந்தலாலா



நந்தலாலா ஒரு முழு நேர அம்மா செண்டி’மெண்டல் படமாக,இயற்கை அழகுல படமெடுத்திருக்கின்றார்கள், மெண்டலாக நடித்திருக்கும் பெரிய பைத்தியமும் , சின்ன மெண்டலாக நடித்திருக்கும் சின்ன பைத்தியமும் சேர்ந்து தனது அம்மாக்களை பார்க்க கெளம்பி செல்லும் வழியில் என்ன என்ன கஷ்டங்களை சிரித்துக்கொண்டே அனுபவிக்கிறார்கள் என்பதே படம் , (அவ்வளவு தானே’னு கெளம்பிறாதிங்க மக்கா )

ஒரு மெண்டல் மெண்டல் ஆஸ்பத்திரியில் இருந்தும் ,இன்னொன்னு வீட்டில் சுற்றுலா செல்வதாக பொய் சொல்லிவிட்டும், கிளம்பும் மெண்டல்கள் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள் ,தனது கையில் இருக்கும் பணத்தை ஒருவன் பறிக்கும் போது மெண்டல் ஹீரோ வந்து காப்பாற்ற நினைத்து அடி வாங்கி தனது சூ’வை தூக்கிக்கொண்டு ஓடுவதும் , மாமா மாமா என்று பின்னாடியே திரிகிறார் சின்ன மெண்டல் இது தான் ஆ’ரம்பம் .

அடுத்த சீன் பஸ் ஸாண்டில் பணப்பற்றாக்குறையால் சிறுவன் பிஸ் அடிக்க போவதாக ஏமாற்றி தான் மட்டும் தனியே அம்மாவை பாக்க செல்லவேண்டுமென்று திட்டமிட்டு கெளம்பி அங்கு சில அங்கிள்’கள் இவரை ஆட்டைய போட திட்டமிட்டு பஸ்ஸீல் ஏறுவதும் ,தன்னுடைய மாமா கூடத்தான் வந்திருக்கிறேன் என்று கீழே இறங்கி மீண்டும் வந்து பார்த்தால் மாமாவை காணோம் , மெண்டல் மாமா சிறுவனின் உண்டியலை சுட்டு தான் தனியாக போய்விடலாமென்று திட்டமிட்டு பஸ்ஸீல் ஏறி கண்டெக்டரிடம் அடிவாங்குவது இயல்பான விசயமே ,

பின்னர் இருவரும் தனது நடை’ராஜா பயணத்தில் பயனிக்கின்றனர் , பின்னர் ஆட்டோகாரர் ஒருவரிடம் நூறு ரூபாய்க்கி பேரம் பேசி ஏற்கொண்டு வழியில் ஆட்டோகாரர் பேச்சுவாக்கில் மெண்டல் மாமாவை மெண்டலா’னு
ஒரு கேள்வி கேக்க அடிதடியில் இறங்குகிறார் மெண்டல் மாமா (ஆட்டோவும் போச்சி )ரோட்டில் வரும் போலீஸ் வேனில் இங்கிலிபீசீல் பேசி சமாளித்துக்கொண்டிருக்கும் போது மெண்டல் மாமா வழக்கம்போல தனது பேச்சில் போலீஸ் மாமாவை கடுப்பேத்துவதை தெரிந்த சின்னவர் எஸ் ஆக ”இரட்டை இலை’யை” (அரசியல் இல்லீங்க, முக்கியமான விசயம் : இதுக்கும் ஆளும் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்ல) காண்பித்து வெளியேருகிறார், போலீஸ் மாமா மிரட்டி கேட்டதும் மெண்டல் மாமா தானும் காட்டி வெளி’யேருவதும் ,பின்னர் போலீஸ் பின் தொடர்ந்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாத்துவிட்டு ”சனியன் பிடித்தவனே வாயா”என்று வழக்கமான முறையில் பேசி கெளம்புகிறார்கள் ,

படத்தில் பிடித்த காட்சி :


இந்த பள்ளி மாணவியாக வரும் கிராமத்து கருவாச்சி , மெண்டல் மாமாவை பாத்துக்கொண்டே ரோட்டை விட்டு கீழே விழுந்து காலில் அடிபட நம்ம மெண்டல் மாமா அதுக்கு கிராமத்து வைத்தியமான எச்சிலை தொட்டு வைக்கவும் , கருவாச்சிக்கி பிடித்து போவ இவர்களின் சோக கதையை கேட்டு வருத்தப்பட்டு டக்கரில் (எங்கைய்யாட்ட காசு கேட்டேனா தரமாட்டேனுட்டாரு ,இப்ப என்ன செய்வாரூஊஉவா வா’னு கிராமத்து தமிழில் அழகாக பேசிருக்காங்க நம்ம கருவாச்சி ) டக்கராக ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு (நல்ல வேலை மத்த படங்கள் மாதிரி ஹீரோ கூடவே கடேசிவரைக்கும் போவல அதுவரைக்கு சந்தோசம் தான் ) கொண்டு போய் இறக்கி விட்டு “ பத்திரமா போயிடுவியா’னு அப்பாவி தனமா கேக்கும் கேள்வி மனதுக்கு நெகிழ்வு , அதற்கு நியாபகத்தமா கொடுக்க ஒன்னுமில்லாத மெண்டல் மாமா பக்கத்தில ஓடும் வாய்க்காலுக்குள் கைய விட்டு கல்லை (என்ன கொடுக்கிறாங்க’னு முக்கியமில்ல யார் கொடுக்கிறானுதான் முக்கியம் ) எடுத்து தருகிறார் , பிரியாவிடை பெற்று செல்கிறார் நமது கருவாச்சி , மெண்டல் மாமா இலவச யோசனை ”புண்ணுல இரத்தம் வந்தா எச்சி தொட்டு தடவிக்கோ “

மாட்டு வண்டிக்கார் :

தான் செவிடு என்பதை வெளிக்காட்டாமல் அவர் செவிடு என்பதை புரிந்து கொள்ள வைத்திருக்கிறார்கள் (ஹா ஹா’னு சிரிக்காதீர்கள்) , அப்புறம் ஒரு நொண்டி ஒருத்தர் வழிக்காட்டுதேன்’னு சொல்லி ஐந்து ரூபாய் வாங்கிக்கிட்டு போறார், கொஞ்ச தூரத்தில கீழே விழுந்துவிட்டு (நான் வயித்தில இருக்கும்பொதே செத்து போயிருக்கவேண்டியதுதானே’னு தனது அம்மாவை நொந்து கொள்கிறார்)

அப்புறம் இரவு தூங்குவதுக்காக பெரிய ட்ரைலர் வண்டிய ஏற்பாடு பண்ணிருக்கிறார் டைரக்டர் , விடிந்ததும் லாரி ட்ரைவரை இம்சை பண்ணுகிறார் நம்ம மெண்டல் மாமா , அப்புறம் ஒரு ஹனிமூன் ஜோடியை டிஸ்ரப் பண்ணுகிறார்கள் , அவர்களை கிண்டல் செய்யும் இளைஞர்களின் பீர் பாட்டிலை உடைக்க அவர்களின் மண்டையை தேர்ந்தெடுக்கிறார் நமது மெண்டல் மாமா , தண்ணீர் தீர்ந்து விட இளநீர் திருடி அவருக்கே வெட்டி தந்து தானும் தாகத்தை தீர்த்து விட்டு கிளம்புகிறார்கள்,


லாரி ட்ரைவர் :

படத்திலையே ரொம்ப தேவையான விசயம் , கோவமிருக்கும் இருத்தில் தான் குணம் இருக்கு என்பதை டைரக்டர் காட்டிருப்பார் தனது ஹார்னை திருடிட்டு வந்த மெண்டல் மாமாவை அடியோ அடியோ’னு அடித்துவிட்டு பின்னர் அவர் இன்னசெண்ட்’னு (மெண்டல்’னு) தெரிஞ்சவுடனே மெண்டல் மாமவையும் சிறுவனையும் ஏற்றிக்கொண்டு சாப்பாடு வாங்கித்தருகிறார்,(இந்த படத்தில் இவர்கள் சாப்பிடும் இரண்டாவது காட்சி )
இந்த சிறுவனின் அம்மாவை பார்க்கும் மெண்டல் மாமாவிடம் காலில் விழுந்து ஏதோ சொல்லுகிறார் அந்த அம்மா (அது என்னனு என்கிட்ட சொல்லலயே எனபது வருத்தமே !)
பின்னர் இரண்டு குண்டர்கள் பைக்கில் வர அவர்களையும் நண்பர்களாக ஆக்கிவிட்டு நடந்து செல்லும் வழியில்,
ஒரு 50 ரூபாய்க்காக (50 ரூபாய் கொஞ்சம் ஓவரா தெரியல’னு பருத்திவீரன் ஸ்டைல லுக் விடக்கூடாது) சண்டை போடும் விலைமகளின் வாழ்க்கையை தெளிவாக புரிய வைத்திருக்கிறார் டைரக்டர் , மூனாவதா அவரும் இவர்களுடன் தொத்திக்கொள்கிறார்,

