இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

வாங்க.... ஆங்கிலம் கத்துக்கலாம்!

பாடம் – 11


Past Perfect Continuous Tense

பாஸ்ட் பெர்ஃபெக்ட் கண்டினியூவஸ் டென்ஸ், பாஸ்ட் பெர்ஃபெக்ட் டென்ஸ் மாதிரி தான். கடந்த காலத்தில் நடந்த ஒரு ஆக்‌ஷனுக்கு முன்னாடி நடந்த நீளமான ஆக்‌ஷனைச் சொல்றதுக்கு இந்த டென்ஸைப் பயன் படுத்தலாம்.

ஒரே கன்ஃப்யூஷனா இருக்கா…. அப்போ இந்த உதாரணத்தைப் பாருங்க:

Ram started waiting at 9am. I arrived at 11am. When I arrived, Ram had been waiting for two hours.

இப்படி 3 வாக்கியமா சொல்ற கருமாந்திரத்தை கீழே சொல்றது மாதிரி ஒரே வாக்கியத்தில் சொல்லலாம்.

Ram had been waiting for two hours when I arrived.

9 மணியிலிருந்து 11 மணி வரை காத்திக்கிட்டுருந்தான் –ங்கிறது நீளமான நிகழ்ச்சி. Arrived – க்கு முன்னாடி நடந்த நிகழ்ச்சி.

இன்னும் ஒரு சில உதாரணங்களைப் பார்க்கலாம்:

John was very tired. He had been running.
I could smell cigarettes. Somebody had been smoking.
Suddenly, my car broke down. I was not surprised. It had not been running well for a long time.
Had the pilot been drinking before the crash?



சில சமயங்களில் இதை ப்ரெசெண்ட் பெர்ஃபெக்ட் கண்டினியூவஸ் டென்ஸ் மாதிரி நினைச்சுக்கலாம். என்ன ஆக்‌ஷன் நடக்கிற நேரம் இப்போ இல்லை. கடந்த காலத்தில். அவ்வளவு தான்.


இதுக்கு கீழே உள்ள உதாரணத்தைப் பாருங்க:


ராமை 11 மணிக்கு சந்திக்கிறீங்க. ராம் உங்க கிட்டே சொல்றாரு:
"I am angry. I have been waiting for two hours.


இதே விஷயத்தை அப்புறமா உங்க நண்பர்கள் கிட்டே நீங்க இப்படி சொல்வீங்க:
"Ram was angry. He had been waiting for two hour


இப்போ இந்த டென்சுக்கான ஃபார்மட்டைப் பார்க்கலாம்:

====================================================================
Person Singular Verb Formation Plural Verb Formation
====================================================================

First I had been going We had been going

Second You had been going You had been going

Third He had been going They had been going
She (or)
It Two or
Ram (Or) more names
Seetha (or) combined
====================================================================






====================================================================
Person Singular Verb Formation Plural Verb Formation
====================================================================

First I had not been going We had not been going

Second You had not been going You had not been going

Third He had not been going They had not been going
She (or)
It Two or
Ram (Or) more names
Seetha (or) combined
====================================================================


பாடம் - 12
Simple Futre Tense
ஒரு செயலைச் செய்யுறதுக்கு உங்க கிட்டே எந்த ஒரு திட்டமும், முடிவும் இல்லை. பேசிக்கிட்டிருக்கும்போது உடனடியா முடிவு எடுக்கிறீங்க. அப்போ சிம்ப்பிள் ஃப்யூச்சர் டென்ஸை உபயோகிக்கணும்.
உதாரணத்துக்கு:
Hold on. I'll get a pen.
We will see what we can do to help you.
Maybe we'll stay in and watch television tonight.


இதிலே, பேசுறதுக்கு முன்னாடி எந்த ஒரு ப்ளானும் உங்க கிட்டே கிடையாது. எப்போ பேசுறீங்களோ அப்போ தான் அந்த முடிவை எடுக்கிறீங்க. இந்த மாதிரி தருணத்தில் இந்த டென்ஸை உபயோகிக்கணும்.


To think – இந்த வார்த்தைகளை நாம இந்த டென்சோட அடிக்கடி உபயோகிக்க வேண்டி வரும்.
உதாரணம் பாருங்க:
I think I'll go to the gym tomorrow.
I think I will have a holiday next year.
I don't think I'll buy that car.


எதிர்காலத்தில் நடக்கப் போறதை ஒரு ஜோசியம் சொல்றது மாதிரி சொல்லணும்னா, இந்த டென்சை உபயோகப்படுத்தணும். மறுபடியும் இதிலே குறிப்பிட்ட திட்டம் எதுவும் கிடையாது. என்ன நடக்கும் நு நீங்க நினைக்கிறீங்களோ அதைத்தான் சொல்றீங்க.
உதாரணம் பருங்க:
It will rain tomorrow.
People won't go to Jupiter before the 22nd century.
Who do you think will get the job?