கடேசியாக என் அம்மாவ எங்கே , என் அம்மாவை எங்கே’னு நச்சரிக்கும் பொடியனுக்கு தனது அம்மாவை காண்பிக்க கூட்டி செல்கிறார், அங்கு தன் அம்மா பைத்தியமா இருப்பதை பாத்தவுடன் என்ன செய்வதறியாது திக்கிறார், அதைவிட்டு வெளில் வந்து மறுபடியும் சிறுவனின் நொச்சரிப்பை தாங்க முடியாமல் “உன் அம்மா செத்துவிட்டாள்’னு சொல்லுவதும் அதுக்கு அந்த பையன் போடா மெண்டல்’னு சொல்லுவதும் பின்னர் பொய் சொல்லிருக்கலாமில்ல’னு பாசத்தை பொழிவதும் கண்ணீர் , தனது தாய் எதிர்த்த திசையில் மற்றொரு சிறுமியை தூக்கிக்கொண்டு சென்றபின்(பாத்துட்டாங்களாம் )அந்த போட்டோவை பறக்க விட்டுவிட்டு அந்த விலைமகளை அம்மாவாக எண்ணி முத்த மழையை பொழிகிறார் அந்த சிறுவன் , அந்த சிறுவனை பள்ளிக்கி அழைத்து செல்லும் வழியில் பலூன்க்காரராக வரும் மெண்டல் மாமா என்கிற பாஸ்கர் மணி ஒரு பீலீங்கோட அந்த அகி அம்மாவுக்கு ஹாய் சொல்லும் விதம் :)அழகுனு சொல்ல முடியாவிட்டாலும் ஓகேனு சொல்லலாம் ,பின்னர் இனிய இசையுடன் எழுத்தை போட்டு படத்தை முடிக்கின்றார் டைரக்டர்

படத்தின் இசையுடன் வரும் இரு சோகப்பாடல்கள் கண்ணீர்க்கு கண்ணீர் , இசை இனிமை.
படத்தின் மெண்டலான போக்கை கொஞ்சம் கண்டித்திருக்கலாம் டைரக்டர், தான் என்னதான் சொல்ல வருகிறோமென்று தெளிவாக சொல்லிருந்திருக்கலாம் நந்தலாலா என்னை பொறுத்த மட்டிலும் நொந்தலாலாதான் :)

படத்தின் டிப்ஸ் :

(நாளைக்கி அரையாண்டுத்தேர்வில் கேள்வி கேட்டா எழுதவேண்டாம்)

1.மெண்டல் மாமாவின் வேலை காலைலைல பெல் அடிச்சா எழுந்திருக்கனும் ,எவ்ளோ குளிர் அடிச்சாலும் குளிக்கனும்,அப்புறம் பெல்லு ,
அப்புறம் உப்பூமா, உப்பூமா’ல பச்ச புல்லு இருந்தா நல்லா இருக்கும், அப்புறம் உலாத்தனும், யாராவது யாருக்காவது கேக் கொண்டுவருவாங்க ,காசு கிடைகும், அப்புறம் பெல்லு ,அப்புறம் தூக்கம் ,அப்புறம் பெல்லு ,

2.மெண்டல் மாமாவின் அம்மா எங்கே ? சொரம் அடிக்கும் முன்னாடி இருந்திச்சி , அப்புறம் இல்ல

3.படத்தின் காமடி :

அப்பாக்களெல்லாம் ஓட்டப்பந்தையத்தில ஓடி போயிட்டாங்களா ?

4.இந்த கேள்வியை வேற யார்கிட்டவும் கேக்கவேண்டாம் மக்கா :

அகி அவுங்க அம்மாவ கட்டிபுடிச்சி முத்தம் கொடுக்காம உனக்கு முத்தம் கொடுத்தா என்னோடயே இருப்பீயா ? (மீறி கேட்டு அடிவாங்கினா கம்பெனி பொறுப்பல்ல )

5.படத்தின் கரு என்ன ?

அம்மாங்களில் பசக்கார அம்மாவும் இருக்காங்க , வேசக்கார அம்மாவும் இருக்காங்க !? (இதுவா )

6. ஒரு மார்க் கேள்விகளில் தமிழ்’னு வந்த ஷேர் ஆட்டோவ ஓட்டி வந்த ட்ரைவர் யார்’னு கேட்டா நாசர்’னு தெளிவா சொல்லிடுங்க மக்காஸ்

7. மெண்டல் மாமாவின் கால்சட்டையை மாட்டி விட்டது அந்த விலைமகள் தான் அதுவும் பாதிப்படம் முடிந்த பிறகுதான் (ஆரம்பத்திலையே கெட்டி விட்டுருக்கலாம் )

படங்களை தந்த இணையத்துக்கு நன்றி

(இதுக்குமேலையும் மொக்கையா விமர்சனம் எழுதினா என்ன அடிக்காம விடமாட்டீங்கங்கிற ஒரே காரணத்துக்காக எழுதாம விடுறேன் )

நகரம் விமர்சனம்

நகரம் – நரகம்

நகரம் படம் மொக்கை , நகரம் படத்தில் என்ன கதை இருக்கிறது ? நகரம் பட்த்தை பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன ? என பல கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக்கு கொண்டே இதனை படிப்பீர்கள் என நம்புகிறேன் . நகரத்தை பற்றி ஏற்கனவே ஏகப்பட்டோர் பலவிதமான விமர்சனத்தை கொடுத்திருப்பார்கள் , இவன் என்ன எழுத போகிறான் என்ற எண்ணத்துடன் படிக்க போகும் நண்பர்களே உங்களுக்கு வணக்கம்  ,

நகரம் விமர்சனம் :



ஆரம்பத்திலையே ஹீரோவை ஸ்டெச்சரில் அள்ளிக்கொண்டு போக வைக்கிறார் டைரக்டரும், கதாநாயகனுமான சுந்தர்.சி , அப்புறம் காமடிங்கிற பேர்’ல நீதிமன்றத்தில் ஒரு சில நொடிகள் மொக்கையா வசனங்களோட ஆரம்பிக்கும் படம் நிதானமாக ஹீரோவை பெரிய ரவுடியாக காட்டும் , ஹீரோவை காதலித்தே ஆகவேண்டும் என்கிற கோட்பாடுடன் (இன்னும் தமிழ்படவுலகில் மாறலப்பா ) தனது என்ரீயை தரும் ஹீரோயின் . காவல் நிலையத்தில் நிலவும் இவர்கள் சந்திப்பு ஒரு சில நிமிட்த்து பார்வை பறிமாற்றத்திலையே காதல் வந்துவிட்ட்து என அடுத்த காட்சியில் தெளிவா சொல்லிருப்பார் டைரக்டர், புறாவை பறக்க விட்ட்தும் ஹீரோயின் ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு (லவ்ஸ் அங்கேயும் ஸ்டாட் ஆகிருச்சாம் ) தான் இங்கு வந்ததே உன்ன பிடிச்சிருக்குன்னு சொல்லுவதுக்குதான் என்று காதலை புது விதமாக சொல்லுவதும் (வெளங்கிடும்) , தன் காதலனிடம் இனிமேல் சண்டைபோடக்கூடாதுன்னு சத்தியம் வாங்குவதும் தனது நண்பனுக்காக சத்தியத்தை மீறின காதலனை சண்டை போடும் என்ற நோக்கமே இல்லமால் சண்டை போடும் ஹீரோயின் (இன்னும் ரொம்ப டீப்பா சொல்லிருக்கலாம்) படத்தில் கதை என்று குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை என்ற போதும் , உண்மையான நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதை நடித்து காட்ட முயற்சி செய்திருக்கும் சுந்தர்.சி, இன்னும் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும் , நல்ல ஒரு விசயத்தை ரொமப் அழுத்தமாக குறிப்பிடாத விசயம் தவறு , பட்த்தில் பிடித்த விசய்ம் ஒரு நண்பனுக்காக தனது காதலியுடனான கல்யாணத்தை விட்டு செல்வதுவும் ,காதலி கேக்கும் கேள்விக்கு எனக்கு நண்பன் தான் முக்கியமென்று செல்வதும் நண்பனே வாழ்வில் முக்கியமென உணர்த்திருக்கிறார் ,ஆனாலும் கடேசியில் தனது உடன் நண்பனே ஆப்பு வைக்கிறான் என்று தெரிந்தவுடனே அவனை தான் கொல்லவும் மனமில்லாமல் ,காப்பாற்றவும் எண்ணமில்லாமலும் வருவது சற்று குறைத்து மதிப்பிட வைத்திருக்கீறார் ,நீ என்னை மாதிரியே நண்பனுக்கா உயிரையே கொடுப்பன்னு நினைத்தேன் ,ஆனா நீ ஏமாத்திட்ட ,
டேய் உயிரே போனாலும் நண்பன விட்டுக்கொடுக்க கூடாது’னு அப்பாவி தனமா பேசும் சுந்தர்.சிய பாத்து நமக்கு சிரிப்பதா அழுவதான்னே தெரியதது சோகம் :(, கடேசியும் தனது இன்னொரு நண்பன் தனது கஞ்சிக்காக,வாழ்க்கைக்காக ,பணத்துக்காக எதிரியுடன் சேர்வது இயல்பு :)


வடிவேல் வெடிவேல் :