இதுக்கு ஒரே ஒரு விதி விலக்கு இருக்கு. வெறும் Be வெர்பை வச்சு மட்டும் சொல்லணும்னா, அங்கே உறுதியான புரோகிராமா இருந்தாக் கூட உபயோகிக்கலாம்:
பாருங்க:
I'll be in London tomorrow.
I'm going shopping. I won't be very long.
Will you be at work tomorrow?


அப்போ, உறுதியான புரோகிராமா இருந்து அதை எதிர்காலத்தில் சொல்லணும்னா எப்படிச் சொல்றது. அங்கே ப்ரெசெண்ட் கண்டினியூவஸ் டென்சை உபயோகிக்கணும்.


பாருங்க எதிர்காலத்தை, நிகழ்காலத்தில் எப்படி சொல்றதுன்னு – பின்னே எதுக்கு நாங்க திட்டுறோம் இந்த மொழி ஒரு வீணாப்போன மொழின்னு. உதாரணத்தைப் பாருங்க:
We're eating in a restaurant tonight. We've already booked the table.


டேபிளை புக் பண்ணீட்டாரம். இன்னிக்கு நைட் சாப்பிடப் போறார். (எதிர்காலம் – ஆனா சொல்றது Present Continuous Tense)
They can play tennis with you tomorrow. They're not working.


அவங்களுக்கு வேலை ஒன்னும் இல்லை. நாளைக்கு உங்கூட டென்னிஸ் விளையாடுவாங்க.
When are you starting your new job?
உன்னோட புது வேலையை எப்போ ஆரம்பிக்கப் போற?

சரிங்க. ஓரளவுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இனிமே, ஃபார்மட்டைப் பார்க்கலாம்.


====================================================================
Person Singular Verb Formation Plural Verb Formation
====================================================================

First I will go We will go

Second You will go You will go

Third He will go They will go
She (or)
It Two or
Ram (Or) more names
Seetha (or) combined
====================================================================


====================================================================
Person Singular Verb Formation Plural Verb Formation
====================================================================

First I will not go We will not go

Second You will not go You will not go

Third He will not go They will not go
She (or)
It Two or
Ram (Or) more names
Seetha (or) combined
====================================================================

பாடம் – 13

Future Continuous Tense

எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடக்கப் போகிற செயலைச் சொல்றதுக்கு நாம ஃப்யூச்சர் கண்டினியூவஸ் டென்சை உபயோகிக்கிறோம்.

உதாரணம் பாருங்க:
I will be playing tennis at 10am tomorrow.
They won't be watching TV at 9pm tonight.
What will you be doing at 10pm tonight?
What will you be doing when I arrive?
She will not be sleeping when you telephone her.
We 'll be having dinner when the film starts.
Take your umbrella. It will be raining when you return.


அவ்வளவு தாங்க. ரொம்ப சிம்ப்பிள். வேற உபயோகம் இல்லை. இப்போ ஃபார்மட்டைப் பார்க்கலாம்.


PersonSingularVerb FormationPluralVerb Formation
FirstIwill be goingWewill be going
SecondYouwill be goingYouwill be going
ThirdHe (or) She (or) It (or) Ram (or) (Seetha)Will be goingThey (or) Two or more names combinedwill be going


PersonSingularVerb FormationPluralVerb Formation
FirstIwill not be goingWewill not be going
SecondYouwill not be goingYouwill not be going
ThirdHe (or) She (or) It (or) Ram (or) (Seetha)will not be goingThey (or) Two or more names combinedwill not be going



சில நேரங்களில் will – க்குப் பதில் shall வரும். அதுவும் I, We க்கு மட்டும்.


நாங்க படிக்கும்போதெல்லாம், I, We –க்கு shall தான் போடணும் நு சொன்னாங்க. இப்போ யாரும் shall போடுறதில்லை. எல்லா இடத்திலும் will தான் உபயோகிக்கிறாங்க.

பாடம் – 14

Future Perfect Tense

இந்த் டென்ஸை புரிஞ்சிக்கிறது ரொம்ப ஈஸி. எதிர்காலத்தில் நடந்து முடிஞ்சிருக்கிற செயலைச் சொல்றதுக்கு இந்த டென்ஸைப் பயன்படுத்துறோம். அவ்வளவு தான். இப்போ உதாரணத்தைப் பார்க்கலாம்:


The train will leave the station at 9am. You will arrive at the station at 9.15am. When you arrive, the train will have left.


நீங்க 9 மணிக்கு ஸ்டேஷனுக்கு வருவீங்க. ஆனா, டிரைய்ன் 9.15 க்கு கிளம்பி போயிரும். அப்போ நீங்க ஸ்டேஷனுக்கு வரும்போது, டிரைய்ன் கிளம்பி போயிருக்கும்.