சில மாதங்களாய் ஆளை காணாமல் இருந்த வடிவேல் தனது டெர்ர் முகத்தை இதில் காண வைத்து அதிரடியாக சிரிப்பை மூட்டுகிறார் , என் ஏரியாவுக்கு வாடா , என் தெருவுக்கு வாடா , என் வீட்டுக்கு வாடா என அவருக்கே உரித்தான காமடி கலந்த பாடி லாங்வேஜில் சொல்லிருப்பது படத்துக்கு + பாயிண்ட் தானுங்க , மணி 3 ,லஞ்ச் டைம்,நாங்க அன்னத்துல கை வைக்கற டைம், யார் கன்னத்துலயும் கை வைக்க மாட்டோம்கடேசியாக கதாநாய்கன் வடிவேலின் குடியுருப்புக்கே வந்த பின் அவர் காலை பிடித்துக்கொண்டு கதறி கதறி அழுவதும் ,பின்பு நான் ஒன்னும் பைட்டர் கிடையாது ஒன்லி பாடிலாங்குவேஜ் தான்னு சொல்லுவதும் , அப்புறம் அவரு அதுதாங்க அந்த கதாநாயகரூஊஊ வீடு பாக்கத்தான் வந்திருக்கார்னு தெரிஞ்சவுடனே வீட்டுக்காரம்மாவை கேக்கபோய் வீட்டுக்காரம்மாவை இரு இரு உன்ன வச்சிக்கிறேன்னு பொதுவான வார்த்தையில் சொல்ல அதுக்கு அந்த அம்மா நான் ஏற்கனவே ரெண்டு பேரை வச்சிருக்கேனு சொல்லவும், ரெண்டு பேரா மாமீஈஈஇ நு இவ்வள்வு நாளா நமக்கு தெரியாம போச்சே’னு ஒரு இளிப்ப போடுவாரூஊஉ பாருங்க , அது வடிவேலுக்கே உரித்தானது  , பல பீதிகளுக்கு மத்தி’ல எங்கோ பிறந்து எங்கோ வளந்த உன்ன மாமி மூலம் கடவுள் என்னோட ரூம் மேட்டா ஆக்கிட்டான் ,God Is Great (போட்டு விட்டா வேடிக்கை பார்க்கிற இரு உன்ன வச்சிக்கிறேன்) , பிறந்தநாள் விழாவில் ஒரு முத்த்த்த தப்பான இட்த்தில் பதிவு செய்து தப்பிக்க நினைத்து ஓடும் போது ஒரு குரல் கேக்கும் , சத்தம் போடாம இவளை அவனுக்கே கல்யாணம் பண்ணி கொடுத்திருங்கனு மாமி சொல்லுவதும்,அதுக்கு அந்த பன் சே பெண் அப்படி ஒன்னு நடந்தா ஒன்னையும் கொல்லுவேன் ,அவனையும் கொல்லுவேன்னு பத்திரகாளியா மாறுவதை கேட்ட்தும் அப்படினா இந்த கல்யாணத்து சம்மதிக்க மாட்டேன்னு ஓடுவதும் ஜாலி தான் சத்தியத்த வாங்கிட்டு செத்துபோகும் முத்தக்காளை தம்பிக்காக அண்ணன்கள் இவரை பின் தொடர, பொண்ண கரெக்ட் பண்ணுவதுக்கு முன்னாடி ஆண்டியை கரெக்ட் பண்ணுவேனு உள்ள நுழைந்து நாய்க்கு பன்’ல ஜின்’ன ஊத்தி கொடுப்பதும் ,நாயோட வெளாடும் வெளையாட்டும் சூப்பர் , கடேசியா 100 திருட்டை போஸ்டர் அடிச்சி கொண்டாடும் விழுதுகள் இதுவரை கண்டுபிடிக்காத புது ட்ரெண்டு ,

ஸ்டைல் பாண்டியின் 100 திருட்டு வால்போஸ்டரில் இருந்த விபரம் :

வாழ்த்துகிறோம் !
எங்கள் ஆரூயீர் அண்ணன்
திருடர் குல திலகம் “ஸ்டைல் பாண்டி
அவர்களது
100 வது திருட்டு விழா
வெற்றி பெறவும் மேலும் பல வீடுகளில் திருடி 1000 வது திருட்டு விழாவை கொண்டாட மனமாற வாழ்த்துகிறோம்

இப்படிக்கு :
அண்ணனின் விழுதுகள்

இடம் : 8, சிவன் கோயில் தெரு ,
நாள் ;10:06:2010
நேரம் : இரவு 12 மணி


இத படிச்சவுடனே அழுதுக்கிட்டே , ஒரு தடவ கூட திருடல அதுக்குள்ள டோட்டல் தமிழ் நாடு போலிஸையே முன்னாடி கொண்டு நிப்பாட்டிடாங்க , கடேசியா தன்னுடைய முகம் பதித்த போஸ்டரை போலீஸ் வேனிலையே ஒட்டி வடிவேலை கடுப்பேத்தும் விதம் அழகுதான் :)

சோ முக்கியான விசய்ங்கள் :

இந்த படத்துக்கு நகரம் என்ற பெயருக்கு பதிலா தலைநகரம் Part2 என்று பெயர் வைத்திருக்கலாம் ,ஆனால் இதுவரை தமிழ் படங்களில் பார்ட் 2 வந்த்தில்லை எனபதினாலோ என்னவோ தலையை கத்தரித்து விட்டு நகரம் என்று நரக வேதனையை கெளப்பி விட்டுருக்கிறார்கள் ,டைரக்டரும் ,தயாரிப்பாளரும் :
வடிவேலை மறுபடியும் காமடிக்காக புக் பண்ணியிருப்பது சிறுவர்களை தங்கள் படத்தை பார்க்க வைக்க இழுப்பதுக்காவே ,இது குஸ்புவின் குசும்பு :)
முத்துக்காளையின் வசனம் , நீங்க தான் என்ன விட க்ளாமரா இருக்கீங்க , ஒரு சைடு’ல பாக்கும் போது ”வாழ்வே மாயம்” கமல் மாதிரி இருக்கீங்க’னு சொல்லும் போது இஸீட்’னு இங்கீலிபீசு’ல கேக்க பக்கத்துல இருந்த கருவாயர் புரியாம இஸீட்டு’னு சொல்லும் பகுதி காமடி

இலவச அட்வைஸ் :

நகரம் படமாக பார்ப்பதுக்கு பதிலா வடிவேலின் காமடி பகுதியை மட்டும் பார்த்தால் நேரமிச்சமாகும் :) சிரித்து வாழுங்கள்

ஹைலைட் :

வடிவேலுக்கு பெண் வேடம் அழகாக இருப்பது :) ,டேய் அதென்ன உள்ள வந்து ஆத்து’ல பாயுற மாதிரி பாயுற ’னு கடுப்பாகுவது காமடியே

படத்தில் வடிவேலுவை தவிர மற்ற பகுதிகளை சுருக்கி தந்திருக்க அட்வைஸ் பண்ணியிருக்கலாம் டைரக்டருக்கு , தயாரிப்பாளரும் , டைரக்டரின் பொண்ணாட்டியுமான ,கதாநாயகனின் உண்மை நாயகியுமான குஷ்பு :)

படத்தில் பாடல்கள் தேவையற்றவை , கதாநாயகனுக்கும் ,கதாநாயகிக்கும் சுத்தமா ஒத்து போகவில்லை இருவரில் யாராவது ஒருவரை தவிர்த்திருக்கலாம் , பழைய ப்ரியாவையே (தலைநகர ஹீரோயின்) போட்டுருக்கலாம்

நகரம் எனது பார்வையில் நரகமே ,

நினைத்தெல்லாம் நடந்துவிட்டால் !?

அட போங்கப்பா நான் நேத்து அனுகுண்டு போடனும்னு நினைச்சா எங்கப்பா சீனிவெடி வாங்கித்தாராரு , நான் சரவெடி போடனும்னு நினைச்சா சாட்டை வெடி வாங்கித்தாராரு .. நாம ஒன்னு நினைச்சா அங்க வேற ஒன்னு நடக்கு ... அப்படின்னு எத்தன குட்டி பையன்கள்
வருத்தமா இருப்பார்களோ அவிங்களுக்கு எனது மனமார்ந்த வருத்தங்களும் அப்புறம் தீபாவளி வாழ்த்துகளும்.



பாருங்க இவ்வுலகில் நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னுன்னு சொல்லாதவங்களே இல்லன்னு சொல்லலாம் ,,

ஏன்னா நான் இந்த இடத்திற்க்கு வருவேன்னு இங்க இருந்து போவும் போது நினைச்சி கூட பார்க்கல சொல்ல போனா இங்க வரக்கூடாதுன்னு நினைச்சிட்டு தான் போனேன் .. ஆனா வர வேண்டிய சூழ்நிலை ... வந்தாச்சி இருக்க வேண்டிய சூழ்நிலையா என்னன்னு இன்னும் தெரியல பார்ப்போம்.

கொஞ்ச காலமா எழுதாம விட்டுருந்த இந்த ப்ளோக்குகளையும் சில மாதங்களா பதில் போடாத குழுமங்களையும் ஒரு விசிட் அடிக்க நேரம் வந்திருச்சிங்கோஓஓ ....


ஒரு முக்கியமான செய்தி :
தீபாவளிக்கி செய்த பலகாரம் மிச்ச மீதியை கீழ போட மனசில்லாம உங்க கிட்ட கொடுத்து முடிக்க பார்ப்பாங்க ! அதனால எல்லோரும் கவனமா இருக்க வாண்டுஸ் ...

ஏதோ என்னால முடிஞ்ச டிப்ஸ்

“இப்ப தான் சாப்பிட்டேன்னு கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா இதையே சாப்பிட்டுப்பேனே .......னு ஒரு இழுவைய போட்டுடுங்க அவங்களும் திருப்தி நீங்களும் எஸ்கேப் எப்படி நம்ம ஐடியா !?

Weer gelukt. Pictures, Images and Photos


ஆ’ரம்பம்ம்ம்ம்ம்ம் ஆரம்பம் ......!

விதியா ? மதியா ? அ’வ’தியா ?

விதியா ? மதியா ? அ’வ’தியா ?



எழுதியவர் தாத்தா கல்பட்டார்


ஒரு கிராமத்துலெ பட்டி மன்றம் ஒண்ணு நடந்தீச்சு. கிராமம் இல்லியா? அங்கெ என்ன கலைவாணர் அரங்கமா கெடெய்க்குது பட்டி மன்றம் நடத்த. ஒரு வீட்டுத் திண்ணெலெ முக்காலி ஒண்ணுமேலெ நடுவர் குந்திகினாரு. அவருக்கு ரெண்டு பக்கமும் எதிர் எதிர் அணிங்க குந்திகினாங்க. ஜனங்கள்ளாம் தரெலெ குந்திகினாங்க.

நடுவர் சொன்னாரு,


"இன்னிக்கி நடடக்கப் போற பட்டி மன்றத்துக்குத் தலைப்பு 'எது பெரிசு? விதியா? மதியா? அவதியா' ங்கறது. ரெண்டு அணிக்கும் பேசுறதுக்காக பல ஊருங்கள்ளேருந்து நம்ம ஊருக்கு பெரியவங்க வந்திருக்காங்க. அவங்க என்ன சொல்றாங்க கேப்போம்" என்று.
ஒரு அணித் தலைவர் ஆரம்பித்தார், "நடுவர் அவர்களே, எதிர் அணிப் பேச்சாளர்களே. கூடி இருக்கும் பொது மக்களே! என்னெக் கேட்டா நான் விதிதான் பெரிசுன்னு சொல்லுவேன். எப்படின்னு கேக்குறீங்களா? இப்ப கூட பாருங்க நான் இன்னிக்கி இங்கெ வந்து பேசுவேன்னு நெனெக்கெவே இல்லீங்க. பக்கத்து டவுனுக்குப் போகலாம்னுதான் பஸ் ஏறினேங்க. வெய்ய வேளெ. நல்ல தூக்கம். பஸ்ஸு நின்னீச்சு. நம்மஊருதான் வந்திடிச்சாகும்னு எறங்கீட்டேங்க. பஸ்ஸும் போயிடிச்சு. அப்பலதான் பாத்தேன் கண்ணுக் கெட்டினதூரம் வரெ பொட்டல் காடுதான். ஒரே தாகம். பக்கத்துல தண்ணி கெடெய்க்கு;மான்னு கூட எறங்கினவங்களெக் கேட்டேங்க. அவங்க சொன்னாங்க ரெண்டு கல்லு தூரம் இந்த வண்டிப் பாதேலெயெ நடந்தா ஒரு கிராமம் வரும். அங்கெ தண்ணி கெடெக்கும்னு. நான் நெனெக்கெவே இல்லீங்க எங்கெ வருவேன். ஒங்க முன்னாடி பேசுவேன்னு. அத்யுதாங்க விதி. நீங்களே சொல்லுங்க விதி பெரிசா இல்லியான்னு"



எதிர் அணித் தலைவர் படக்கென்று எழுந்தார். "அய்யா நடுவரே, மகா ஜனங்களே, இப்போ பேசினாரே விதிதான் பெரிசு. நான் இங்கெ இன்னிக்கி வருவேன். ஒங்க முன்னடி பேசுவேன்னு நெனெக்கெலே. விதியினாலெ தான் இங்கெ வந்து சேந்தேன்னு. அவரு பஸ்ஸு டிக்கெட்டு வாங்கும் போது நான் வரிசெலெ அவரு பின்னாடிதான் நின்னுகிட்டு இருந்தேன். இந்த கிராமத்துப் பேரெச் சொல்லிதான் டிக்கெட்டு கேட்டு வாங்கினாருங்க. அது மட்டும் இல்லீங்க. பஸ்ஸுலெ ஏறி ஒக்காந்ததும் பக்கத்து சீட்டுலெ இருந்தவரு கிட்டெ சொன்னாரு, "ஐயா நான் பஸ்ஸுலெ ஏறினாத் தூங்கிடுவேன். கொட்டப் பட்டி ஸ்டாப்பு வரத்துக்கு முன்னாடி என்னெக் கொஞ்சம் எளுப்பி வுட்டுருங்கனு சொன்னாருங்க இப்பொ சொல்லுங்க சாமார்த்தியமா விதிதான் பெரிசுன்னாரே அவரு அது சரியா இல்லெ சரியான நேரத்துலெ சரியான தகவலெக் கொடுத்த என்னோட மதி பெரிசான்னு. நீங்க மதியாலெ விதியெ வென்ன நளாயினி, சாவித்திரி இவங்க கதெயெக் கேட்டதில்லீங்க?"
முதலில் பேசியவர் ஆக்ரோஷத்தோட எளுந்து சொன்னாரு, "என்னெயப் பத்தின சொந்த தகவல்களெ இங்கெ எதிர் அணித் தலைவர் தனக்கு சாதகமா உபயோகிச்சுக் கிட்டதுக்கு நான் அவரெ வன்மையாகக் கண்டிக்கிறேன்."
"அமைதி அமைதி" என்றபடி மேலும் கீழுமாக கையெ அசெச்சுகிட்டு நடுவர் தலெயெ ரெண்டு கையாலேயும் அளுத்திப் புடிச்சுகிட்டு சொன்னாரு,

"அய்யா விதியும் பெரிசில்லெ மதியும் பெரிசில்லெ. ஒங்க சண்டெயெத் தீத்து வெய்க்க நான் படுற அவதிதான் பெரிசு"ந்னு.
கூட்டத்தில் இருந்த ஒருத்தரு தன் ஒரத்த குரலிலெ ஆரம்பிச்சாரு, "அய்யா ந...ந...நடுவரே வி...வி...விதியும் பெ...பெ...பெரிசில்லெ. ஒங்க அவதியும் பெ...பெ...பெரிசில்லெ. நி...நி...நீங்கள்ளாம் கு...கு...குந்திரிக்கீங்களே அந்தத் தி...தி...திண்ணெதான் பெ...பெ...பெரிசு. ஏன்னா நா...நா...நாங்க இங்கெ சு...சு...சுடுற த...த...தரெலெ கு...கு...குந்திகீறோம். நி...நி...நீங்க சொ...சொ...சொகமாமாத் தி...தி...திண்ணேலெ கு...கு...குந்திகீறீங்க."

ன்னு.
என்னங்க எதுனாச்சியும் புரிஞ்சீச்சுங்களா?


நடராஜன் கல்பட்டு


க(ங்குலி)ஜினி....

க(ங்குலி)ஜினி....


இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த ஜோக் இது...


சவுரவ்: என் பேர் சவுரவ். முழுப்பேரு சவுரவ் கங்குலி. நான் இந்தியன் கிரிக்கெட் டீம் கேப்டன்.

டாக்டர்: அவரால 15 நிமிசத்துக்கு மேலே எந்த கிரவுண்டுலயும் தொடர்ந்து ஆடமுடியாது. யாரோ அவரோட தலையில கிரிக்கெட் பந்தை கொண்டு பலமா தாக்கியிருக்காங்க!! இத நாங்க மருத்துவ ரீதியா Short Term Batting Lossனு சொல்லுவோம்...

இதுக்கு மேல நம்ம சரக்கு.......




கேள்வி : எவ்வளவு நாளா இவருக்கு இந்த பிரச்சனை இருக்கு ?

டாக்டர்: ஒரு ஒன்றரை வருசமா இந்த வியாதி இருக்கு.

கேள்வி : அது சரி...எப்பவும் ஒரு பெரிய பையை வச்சினு சுத்துறாரே..அதுல என்னதான் இருக்கு ?

டாக்டர்: அதுவா...அது அவர் டீம்'காக விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்து எடுத்த வீடியோ,போட்டோக்கள்,வாங்கின கோப்பைகள்,அவரோட 'daily fitness report' எல்லாம் வச்சி இருக்கார்.அடிக்கடி BCCI commitee'க்கு போய் விளக்கம் குடுக்க வேண்டி இருக்கர்தால எப்பவும் பையோட அலையராரு...

கேள்வி : இதென்ன..டாக்டர்....உடம்பெல்லாம் ஒரே நம்பர்'சாவும்,சில பேரோட பெயர்களுமாவும் இருக்கு ??

டாக்டர்: அவர் இதுவரைக்கும் ஆடின மேட்ச்,எவ்வளவு ரன் அடிச்சியிடிகாரு,எத்தன முறை 'டக்' அடிச்சிருக்காரு,எவ்வளவு முறை ICC'யால தடை வாங்கினாரு...அதெல்லாம்
மறக்காம இருக்க பச்சை குத்திட்டு இருக்காரு.

கேள்வி : அப்ப அவருக்கு எதுதான் நினைவிருக்கும்?

டாக்டர் : அவர் குடும்பம்,வழக்கமா பண்ற வேலைகள்,ம்.ம்....ம்ம்...கோச்'சோட சண்டை போடுறது,சட்டைய கழற்றி சுத்துறது.அப்புறம் அந்த 'incident' நடந்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் அதெல்லாம் மறக்கமாட்டார்...இன்னைக்கும் அவர்தான் 'கேப்டன்'னு நினைச்சிட்டு இருக்கார்னா பாத்துக்கோங்க...

கேள்வி : இவர் பிரச்சனை தீர என்னதான் வழி ?

டாக்டர் : அது BCCI,ICC' கிட்டதான் இருக்கு.டீமோட நிரந்தர கேப்டனா இவர அறிவிக்கனும்.
ஒரு ரன் எடுத்தா நூறு ரன் எடுத்த மாதிரினு சொல்லனும்.இவர் பேட்டிங் பண்ணும் போது,இவரே விருப்பபடும்போதுதான் அம்பயர் அவுட் குடுக்கனும்.இதெல்லாம் நடந்தா இவர் பழையப்படி ஆகிடுவார்...

கேள்வி : 10 digit'la ஒரு நம்பர் இருக்கே...மொபைல் நம்பர்'னு நினைக்கிறேன்...யாரோட நம்பர் டாக்டர் அது ?