The train will have left when you arrive.


இப்போ புரியுதுங்களா? இல்லையா, அப்போ இந்த உதாரணத்தைப் பாருங்க. இது டக்குன்னு புரியும்:

நாளைக்கு நைட் 9 மணிக்கு தண்ணி அடிச்சு முடிச்சிருப்போம்.

We will have finished drinking by 9.00 pm tomorrow.

இன்னும் சில உதாரணங்கள்.
You can call me at work at 8am. I will have arrived at the office by 8.
They will be tired when they arrive. They will not have slept for a long time.
"Mary won't be at home when you arrive."
"Really? Where will she have gone?"

இந்த டென்சுக்கான ஃபார்மட்டைப் பார்க்கலாமா?







இன்னும் ஒரே ஒரு டென்ஸ் தான் பாக்கி இருக்கு. அதை நாளைக்கு முடிச்சிட்டோம்னா டென்ஸ் முடிஞ்சாச்சு.


பாடம் – 15
Future Perfect Continuous Tense

இந்த டென்சுக்கு நிறைய உபயோகம் இல்லை. எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு உபயோகம் தான்.
எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னாடி நடந்து முடிஞ்ச ஒரு நீளமான ஆக்‌ஷனைச் சொல்றதுக்கு இந்த டென்சை உபயோகப் படுத்தணும்.

உதாரணம் பாருங்க:
I will have been working here for ten years next week.


அடுத்த வாரம் ஆச்சுன்னா நான் இங்கே 10 வருஷமா வேலை பார்த்துக்கிட்டிருந்துப்பேன்.
He will be tired when he arrives. He will have been travelling for 24 hours.


அவன் வரும்போது ரொம்ப களைப்பா இருப்பான். ஏன்னா அவன் 24 மணி நேரமா பிரயாணம் பண்ணிக்கிட்டிருந்திருப்பான்.

இப்போ இந்த டென்சுக்கான ஃபார்மட்டைப் பார்க்கலாம்:


அவ்வளவு தாங்க. இன்னிக்கோடு டென்சு முடிஞ்சது.

இனிமே நீங்க ஆங்கிலத்தில் எந்த வாக்கியத்தைப் பார்த்தாலும் இது எந்த டென்ஸ்-னு சொல்லத் தெரியணும்.

ஆக, இன்னிக்கு உங்களுக்கு ஒரு வெர்பை 12 வகையில் வித்தியாசமா உபயோகிக்கத் தெரியும்.
நாளைக்கு இதோட சம்மரியை ஒரு எக்ஸெல் அட்டாச்மெண்ட்டா போடுறேன்.

அப்புறம் இது வரைக்கும் வந்த இந்த டென்ஸ் பாடங்களை பி.டி.எஃப்-ஆ ஆக்கியும் போடுறேன். அதையும் ஒரு தடவை ரிவிசன் மாதிரி படிங்க.

இது வரைக்கும் நாம பார்த்தது செய்வினை மட்டும் தான். இனிமே, இந்த 12 டென்சும் செயப்பாட்டு வினையா மாறும் போது எப்படி வெர்ப் ஃபார்மட் இருக்கும். அதையும் பார்க்கணும். தமிழில் அவ்வளவு சுலபமா யாரும் செயப்பாட்டு வினையை உபயோகிக்க மாட்டோம். ஆனா, ஆங்கிலத்தில் ரொம்ப சுலபமா எல்லாரும் உபயோகிப்பாங்க.

Raja did this work – னு சொல்றதுக்குப் பதிலா This work was done by Raja னு சொல்வாங்க. ரெண்டும் அர்த்தம் ஒன்னு தான். ஆனா did –ங்கிற வெர்ப் பேஸிவ் வாய்சில was done ஆ மாறுது. இதை முறைப்படி நாளையிலிருந்து பார்ப்போம்.

சரிங்களா?

ஜெயித்துக் காட்டுவோம்!


ஜெயித்துக் காட்டுவோம்!

வெற்றிப்படிகளில்
முதல் அடியை
எடுத்து வையுங்கள்.
இன்றே!

உங்களால் முடியும் !

நீங்கள்தான் No.1

1)தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்!
-ஆபிரஹாம் லிங்கன்.

2)சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்!
- கன்பூசியஸ்.

3)தொண்ணூற்றொம்பது சதவிகித உழைப்பும், ஒரு சதவிகித உள்ளக்கிளர்ச்சியும் சேர்ந்ததுதான் மேதைத் தன்மை எனப்படுவது!
-தாமஸ் ஆல்வா எடிசன்.

4)தன்னம்பிக்கை இருந்தால் தைரியம் தன்னால் வரும்!
-எமர்சன்.

5)வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரண்டு கருவிகள் சிக்கனம், சேமிப்பு.
- ஹெர்பெர்ட்.