டாக்டர் : ஓ..நீங்களும் பாத்துடீங்களா அத... அது நக்மா'வோட நம்பர். இவர்தான் இப்படி ஆயிட்டாரே,நானாவது ட்ரை பண்ணலாம்'னு பாத்தேன்...பாம்பே தாதாக்களுக்கும்,கொல்கத்தா தாதா(dada)க்கும்தான் லக் இருக்கு....எனக்கு லக்' இல்ல.

வினாடி-வினா !

விஞ்ஞானத்தில் வினாடி-வினா



ஆசி¡¢யர் : தேவமூர்த்தி

1. ஆற்றின் ஒரு கரையில் இருந்து ஒலி எழுப்பினால் அது மறு கரையில் இரு முறை ஒலி ஏற்படுத்துவது ஏன்?

நீர் ஓர் ஒலி கடத்தி, காற்றைவிட வேகமாக ஒலியைக் கடத்தும் சக்தி வாய்ந்தது. எனவே ஒரு கரையில் எழுப்படுகிற ஒலி மறு கரையில் நீ¡¢ன் மூலமாக முதலாவதாகவும் காற்றின் மூலமாக இரண்டாவதாகவும் ஒலிக்கிறது.

2. தண்ணீரை விட அதன் நுரை வெண்மையாகத் தொ¢வது ஏன்?

தண்ணீ¡¢ன் மேல் விழும் ஒளிக் கதிர்கள் நீ¡¢ல் ஊடுருவி உள்ளே சென்றுவிடும். ஆனால் நீ¡¢ன் நுரை மீது விழும் ஒளிக்கதிர் பிரதிபலிக்கிறது. எனவே நீ¡¢ன் நுரை வெண்மையாகத் தொ¢கிறது.

3. மனித உடலில் உள்ள இரத்தத்தின் வகைகள் யாவை?

இரத்தத்தை நான்கு வகைகளாகப் பி¡¢த்துள்ளனர். அவை A, B, AB, O என்பனவாகும்.

4. நமது எடையில் இரத்தத்தின் எடை என்ன விகிதத்தில் உள்ளது?

நமது உடலின் எடையில் இரத்தத்தின் எடை 9% ஆகும்.

5. நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?

சர்ஜேம்ஸ்வாட் என்பவர் நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்தார்.

6. பருமனான கம்பி அல்லது மெல்லிய கம்பி இவற்றில் அதிக சுருதியை ஏற்படுத்த எந்த வகைக் கம்பி பயன்படுத்தப் படவேண்டும்?

மெல்லிய கம்பி பயன்படுத்தப்பட வேண்டும்.

7. சுரமானி என்றால் என்ன?

இழுத்துக் கட்டப்பட்டுள்ள கம்பிகளின் அதிர்வுகளைக் கண்டறியப் பயன்படும் கருவி சுரமானி என்பதாகும்.

8. தண்ணீ¡¢ல் மூழ்கும் இரும்புக் குண்டு பாதரசத்தில் மிதப்பது ஏன்?

தண்ணீ¡¢ன் அடர்த்தி எண் இரும்புக் குண்டின் அடர்த்தி எண்ணைக் காட்டிலும் குறைவு. எனவே இரும்பு குண்டு நீ¡¢ல் மூழ்குகிறது.

பாதரசத்தின் அடர்த்தி எண் இரும்புக் குண்டின் அடர்த்தி எண்ணைவிட அதிகம். எனவே பாதரசத்தில் இரும்புக் குண்டு மிதக்கிறது.

9. மிக விரைவில் ஆவியாகும் திரவம் எது?

ஆல்கஹால்

10. மனித உடலில் உள்ள எலும்புகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?

மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206

11. தங்கம், பாதரசம் இவற்றின் அடர்த்தி எண்களைக் கூறுக?

தங்கத்தின் அடர்த்தி எண் 19.3 கிராம். பாதரசத்தின் அடர்த்தி எண் 13.6 கிராம்.

12. கடலின் ஆழம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

கடலின் அடிப்பகுதியில் ஒருவெடிகுண்டு வெடிக்கச் செய்வர். அந்த வெடியின் ஒலிகரையை வந்தடையும் நேரத்தை ஹைடிரோ போன்கள் என்ற இயந்திரத்தில் பதிவு செய்து கணக்கிட்டு கடலின் ஆழத்தைக் கணக்கிடுகின்றனர்.

13. ரயில் எஞ்சினின் முன் உள்ள விளக்குகளின் ஒளி அதிக தூரம் வரை தொ¢கிறது. சாதாரண மின் விளக்குகள் அவ்வளவு தொலைவு தொ¢வதில்லையே ஏன்?

ரயில் எஞ்சின் முன் விளக்குகளில் குழி ஆடி பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை ஆடிகள் தம் மீது விழும் ஒளியைப் பிரதிபலித்து வெகு தூரம் வரை பாய்ச்சும் தன்மை உடையது.

14. சிறிய இரும்புகுண்டு தண்ணீ¡¢ல் மூழ்கி விடுகிறது. ஆனால் மிகப் பொ¢ய கப்பல் நீ¡¢ல் மிதக்கிறது. அது எப்படி?

சிறிய இரும்புகுண்டு தண்ணீ¡¢ல் மூழ்கும்போது அது வெளியேற்றும் தண்ணீ¡¢ன் அடர்த்தி எண்ணைவிட இரும்பு குண்டு அதிக அடர்த்தி உடையது. எனவே இரும்பு குண்டு நீ¡¢ல் மூழ்குகிறது.

பொ¢ய கப்பல் நீ¡¢ல் மிதக்கும் போது அதனால் வெளியேற்றப்படும் தண்ணீ¡¢ன் அடர்த்தி கப்பலின் எடையைவிட அதிகம். எனவே கப்பல் மிதக்குகிறது.

15. மயக்கமடைந்தவர்களைத் தரையில் கிடத்தும் போது தலை சற்று தாழ்வாகவும், உடல் சற்று மேலாகவும் கிடத்த வேண்டும் ஏன்?

தலைப் பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாக வேண்டும் என்பதற்காக. ரத்த ஓட்டம் அதிகமானால் விரைவில் மயக்கம் தெளிவு பெறும்.

16. ஏ¡¢, குளங்களில் காணப்படும் நீ¡¢ன் மேற்பகுதி வெப்பமாக இருக்கும். ஆனால் நீ¡¢ன் அடிப்பகுதி குளிர்ச்சியாகவே இருக்கும் ஏன்?

நீர் ஓர் அ¡¢தில் கடத்தி, எனவே வெப்பம் நீ¡¢ன் மேற் பகுதியிலேயே ஆவியாகி சென்று விடுகிறது. ஆகவே நீ¡¢ன் அடிப்பகுதி குளிர்ச்சியாக இருக்கிறது.

17. பூமியின் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் யார்?

சர்ஐசக் நியூட்டன் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி பூமியின் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார். இவர் 1642 ஆம் ஆண்டு லிங்கன்ஷயர் எனும் இடத்தில் பிறந்தார்.

18. கோடை காலத்தை விட குளிர்காலத்தில் நாம் அதிகம் சிறுநீர் கழிக்கிறோம் ஏன்?

கோடை காலத்தில் வெப்பத்தின் காரணமாக கழிவு நீர்வியர்வையாக வெளியேறுகிறது. குளிர்காலத்தில் அதிக வியர்வை ஏற்படுவதில்லை. எனவே குளிர் காலத்தில் நாம் அதிகம் சிறுநீர் கழிக்கிறோம்.

19. காற்று வேகமானி (Anemo meter) என்றால் என்ன? அதன் பயன் யாது?

காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படும் கருவிக்கு காற்று வேகமானி என்று பெயர். இது வானிலை ஆராய்ச்சி நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது.

20. வானில் ஏற்படும் இடி, மின்னல் பூமியை வந்தடையும் போது இடி ஓசை இரண்டாவதாகவும் மின்னல் ஒளி முதலாவதாகவும் வந்தடைவதேன்?

ஒலியின் வேகத்தைவிட ஒளி (மின்னல்) பாயும் வேகம் அதிகம். எனவே இடி இரண்டாவதாகவும் மின்னல் முதலாவதாகவும் பூமியை வந்தடைகின்றன.

21. மனித உடலில் மார்பறையையும் வயிற்றறையையும் பி¡¢க்கும் சுவா¢ன் பெயர் என்ன?

உதரவிதானம்.

22. எலும்பு மண்டலம் என்பது யாது? அதன் பயன் என்ன?

உடலில் அடங்கியுள்ள எல்லா எலும்புகளையும் மொத்தமாக எலும்பு மண்டலம் என்பர். இவை உடல் உறுப்புகளின் பாதுகாப்பிற்கும், ஆதரவு இயக்கம் ஆகியவற்றிற்கும் பயன்படுகின்றன.

23. தசைகளின் பயன் யாது?

உடல் உறுப்புகளின் அசைவிற்கும், இயக்கத்திற்கும் இணைப்பிற்கும் பயன்படுகிறது.

24. உணவு ஜீரண மண்டலம் என்பது யாது? அதன் பயன் யாவை?

வாய், தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், சொ¢ப்பு நீர் சுரப்பிகளும் உணவு ஜீரண மண்டலம் ஆகும். இவை உணவு ஜீரணிக்கவும், உட்கிரகிக்கவுமே உதவுகின்றன.

25. சிறுநீரகங்கள் சா¢யான முறையில் வெளியேறுவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

சிறுநீர் வெளியேறுவதால் ரத்தத்தின் காரத் தன்மை காக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள கழிவு நீர் போக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள யூ¡¢யா, யூ¡¢க் அமிலம் போன்ற கழிவுப் பொருட்களும் நச்சு கிருமிகளும் வெளியேற்றப்படுகின்றன. உடலில் இரத்தத்தின் அளவை மற்றும் வெப்ப அளவைச் சீராகப் பாதுகாத்து வைக்கிறது.

26. கொதிக்க வைத்த பிறகு குளிர்ச்சியான நீ¡¢ல் மீன் உயிர் வாழ முடியாது ஏன்?

நீரைக் கொதிக்க வைக்கும்போது மீன் சுவாசிகத் தேவையான ஆக்ஸிஜன் அந்நீ¡¢ல் இருந்து வெளியேறி விடுகிறது. எனவே மீன் உயிர் வாழ முடிவதில்லை.

27. சளி பிடித்திருக்கும் போது காது சா¢யாகக் கேட்பதில்லையே ஏன்?

யூஸ்டேனியன் எனும் குழாய் சளிப் படலத்தினால் அடைக்கப்படுகிறது. எனவே செவிப்பறையின் காற்றழுத்தம் இருபுறமும் சமமாக இராது. இது செவிப்பறையின் அதிர்வை பாதிக்கிறது. எனவே சளி பிடித்திருக்கும் போது காது சா¢யாக கேட்பதில்லை.

28. இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

மரங்கள், காற்றில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன. மனிதர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. எனவே இரவு நேரங்களின் மரத்தின் கீழ் தூங்கக்கூடாது.

29. நாம் உலகில் காணும் பொருட்கள் எவ்வகை நிலைகளில் காணப்படுகின்றன?

மூன்று நிலைகளில் காணப்படுகின்றன. 1. திண்ம நிலை 2. நீர்மநிலை 3. வாயு நிலை

30. அணு அமைப்பைப் பற்றி உலகுக்குச் சா¢யானபடி எடுத்துக் கூறிய அறிவியல் மேதை யார்?

ரூதர்·போர்டு

31. எலக்ட்ரான் பாதைகளைப் பற்றி ஆராய்ந்த அறிவியலார் யார்?

பா¢, லூயிஸ், லாங்யூர்.

32. மின்னாற் பகுப்பு விதி முறைகளைக் கண்டறிந்தவர் யார்?

மைக்கேல் பாரடே

33. அல்லி வட்டம் எத்தனை வகைப்படும்?

நான்கு வகைப்படும்.

34. மூட்டு என்றால் என்ன?

மனித உடலில் இரண்டும் அதற்கும் மேற்பட்ட எலும்புகள் ஒன்றாக இணைந்திருப்பது மூட்டு ஆகும்.

35. இரும்பின் வகைகளைக் கூறு?

இரும்பை மூன்று வகைகளாகப் பி¡¢க்கலாம்.
அவை யாவன 1. தேனிரும்பு 2. வார்ப்பிரும்பு, 3. எ·கு இரும்பு.




எனது பிறந்த நாளும் தமிழ்2 நண்பர்களும் !

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தங்கம் !

கோகுல் குமரன் அண்ணன் :

நாளை (மார்ச் - 9) பிறந்த நாள் காணும் அன்புத் தம்பி சொக்கு என்ற கோல்ட் மாரி என்ற தங்க மாரியை பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சொக்கு!

பிரசாத் வேணுகோபால் :

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சொக்கத்தங்கம்...
இமலாதித்தன் :

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...! ?ui=2&view=att&th=1273ecda9f0cb923&attid=0.1&disp=attd&realattid=ii_1273ecda9f0cb923&zw

சுரேஷ் :

இனிய மலர்ந்த நாள் நல்வாழ்த்துக்கள் அன்புத் தம்பி!!! தங்க மாரியப்பன் (சொக்கு)
?ui=2&view=att&th=1273ecd7676077c5&attid=0.1&disp=attd&realattid=ii_1273ecd7676077c5&zw
அஹமது சுபைர் :

பாசக்காரப் பய “மாரி கோல்ட்”க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..


திருமூர்த்தி.கே

பல்லாண்டு வாழ்க

இளைய ராஜா :

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

கந்தவேல் ராஜன் மாம்ஸ் :

தங்கமனசுகார சொக்கனுக்கு(916) இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...........
ஆன்ரசன் :

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!

செந்தில் :

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்


அன்புள்ள பாட்டி சாந்தா மற்றும் தாத்தா நடராஜன்

சொக்கத் தங்கத்துக்கு வாழ்த்துக்கள் சொல்லலாமே யொழிய இனிப்புகள் அனுப்ப முடியாது. மாரி ஒங்க அமெரிக்கன் உணவு விடுதிலேந்து ரெண்டு ஸ்வீட் எடுத்து சாப்பிடுங்க எங்க சார்பா.

ஜோஸப் குரியன் மாம்ஸ் :

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொக்கு.
வீ. ரமேஸ் (இட்லி சித்தப்பூஊஊ)

இனிய மலர்ந்த நாள் வாழ்த்துகள் சொக்கு

ராகேஸ் :
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

திருமூர்த்தி :

இனிய வாழ்த்துகள் சொக்கு

பாஸ் பாலாஜி பாஸ்கரன் :

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கம்.

ரோபோ (ஆனந்த கிருஷ்ணன் )

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சொக்கு


ஜாரியா (என்னோட மவ)
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சொக்கு அப்பாவுக்கு!
சார்லஸ் (குரு, மழைகாதலன்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிஷ்யா

மாமன்னர் ராஜாராஜன் அண்ணே :

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி..
ஆயிரம் பிறை கண்டு அற்புதமாய் வாழ்ந்திடுங்கள்..
உங்களது hyper activeness கண்டு, பல நேரம் நான் மகிழ்ந்ததுண்டு...
மணமானாலும், இப்படியே இருக்க இறைவனை வேண்டுகிறேன்..
இன்று போல் என்றும் வாழ்ந்திடுங்கள் தம்பி..

அனல் (எ) A.S. முகம்மது அபுபக்கர் சித்திக் )

பாலைவனத் தோழன் சொக்கு என்ற தங்க மாரிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

அருண்குமார் (ஓமக்குச்சி அருண்)

வாழ்த்துக்கள் கோல்டு !!!
~ காமேஷ் ~

வாழ்த்துக்கள் கோல்ட்ஜி.

பாலாஜி ராமானுஜம் (அத்திம்பேர் ) (ரூல்ஸ் ராமானுஜம் இல்லயே)
ஹாப்பி பர்த்டே

வாணி (எ) கவிதா :

Wish You Happy Birthday

தேனு தேனு தேனு ஈஸ்வரம் :

சொக்கு வாழ்த்துகள்டா

இறவா இவனுக்கு இனியாச்சும் நல்ல புத்தி கொடு


வாழ்க வளமுடன் :

பல்லாண்டு வாழ்க வளமுடன்

நம்ம GOLD MAN

பனைமர பாபூ ,நண்பர் பாபு :
இனிய பிறந்தநாள்நல்வாழ்த்துகள் நண்பா.


ராஜா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்க மாரி !


சுப்பு ரமணி

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சொக்கத்தங்கம்...


சுரேஷ் :

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சொக்கு!


மீசைக்கார துரை ஐயா

சகோதரன் சொக்குவுக்கு இனிய வாழ்த்துகள்


அச்சு (பல்லி)

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சொக்கு.


வினோத் தல

இநிய பிறந்தநாள் வாழ்த்துகள் சொக்கத்தங்கம் ,


சாதிக் அலி :

?ui=2&view=att&th=12744b96d5de61db&attid=0.1&disp=attd&realattid=ii_12744b96d5de61db&zw


மகி மாம்ஸ்

மனசுக்குள்ள வாழ்த்துகள் சொன்ன மஹி மாம்ஸீக்கும் நன்றி , மத்த அனைவருக்கும் நன்றி

ஆதாம் பாட்ஷா

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

http://msp326.photobucket.com/albums/k411/hortibob/birthday_cake.gif


கிச்சு ஐயா :

நான் கூட இன்னைக்குதான் பார்த்தேன் தங்கம்.....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கம்...




வாழ்த்துரைக்கும் நல்ல நெஞ்சம்
யாவருக்கும் வாய்ப்பதில்லை ,
வாழ்த்துச்சொன்ன உங்களுக்கு
நன்றிகள் பலகோடி, கூடவே
நலம் வாழ வாழ்த்துக்கள்.


இப்படிக்கு

கோல்ட்மாரி , தங்கமாரி , சொக்கத்தங்கம் , சொக்கு ,மாரி கோல்ட் , தங்கமாரியப்பன் :
(இது எல்லாமே என்னோட பேரு தானுங்கோ )

பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் !!!.


முக்கிய குறிப்பு :

எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தனி செய்தியில் சொன்ன நபர்களுக்கும் , FACE BOOK ல் சொன்னவர்களுக்கும் , வாழ்த்துகள் சொல்லாதவர்களுக்கும் எனது நன்றிகள்


ONLINE SBI BANK க்கும் நன்றி





நன்றிகள்




மாஸ்டர் சச்சினின் உலக சாதனை

மாஸ்டர் சச்சினின் உலக சாதனை 200







குவாலியர்: குவாலியரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

முதலில், சயீத் அன்வர் மற்றும் கோவன்ட்ரி ஆகியோர் இதுவரை வைத்திருந்த ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ரன்னான 194 என்ற இலக்கைத் தாண்டி புதிய சாதனை படைத்தார் சச்சின்.

அதைத் தொடர்ந்து அடுத்த சில பந்துகளில் இரட்டை சதத்தையும் தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார் சச்சின்.

147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சயீத் அன்வர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை கடந்த ஆண்டு ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி சமன் செய்தார்.