6)வரலாற்றைப் படைக்கும் மனிதர்கள் அதை எழுத அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை.
-மேட்டர்னிக்.

7)பிரச்சினைகளையும் நோய்களையும் சமாளித்து வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையே அனைத்தையும் வெற்றிகரமாக மாற்றித்தரும்.
- ஹெச்.ஷீல்லர்.

8)முன்னேற்றத்தை நோக்கி அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை,
ஒரு அடி எடுத்து வையுங்கள்.
நெப்போலியன் –கில்.

9)எல்லாம் போய் விட்டது என்று சோர்ந்து போய் விடாதீர்கள்.எந்த மனிதனாலும் வெல்ல முடியாத மன வலிமை இருக்கிறது. அதை மூலதனமாக வைத்துக் கொண்டு உழையுங்கள். வளம் பெறலாம்.
-மில்டன்.

10)பேனாவைக் கையில் பிடித்தவர்களெல்லாம் புத்திசாலிகளில்லை. பிடிக்காதவர்களெல்லாம் முட்டாள்களுமில்லை.
- சாமுவேல் ஜான்சன்.

11)திறமையால் ஜொலிக்க முடியவில்லைஆ
கவலையே படாதீர்கள் முயற்சி முயற்சி
முயற்சியால் வெற்றிக்கனியைத் தட்டிப் பறிக்கலாமே
-டேவ் வின் பாம்

12)கடுமையான் உழைப்பு, மற்றவர்களையும் மனிதர்களாக மதிக்கும் தன்மை ஆகியவற்றால் நாம் உயர முயல வேண்டும்.

13)பிறருடன் ஒத்து வாழ நம்மை பக்குவப்படுத்துவதே கல்வியின் முக்கிய நோக்கம்.

14)அமைதிக்கு உழைப்பதே, உலகிற்கு நாம் செய்யும் கடமை.

15)பெரிய லட்சியங்கள் இருந்தால் மட்டும் போதாது. அவற்றை அடைய நாம் உழைத்தாக வேண்டும்.
- எஸ்.ராதாகிருஷ்னன்.

16)எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித்தான் வய்ப்புகள் தேடி வரும்.
-ராஜாஜி.

17)அதிர்ஷ்டத்தை நம்பி வாழாமல் ஒழுக்கத்தை நம்பி வாழ்ந்தால் மகத்தான காரியங்கள் செய்யலாம்.
-காந்திஜி.

18)படிப்பின்றி அறிவு மட்டும் இருப்பது ஆபத்தாக முடியும். அறிவின்றி படிப்பு மாத்திரம் இருப்பது பயனற்றதாகும்.
- ஸ்டான்லி ஜான்சன்.

19)மனிதனின் வாழ்க்கையை அவனது மனசாட்சி நிர்ணயிப்பதில்லை.ஆனால் சமூக வாழ்க்கைதான் அவனது மனசாட்சியை நிர்ணயிக்கிறது.
-கார்ல் மர்க்ஸ்.

20)யாருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காக துயரத்தில் அழுமோ அவன் ஒருவனே மகாத்மா ஆகிறான்.

21)எழுமின்! விழிமின்! கருதிய கருமம் கைகூடும் வரை நில்லது செல்மின்!

22)பலமே வாழ்வு! பலமின்மையே மரணம்!

23)தன்னை அடக்கிப் பழகிக் கொண்டவன் வெளியே உள்ள எதற்கும் வசப்பட மாட்டான்.

24)தம்மிடம் நம்பிக்கை கொண்டவர்களே பெருமையையும்,வளமையையும் எய்தியுள்ளனர்.

25)இவ்வுலகம் கோழைகளுக்கல்ல. வீரர்களுக்கே!
- சுவாமி விவேகனந்தர்.

26)முயற்சிதான் பாராட்டுக்குரியது!
“நாம் அடையும் பொருள் புகழ் தருவதில்லை. அதற்கான முயற்சிதான் புகழைத்தருகிறது.
நாம் பந்தயத்தின் முடிவில் அடையும் கோப்பையை யாரும் வெற்றி என்று பாராட்டுவதில்லை.
ஒடி அடைந்த வேகத்தை வெற்றி பெற முயற்சி செய்த நமது மனத்துணிவைத்தான் பாராட்டுகிறார்கள்.
- சுவாமி சின்மயானந்தர்.

27)தவம் செய்வோரைக் காட்டிலும் நடு நிலை மனமுடையவன் சிறந்தவன்.
ஞானிகளிலும் அவன் சிறந்தவனாக கருதப்படுகிறான்.
கர்மிகளிலும் அவன் சிறந்தவன். அகவே, நடு நிலை மனமுள்ளவராக மாறி விடுங்கள்.
-பகவத் கீதை.