இந்த சாதனையைத்தான் இன்று சச்சின் உடைத்தார். அத்தோடு நில்லாமல் புதிய உலக சாதனையையும் படைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார்.


http://thatstamil.oneindia.in/news/2010/02/24/sachin-slams-ton-as-india-pile-runs.html


Scoreboard


India 401-3 (50) Runs Balls 4s 6s SR
V Sehwag c Steyn b Parnell 9 11 1 0 81.82
S Tendulkar not out 200 147 25 3 136.05
D Karthik c Gibbs b Parnell 79 85 4 3 92.94
Y Pathan c Villiers b Merwe 36 23 4 2 156.52
*MS Dhoni not out 68 35 7 4 194.29
S Raina
V Kohli
R Jadeja
P Kumar
A Nehra
S Sreesanth
Extras: 9 b:0 lb:3 nb:1 w:5
Total: 401-3 (50) | Curr. RR: 8.02
FOW:V Sehwag (25-1, 3.5), D Karthik (219-2, 33.2), Y Pathan (300-3, 41.1)




HIGHEST INDIVIDUAL ODI SCORES , சாதனைகள்
200* Sachin Tendulkar, India v South Africa 2010 200 அவுட் இல்லை சச்சின் டெண்டுல்கர் , இந்தியா & சவுத் ஆப்பிரிக்கா 2010
194* Charles Coventry, Zimbabwe v Bangladesh 2009 194 அவுட் இல்லை சார்லஸ் ஜிம்பாவே & பங்களாதேஸ்
194 Saeed Anwar, Pakistan v India 1997 194 அவுட் சயித் அன்வர் பாக்கிஸ்தான் & இந்தியா
189* Viv Richards, W Indies v England 1984 189 அவுட் இல்லை விவ் ரிச்சேர்ட் வெஸ்ட் இண்டிஸ் & இங்கிலாந்து
189 Sanath Jayasuriya, Sri Lanka v India 2000 189 அவுட் சனத் ஜெயசூர்யா ஸ்ரீலங்கா & இந்தியா

(சிலர் இருக்கலாம் ,ஆனாலும் நம்ம தல )

183 அவுட் சவுரவ் கங்குலி இந்தியா & ஸ்ரீலங்கா


உலகத்தை திரும்பி பார்க்க வைத்த சாதனை நாயகன் சச்சினுக்கு வாழ்த்துகள்

பேபி ஷாமிலி

BABY ஷாமிலி ,

பேபி ஷாமிலி ,

ஷாமிலி

Remember Baby Shamili of Anjali fame? Yes, that Manirathnam flick!
Well, many producers and directors wanted this girl, now grown up, to make her debut in their films but Shamili’s family had turned down the offers. Shamili is none other than sister of Shalini, Ajith Kumar’s wife.

The family that had said no till today, now wants Shamili to make her debut. And Fazil, who earlier introduced Shalini, will now introduce Shamili in a yet-to-be named Malayalam film. Will Shamili shine as much as her sister did?


Shamili acted in super hit films like 'Anjali', 'Jagadeka Veerudu Athiloka Sundari' and many more. Her acting prowess was known to people when she was very young. Recently she was spotted in a function in Chennai. When enquired it was said that she is about to hit silver screen with a film in the combination of Siddhartha.

We already know that her brother Rishi is an actor on big screen. And Shalini stopped acting after marriage. Now Shamili also enters the acting league in her family.

Filmography

Actress:

1. Kandukondain Kandukondain (2000)
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
2. Harikrishnans (1998) .... அம்மாளு
ஹரிகிருஷனாஸ்(1998)
3. Chinna Kannamma (1993) (as Baby Shamili)
சின்னக்கண்ணமா (1993)
4. Joker (1993) (as Baby Shamili)
ஜோக்கர்(1993
5. Malootty (1992) (as Baby Shyamili) .... Malootty
6. Kilukkampetti (1991) (as Baby Shamili) .... Chikkumol
7. Pookkalam Varavayi (1991) .... Geethu
8. Jagadeka Veerudu Attilokasundari (1990) (as Baby Shamili)
9. Anjali (1990) (as Baby Shamili) .... அஞ்சலி

நன்றி :http://earlytollywood.blogspot.com/2008/01/baby-shamili.html

வளர்க :வெள்ளித்திரை

கேம் விளையாட

கேம் விளையாடுங்க டென்சன குறையுங்க :





ஆபிஸ்’ல தலைவழியா வாங்க தலைவழிய போக்க ஒரு மருந்து கேம் விளையாடலாம்

தரவிறக்கம் செய்தும் விளையாடலாம் , ஆன்லைன்லையும் விளையாடலாம் ,

இந்த கேம் ரொம்ப நல்லா இருக்கும் ,கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்


இது தரவிறக்கம் பண்ணி விளையாடBest Old Games

இந்த கேம் தானுங்க நான் ரொம்ப வருசமா தேடிக்கிட்டு இருந்தேன் இப்ப மாட்டிக்கிச்சி , ம்ம் ஆன்லைன்ல விளையாடலாம் விளையாடுங்கங்க

PRINCE OF PERSIA



நன்றிங்கோ...

அரசியல் காமடி

அரசியல் காமடி ,

இதுக்கு நானு என்ன சொல்லனும் நினைக்கிறிங்க ? நான் என்னத்த சொல்ல எப்பயாச்சும் நடந்திச்சினா ஓகே எப்பவுமே இப்படி நடந்தா என்னத்த சொல்ல , சரி நீங்களே எதாச்சும் சொல்லிட்டு போங்க



ஏனுங் உங்க கருத்துக்களை இங்க பதிவு செய்திட்டு போகங்கங்க !

நன்றி : தினமலர்

வெண்ணிலா கபடிக்குழு பரோட்டா காமடி

மக்காஸ் ,


நம்ம புரோட்டோ ஆள் ,இங்க பாருங்க தூக்குவாழியோட நிக்கிறார்

இந்த காமடி எனக்கு ரொம்ப பிடிச்ச காமடி , கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன் , பாருங்க

50 பரோட்டா சாப்பிட்டா சாப்பிட்ட பரோட்டாவுக்கும் காசு கொடுக்க வேணாம் , 100 ரூபாய் நாம அந்த வெயிட்டருக்கிட்ட இருந்து வாங்கிக்கிடலாம் , அப்படி சாப்பிடலைனா சாப்பிட்ட பரோட்டாவுக்கும் காசு கெட்டனும் அந்த வெயிட்டருக்கிட்ட 100 ரூபாயும் கொடுக்கனும் இதுதானுங்க போட்டி ,

செமையா இருக்கும் ,அவரு நாலு பரோட்டா வச்சிட்டு சால்னா எடுக்க போயிட்டு திரும்பி வந்து பார்ப்பார் பரோட்டாவே இருக்காது , அவரு கேப்பாரு எங்கடா பரோட்டா, ஆமா நீ வர்ர வரைக்கும் வச்சிக்கிட்டா இருப்பாங்க போயா போய் எடுத்திட்டு வா ,இந்தாயா சால்னாவ வச்சிட்டு போ ந்னு சொல்லி ஆரம்பிப்பாரு பாருங்க,

கடேசி ,

சாப்பாட்டு ராமன் : ம்ம் போதும் ஐம்பது பரோட்டா சாப்பிட்டாச்சி ,

வெயிட்டர் : இல்லடா 42 பரோட்டாதான் சாப்பிட்டு இருக்க

சாப்பாட்டு ராமன் :ஐம்பது சாப்பிட்டாச்சிணே

வெயிட்டர் : டேய் 42தாண்டா , வேணும்னா கோட்ட எண்ணி பாருடா ,

சாப்பாட்டு ராமன் : எண்ணே சாப்பிட்ட எனக்கு தெரியாத ஐம்பது பரோட்டா சாப்பிட்டாச்சிணே

வெயிட்டர் : டேய் வச்ச எனக்கு தெரியாதா ?

சாப்பாட்டு ராமன் : ம்ம்ம்முடியாது முடியாது நீங்க கல்லாட்ட ஆடுறிங்க ,நான் சாப்ட்டேன் ,முதல எல்லா கோட்டையும் அளிங்க , நான் முதல இருந்து சாப்பிடுதேன் , டேய் அப்புக்குட்டி நீ போய் கோட்ட போடுடான்னு சொல்லுவாரு பாக்கனும்











இந்த காமடிய நேரடியா யூடிப்ல பார்க்க புரோட்டா காமடி இங்க கிளிக்குங்க


அப்படியே சிச்சிக்கிட்டே கருத்து சொல்லிட்டு போங்களேன்

ஒலிம்பிக் போட்டிகள் நேரடியாக காண

ஒலிம்பிக் 2010




இந்த தடவ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது , அதனை நேரடியாக பார்க்க ஒலிம்பிக் , இங்க போங்க , பாருங்க


பாருங்க பாருங்க பாருங்க

கலாமின் சிந்தனையில் இருந்து

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் சிந்தனையில் இருந்து



புத்தகம் தான் சிறந்த வழிகாட்டி


1.நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.

2.இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்! இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!

3.அல்லாவின் ஆணை இல்லாமல் எதுவுமே நமக்குக் கிடைக்காது! அவரே நமது பாதுகாவலன்! என் மகனே! அல்லாவிடம் நம்பிக்கைக் கொள்!

4.கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை உழைப்பிற்கான ஒய்வை! பாதைக்கான ஒளியை!

5.ஆண்டவனின் கருணை என்றும் முடிவில்லாதது. அது நிரந்தரமானது!

6.இந்தச் சக்தி உங்களுடைய லட்சியங்களை எட்டுவதற்கும் கனவுகளை நனவாக்குவதற்கும் உதவி செய்யும்.

7.சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

8.ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது, தான் காண்பதைத் தவறாக எடைப்போடக்கூடும். பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.

9.தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.