28)எதைப் பற்றியும் பெருமையுடன் கூறிக் கொள்ளாதே. ஊன்னுடைய செயல்களே பேசட்டும்!
- ஷ்ரி அன்னை.

29)பகைவர்களை விடச் சிறந்த மனிதர்களாய் ஆகிவிடுவது தான் அவர்களை வஞ்சம் தீர்க்கும் சிறந்த வழியாகும்.
-டயோஜினீஸ்.

30)எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே; யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கமுடன் செய்.
-புத்தர்.

31)செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொருத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலந்தான் அவனுக்குக் கிட்டும்.
- நபிகள் நாயகம்.

32)மனிதன் தானாக நிமிர்ந்து நிற்க வேண்டும்; மற்றவர்கள், அவனைத் தூக்கி நிமிர்த்தி வைக்கக் கூடாது.
-அரேலியஸ்.

33)எந்தப் பணியாயினும் அதனுடன் ஒன்றிவிட்டல் மட்டுமே அது பயனுடையதாய் அமையும்.
-எலியட்.

34)உறுதியுள்ளவன், உள்ளத்தில் திடமுள்ளவன், உலகை, தனக்கு வேண்டிய முறையில் அமைத்துக் கொள்கிறான்.
-கதே.

35)தளராத இதயத்தை பெற்றுள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாது என்பது எதுவுமே இல்லை.
- கிரேஸிஸ்.

36)உறுதியுள்ள உத்தமருக்கு உலகம் வளைந்து கொடுக்கிறது.
-கரம்ப்பே.

37)உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்.
-கார்லைஸ்.

38)பெரிய காரியங்கள், வல்லமையால் நிறைவேறவில்லை; விடாமுயற்சியினாலேஎயே நிறைவேறியுள்ளன.
-ஜான்சன்.

39)வெற்றிக்கு காரணம் திறமையைக் காட்டிலும் ஊக்கமே அவசியம்.
-பக்ஸ்டன்.

40)நாம் , வழவேண்டும் என்பது முக்கியமன்று; வாழ்க்கைக்கு அப்பால் நமது பெயர் பொறிக்கப்பட வேண்டும் அதுதான் முக்கியம்.
-அனந்சியோ.

41)நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியானது நம்பிக்கை. பொறாமையும் சந்தேகமும் இல்லாமலிருத்தல். நல்லவர்களாக இருக்கவும் நன்மையை செய்ய முயற்சி செய்யும் எல்லாருக்கும் உதவி புரிதல் ஆகிய மூன்று விஷயங்களும் மனிதனுக்கு மிக அவசியமான ஒன்று.
- சுவாமி விவேகானந்தர்.

42)மன நோய்களை நீக்கும் மூலிகைகளுள் சிறந்தவை உழைப்பு, வியர்வை.
-குரோஷியா.

43)துணிகரமான தொடக்கம் பாதி வெற்றி என்றே அர்த்தம்.
-பிரெஞ்சுப் பழ மொழி.

44)உழைப்பு உடலைப் பலப்படுத்தும். கஷ்டங்கள் மனதைப் பலப்படுத்தும்.
-பிளமிங்.

45)வாழ்க்கையில் தன்னால் சாதிக்க முடியாதவற்றை ஓர் எழுத்தாளன் தன் நூல்கள் மூலம் செய்து காட்டுகிறான்.
-பட்சே.

46)உண்மையான நம்பிக்கை இருக்குமானால், மலையைக்கூட அசைத்து விடலாம்.
47)யாருக்கும் தோல்வி இல்லாத வெற்றிக்கே சமாதானம் என்று பெயர்.

48)உண்மையை சில சமயம், அடக்கி வைக்க முடியும். ஆனால் அதை ஒடுக்கி விட முடியாது.

49)கடுமையான உழைப்பே நமக்கு செல்வத்தைத் தரும்; நமது வறுமையை ஒழிக்கும்.

50)முன்னேற்றம் மனிதர்களின் பண்பால் வரையறுக்கப் படுவது.

51)சோதனைகளில் இருந்து விடுபட்டு, வெற்றி வாகை சூட்ட வேண்டுமாயின், அத்ற்கு தனிப் பண்பும், திண்ணிய ஆற்றலும் தேவை.

52)நாம் கஷ்டப்பட்டு, மனசாட்சிக்கு நியாயமாக பக்தி சிரத்தையுடன் உழைத்தாலன்றி வெற்றி பெற முடியாது.

53)மனித குல முன்னேற்றத்திற்காக மனிதன், உழைக்கிற இடமே உயர்ந்த கோவிலாகும்.

54)ஆணைகள் பிறப்பித்து செல்வத்தை உண்டாகி விட முடியாது; உழைப்புதான் செல்வத்தைப் படைக்கும்.
- நேருஜி.

55)தாங்கள் வெல்லலாம் என்று நம்புகிறவர்களே வெற்றி அடைய முடியும்.
-வர்கில்.

56)கண்ணியமான மனிதன், எப்போதும் நீதியாகவே சிந்தனை செய்கிறான்.
- ரூஸோ.

57)பாராட்டு, உன்னதமான உள்ளங்களை மேலும் ஊக்குவிக்கும்.
-கோல்டன்.

58)மரியாதையாகப் பேசுவதும், நடப்பதுவும் செலவில்லாத செல்வங்கள்.
- செர்வான்டிஸ்.

59)நன்றாகவும், கவனமாகவும் செய்யப்படும் காரியங்களைப் பற்றி அஞ்ச வேண்டியதில்லை.
- ஷேக்ஸ்பியர்.

60)புகழ் – வீர செயல்களின்–னறுமணம்.
- சாக்ரடீஸ்.

61)வலிமையும், உணர்ச்சியும் சாதிப்பதை விட, பொறுமையும், காலமும் அதிகமாய் சாதித்து விடும்.
- லாபன்டெயின்.

62)கவலையற்ற இதயம் நீடித்து வாழும்.
- ஷேக்ஸ்பியர்.

63)வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள், அழிவில்லாத வழ்க்கையை அறிந்து கொள்வது.
-பென்.

64)அன்பும், ஆற்றலும் இணைந்து பணியாற்றும்போது அற்புதமான படைப்பை எதிர்பார்க்கலாம்.
-ஜான் ரஸ்கின்.

65)அளவற்ற சக்தி, ஊக்கம், தைரியம், பொறுமை ஆகியவை நம்மிடம் இருக்க வேண்டும். ஆப்போது எந்த மகத்தான செயலையும் நம்மால் சாதிக்க முடியும்.
- நபிகள் நாயகம்.

66)உன் சொற்களைக் கொண்டு உன் உணர்ச்சிகள் மதிக்கப்படும்.
உன் உணர்ச்சிகளைக் கொண்டே உன் செயல்கள் மதிக்கப்படும்.
உன் செயல்களைக் கொண்டே உன் வாழ்க்கை மதிக்கப்படும்.
- சாக்ரட்டீஸ்.

67)எதையும் உற்சாகத்துடன் எதிர்கொள்ளும்போது, சுமையின் கனமும் குறைகிறது.
- ஓவிட்.

68)உன் எண்ணம் எவ்வாறு அமைகிறதோ அவ்வாறே உன் வாழ்க்கையும் அமையும்.
- அரேலியஸ்.

69)உறக்கத்தில் கூட உற்சாகத்துடன் இருப்பவன் சிறந்த மனிதன்.
-எட்வர்ட்.

70)தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்பவன், அதன் மூலம் பிறரை சீர்திருத்த பெரிதும் உதவுவான்.
-தாமஸ் ஆடம்ஸ்.

வாங்க.... ஆங்கிலம் கத்துக்கலாம்! சுட்டது நம்ம கோகுல் அவர்களிடம் இருந்து பகுதி 1



நாம இங்கே பாக்கப்போறது verb - இதை எப்படி சரியா உபயோக்கிப்பது?

தமிழில் மூன்று காலங்கள் இருக்கு. நிகழ்காலம், இறந்த காலம், எதிர் காலம் - இப்படி.

ஆனா, இந்த வீணாப்போன ஆங்கிலத்தில் நிகழ்காலத்துக்குள்ள 4 காலம், இறந்தகாலத்துக்குள்ள 4 காலம், எதிர் காலத்துக்குள்ள 4 காலம் - இப்படி 12 காலம் இருக்கு.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு எழுவாய் (Subject) கூட இந்த வினைச்சொல் (verb) எப்படி டிரெஸ் மாத்திக்கிட்டு வரப் போறதுங்கிறதைப் பத்திப் பாக்கப் போறோம்.

இதைப் படிச்சிட்டாலே, 80% சரியா எழுதீடலாம்-ங்கிற ஒரு தெனாவட்டு வந்துரும்.

அதுக்கப்புறம் இந்த 12 காலத்தையும், எதிர்மறையா சொன்னா எப்படி சொல்றது - இதைப்பாக்கப் போறோம் (உ-ம் நான் நாளைக்கு ஸ்கூலுக்கு போவேன், நான் நாளைக்குஸ்கூலுக்குப் போக மாட்டேன் - I will go to school, I will not go to school)

அப்புறம் இந்த 12 காலமும் கேள்வியாக் கேட்டா எப்படிக் கேக்கிறது நு பார்க்கப்போறோம் (உ-ம், I will go to school - When will you go to school?)

அதுக்கப்புறம் இந்த 12 காலங்களும் voice (செய்வினை-லிருந்து செயப்பாட்டு வினைக்கு) மாறினா அதோட சேர்ந்துக்கிட்டு இந்த வெர்ப் மண்ணாங்கட்டி எப்படி மாறப் போகுதுன்னுபாக்கப் போறோம்.