10.நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

11.பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள்.

12.வெற்றிக்கும் தோல்விக்கும் இதையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.

13.காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!

14.கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

15.தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.

16.வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு! அதிகமான உணர்வதலில், ஏராளமாகக் கற்றுக் கொள்வதில், நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு!

17.நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உணைமையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!

18.வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

19.அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.

20.தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு. தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!

21.நமது ஆரோக்கியத்திற்கு கஷ்டங்கள் அவசியம் தேவை! நமது உடலுக்குள்ளேயே நல்ல விதமான உணர்வு பூர்வ சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாவிட்டால் வெற்றியடைந்த பிறகு அதை அனுபவித்து மகிழ்ச்சியடைய முடியாமல் போய்விடும். என்பதை நாம் உணர வேண்டும்!

22.வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.

23.தேவையான அளவிற்கு சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் அதிகாரமும் உடைய ஒரு தலைவரால்தான் தமது அணியை வழிநடத்திச் செல்லும் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்ற இயலும்.

24.வேலைநாட்களில் அன்றாட கூச்சல், குழப்பம் சந்தடியெல்லாம் அடங்கியதும் ஆற, அமர சிந்தித்து அடுத்து வரப்போகும் புத்தம் புது நாளை எதிர்கொள்வதற்கு உன்னை நீ செம்மையாகத் தயார் செய்து கொண்டால் எதிர்காலத்தில் நீ வெற்றிகரமான தலைவர்தான்!

25.எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவர்ம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்!

26.கால எல்லையைத் தவிர வேறு எந்த வித்த்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.

27.சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும், தன்னைத்தானே அறிந்துக் கொள்ளும் திறனும், நிறைந்த மக்களைக் கொண்டிருக்கும் தேசத்தை எந்த தேசவிரோத அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க முடியாது.

28.ஒருபக்கம் இருநூறு முன்னூறு ஹீரோக்கள்; மறுபக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நாறு கோடி மக்கள்! இது மாற்றப்படவேண்டிய நிலவரம்.

29.ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்!

பிப்ரவரி 14 காதலர் தின வாழ்த்துகள் !!!!

காதலர் தின வாழ்த்துகள் ,

உண்மையா காதலிப்போருக்கும் ,உண்மையா காதலில் இருந்து பிழைத்த்தும் பிழைக்க முடியாம இருப்பவர்களுக்கும் , உண்மையாவே காதலிக்க நினைத்துக்கொண்டே நாட்களை போக்கிக்கொண்டு இருப்போருக்கும் , எனது உண்மையான காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்



சென்னையில் காதலர் தினம் :





உலகநாடுகள் முழுவதும் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. மேலை நாடுகளில் இருந்த கலாச்சாரம் நம்நாட்டிலும் சமீபகாலமாக வேகமாக பரவிவருகிறது. ஒவ்வொரு முக்கிய நாட்களும் சிறப்பு தினமாக கொண்டாடப்படும் வேளையில் காதலர்களும் வேலன்டைன்ஸ் டே என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். தமிழக கலாச்சார பண் பாட்டிற்கு எதிராக இந்த தினம் இருந்தாலும் கூட இன்றைய இளைஞர்கள் மத்தியில் காதலர்தினம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கண்களில் உருவாகும் காதலை போற்றும் விதமாக இத்தினம் காதலர்கலால் மகிழ்ச்சியுடன் இன்று கொண்டாடப்படுகிறது. காதலர்கள் செல்போன் மூலமாகவும், வாழ்த்து அட்டைகள் மூலமாகவும் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். எஸ்.எம்.எஸ். வழியாக விதவிதமான இதயம் தாங்கிய அம்பு படங்களுடன் காதலர்கள் தகவல்களை அனுப்பி மகிழ்ந்தனர். சென்னையில் காதலர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். மெரீனா கடற்கரையில், காலை முதல் இளம் காதலர்கள் குவிய தொடங்கினர். கடற்கரை யோரம் தனித்தனியாக அமர்ந்து காதலர் தின வாழ்த்துக்களை கூறினார்கள். காதலர்தின பரிசாக காதலன் காதலிக்கு கொடுக்க, பதிலுக்கு காதலியும் காதலனுக்கு அன்பளிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ரோஜா மலரை கொடுத்து வாழ்த்து கூறிய காதலர்களையும் கடற்கரையில் காண முடிந்தது. காதலிகள் திகைக்க கூடிய வகையில் பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து மனதை நெகிழச் செய்தனர். மெரீனா கடற்கரை முழுவதும் காதலர்கள் ஆங்காங்கே உட்கார்ந்து குதுகலத்தில் ஈடுபட்டனர். இதேபோல பெசன்ட் நகர் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலையிலும் காதலர்கள் கூட்டம் களை கட்டியது.

காந்திமண்டபம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட மாநகராட்சி பூங்காக்கள் இன்று காதலர் களால் நிரம்பி வழிந்தது. காதலர்கள் இருசக்கர வாகனத்தில் ஆங்காங்கே சீறிபாய்ந்து செல்வதையும் கடற்கரைகளில் ஓடி விளையாடியதையும் காண முடிந்தது.

காதலர்கள் எல்லைமீறி போகாமல் இருக்க போலீசார் நகரின் பல இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



காதலுக்காக சுட்ட கவிதை ஒன்னு போடுறேன் இங்கன பாருங்க ,

அன்புப் பரிசும் ஆசை முத்தமும்
இன்ப பெருக்கால் இதயச் சுத்தமும்
துன்பம் நீங்கி துயரம் மறப்பதும்
காதலர் தினத்தின் மகிமை அன்றோ


பெண்ணைப் படைத்த பிரமன் கூட
என்னை ஏன் தான் படைத்தானோ - அட
கண்ணை படைத்த இறைவன் பின்னர்
பெண்ணை ஏன்தான் படைத்தானோ


கண்ணையும் பெண்ணையும்
படைத்ததன் காரணம்
காதலின் பின்பே புரிந்ததன்றோ - அது
காதலர் தினத்தில் தெரிந்ததன்றோ




உண்மைக் காதலர் அனைவருக்கும் - எனது
உளமார்ந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

ராஜிவ்காந்தியின் கொலை வழக்கு

ராஜிவ்காந்தியின் கொலை வழக்கு ,




முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, கடந்த 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த படுகொலை தொடர்பாக, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன், நளினி உள்ளிட்ட 41 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது

ராஜிவ்காந்தியின் கொலை வழக்கு சார்பான சில விசயங்கள் இங்கே தொகுத்து பிடிஃப் வடிவில் தந்துள்ளேன்,


இதனை தரவிறக்கம் செய்ய ராஜிவ் காந்தி , கிளிக்கவும்



.

உலகிலையே மிகப்பெரிய பத்து கார்கோ விமானங்கள் :

உலகிலையே மிகப்பெரிய பத்து கார்கோ விமானங்கள் :

English : தமிழ்

1. Antonov An-225 -ஆன்டோனோ -225
2. Airbus A380F -ஏர்பஸ் அ380ஃப்
3. Antonov An-124 -ஆன்டோனோ -124
4. Boeing 747 Large Cargo Freighter- போயிங் 747
5. McDonnell Douglas MD-11F - மெக்டோனால் டக்ளஸ் 11ஃப்
6. Ilyushin IL-96T - இலுசியன் -96 ட்
7. Antonov An -22 - ஆன்டோனோ- 22
8. Ilyushin IL-76 MF/டப் - இலுசியன் -76
9. Airbus A300-600 Super Transporter- ஏர்பஸ் -அ300-600
10. Antonov An-70 - ஆன்டோனோ - 70

வாங்க அந்த விமானத்தின் படத்தை மாத்திரம் பார்ப்போம் , ரெண்டு மூனு நாளுக்குள்ள இந்த கேப்பாக்குட்டி சே கேப்பாசிட்டி எவ்ளோ’நு போடுறேன்


1. ஆன்டோனோ 225 :

ப்பாஆஅ எவ்ளோ பெரிய விமானம் பாருங்க , இதெல்லாம் வரும் போது பக்கத்து ரன்வேலையும் எந்த விமானத்தையும் அனுப்ப முடியாது போல இருக்கே !! ( இதுக்குன்னு தனி விமான நிலையம் கட்டி இருப்பாங்களோ )







2. Airbus A380F -ஏர்பஸ் 380ஃப்









3. Antonov An-124 -ஆன்டோனோ -124

இந்த விமானத்தின் முன்பகுதி திறக்கப்பட்டு கார்கோ ஏற்ப்படும் : (ஒரு ஊரையே ஏத்திட்டு போகலாம் போலையே )









4. Boeing 747 Large Cargo Freighter- போயிங் 747

இந்த விமானத்தின் உற்புற பகுதி : (எவ்ளோ பெருசு )









5. McDonnell Douglas MD-11F - மெக்டோனால் டக்ளஸ் 11ஃப் :


இந்த வகையான விமானங்கள் ஃபெடெக்ஸ் (FedEx ) கம்பெனியில் அதிகம் :











6. Ilyushin IL-96T - இலுசியன் -96 ட்











7. Antonov An-22 - ஆன்டோனோ- 22











8. Ilyushin IL-76 MF/TF - இலுசியன் -76

இது இந்திய ராணுவத்தால் உபயோகிக்கப்படும் ஒரு விமானம் :











9. Airbus A300-600 Super Transporter- ஏர்பஸ் -300-600











10. Antonov An-70 - ஆன்டோனோ - 70

இந்த வகை விமானத்தின் இஞ்சின் வடிவமைப்பு :
















படங்கள் : இணையம்

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

இந்த ப்ளோக்’ல எழுதியது !

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?