அப்புறம், கசாமுசான்னு ஒரு சில வார்த்தைகள் இருக்கு.

could have completed
would have completed
must have completed
might have completed

இதெல்லாம் பாப்போம். இதுக்கே ஒரு மாசம் ஓடீறாது...?


பாடம் - 1

இந்த இங்கிலீஷை நாம தமிழோட சேர்த்துக்கிட்டே படிக்கிறதுக்கு முயற்சிபண்ணுவோம்.

அதுக்கு முதலில் தன்மை, முன்னிலை மற்றும் படர்க்கை பற்றித் தெரியணும்.

தன்னைப் பற்றிப் பேசினா அது தன்மை. அதுக்குப் பேர் இங்கிலீஷில் First Person. நான், நாங்கள் - தமிழில். I, We - ஆங்கிலத்தில்.

முன்னாடி இருக்கிற ஆளைப் பற்றிப் பேசினா அது முன்னிலை. அதுக்குப் பேர்தாங்கஇங்கிலீஷில் Second Person. தமிழில் நீ, நீங்கள். ஆங்கிலத்தில் You, மறுபடியும் You. சிங்குலரும் (ஒருமை) அதான். ப்ளூரலும் (பன்மை) அதான். இப்போதெரியுதுங்களாஇங்கிலீஷ எதுக்குத் திட்டுறோம்னு.

தன்னைப் பத்தியும் பேசாம, முன்னால இருக்கிறவனைப் பத்தியும் பேசாம வேறயாரோஒரு ஆளைப் பத்திப் பேசினா அது படர்க்கை. அது ஆங்கிலத்தில் Third Person. தமிழில்அவன், அவள், அது, அல்லது ஏதாவது ஒரு பெயர் ராமன் அல்லது சீதா. ஆங்கிலத்தில் He, She, It, Any one Name Either Rama or Seetha இது ஒருமை. பன்மையில் They அல்லது ரெண்டுஅல்லது அதுக்கு மேற்பட்ட பேர்கள் சேர்ந்து - Ram, Lakhman and S

ஏன் இதைச் சொல்றேன்னா, நாம இப்போ ஒரு அட்டவணை போடப் போறோம். அதில்இதெல்லாம் வரப் போகுது. அந்த அட்டவணையை 12 காலங்களுக்கும்நிரப்பப்போறோம்.

அதில், இந்த Subject (எழுவாய்) -க்கு அப்புறம் verb (வினைச்சொல்) அதுமட்டும்மாறிக்கிட்டே இருக்கும்.

இப்போ அந்த அட்டவணையைப் பாருங்க:







நாளையிலேருந்து ஒவ்வொரு காலமா (tense) நிரப்ப ஆரம்பிக்கலாமா?



பாடம் - 2

சரிங்க, இன்னிக்கிலேருந்து நாம இந்த Tense – ஐப் படிக்க ஆரம்பிக்கலாமா?
முதலில் இந்த 12 Tense – ம் என்னன்னு பாத்துரலாம்.

Present Tense (நிகழ்காலம்) இதை நாலாப் பிரிக்கிறாங்க:

1. Simple Present Tense
2. Present Continuous Tense
3. Present Perfect Tense
4. Present Perfect Continuous Tense

இதே மாதிரி தான் Past Tense (இறந்த காலம்):

1. Simple Past Tense
2. Past Continuous Tense
3. Past Perfect Tense
4. Past Perfect Continuous Tense

இதே மாதிரி தான் Future Tense (எதிர் காலம்)

1. Simple Future Tense
2. Future Continuous Tense
3. Future Perfect Tense
4. Future Perfect Continuous Tense

இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. அதனால இத்தோட முடிச்சுக்குவோம். நாளைக்கிலேருந்து Simple Present Tense லிருந்து ஆரம்பிச்சு Future Perfect Continuous Tense வரைக்கும் ஒரு கை பாத்துருவோம்.


பாடம் - 3

Simple Present Tense

இன்னிக்கு நாம இந்த சிம்ப்பிள் ப்ரெஸெண்ட் டென்சைப் பாக்கலாம்.

நாம வழக்கமா செய்யுற செயல்களைச் சொல்றதுக்கு இந்த டென்ஸைஉபயோகிக்கணும்.

உ-ம் :

நான் தினமும் ஸ்கூலுக்குப் போவேன்.
I go to school daily.

காலையில் காப்பியோடு செய்தித்தாள் படிப்பேன்.
I read newspaper along with morning coffee.

அப்புறமா, எல்லாத்துக்கும் தெரிஞ்ச பொதுவான உண்மையைச் சொல்றதுக்கு இந்தடென்ஸை உபயோகிக்கணும்.

உ-ம்:

சூரியன் கிழக்குத் திசையில் உதிக்கிறது.
The Sun rises in the east.

தேன் இனிப்பாக இருக்கிறது.
Honey is sweet.

இந்த டென்ஸில் பாத்தீங்கன்னா, everyday, daily, frequently, seldom, rarely, usually இந்த மாதிரிவார்த்தைகள் இணைந்து வரும்.

இப்போ இந்த டென்ஸோட வெர்ப் ஃபார்மட் பாப்போம்.




go அப்புடீங்கிற வெர்பை உதாரணமா வச்சு இந்த ஃபார்மட்டைப் போட்டிருக்கேன்.

இதுல கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னன்னு, தேர்ட் பேர்சன் சிங்குலர். அந்த He, She, It. அதில் மட்டும் கூட ஒரு s சேரும். walk - walks, run - runs இந்த மாதிரி. சிலவினைச்சொற்கள் o வில் முடிந்ததுன்னா அதில் மட்டும் es சேரும். go - goes, do - does இந்தமாதிரி.

மற்ற எல்லா இடத்திலும், அந்த வெர்பின் ப்ரெசெண்ட் டென்ஸ் ஃபார்ம் உபயோகிக்கணும்.

சின்னப் புள்ளைல படிச்சிருப்பீங்க ஒரு வெர்புக்கு present tense - past tense - past participle னுமூனு கட்டம் போட்டு சொல்லிக்குடுத்துருப்பாங்க.

உ-ம்:

walk - walked - walked
run - ran - run
go - went - gone
do - did - done
put - put - put
cut - cut - cut
come - came - come

இதில் முதல் கட்டத்திலுள்ள ப்ரெசெண்ட் டென்ஸ் பார்மை உபயோகிக்கணும். I go to school. We go to school. You go to school. He goes to school. They go to school.

இப்போ ஃபார்மட் புரிஞ்சதுங்களா?

இது கூடவே சேர்ந்து நெகடிவ் ஃபார்மட்டையும் படிச்சுக்கிட்டோம்னா, நல்லது.

அதாவது go அப்பிடீங்கிற வார்த்தை உடையும். எப்படி உடையும்னா, do + go வா உடையும்.
ரெண்டுக்கும் நடுவில் not வந்திடும்.

இப்போ நான் ஸ்கூலுக்குப் போகலை-ன்னு சொல்லணும்.

எப்படிச் சொல்றது:

I do not go to school. அல்லது I don't go to school. இப்படிச் சொல்லணும்.

அதே வார்த்தை, இந்த தேர்ட் பேர்சன் சிங்குலரில் மட்டும் He does not go to school னுசொல்லணும். ஆக, சிம்ப்பிள் ப்ரெசெண்ட் டென்சில் இந்த தேர்ட் பேர்சன் சிங்குலரைமட்டும் மறந்திடக் கூடாது.

மெத்தப் படிச்ச மேதாவிங்களே, அவனுக்கு ஹிந்தி தெரியாது-ன்னு சொல்றதுக்கு He don't know Hindi னு சொல்வாங்க. அது பெரிய தப்பு. He does not know Hindi அல்லது He doesn't know Hindi இப்படித்தான் சொல்லணும்.

புரியதுங்களா?

நாம ஒரு வேகத்துல, He don't know anything சொல்லுவோம். அப்படிச் சொல்லாமஇன்னிக்கிலேருந்து He doesn't know anything னு சொல்லணும்.

ஓரளவுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

நாளைக்கி அடுத்த டென்ஸைப் பாப்போம்.

வர்ட்டா?


பாடம் - 4

Present Continuous Tense

சிம்ப்பிள் ப்ரெஸெண்ட் டென்ஸை நாம வழக்கமா செய்யும் செயல்களைச்சொல்றதுக்காக உபயோகப் படுத்தினோம்.

இப்போ இந்த நிமிஷம் என்ன செய்கிறோம்-ங்கிறதைச் சொல்றதுக்கு ப்ரெஸெண்ட்கண்ட்டினியூவஸ் டென்ஸை உபயோகப் படுத்தணும். இந்த ரெண்டு டென்சுக்கும்வித்தியாசம் அவ்வளவு தான்.

உ-ம்:

இப்போ நான் என்னுடைய குழந்தைக்கு அறிவியல் பாடம் சொல்லிக்குடுத்துக்கிட்டிருக்கேன்.

Now, I am teaching science to my child.

நான் ஃபிகர் கூட கடலை போட்டுக்கிட்டு இருக்கேன்.

I am chatting with my girlfriend.

இந்த டென்சில் பாத்தீங்கன்னா now அப்புடீங்கிற வார்த்தை உபயோகமாகும்.

வெர்ப் ஃபார்மட் எப்படி வரும்-னு கேட்டீங்கன்னா, ஒரு am, is, அல்லது are இதுலே ஏதாவதுக்குத் தகுந்தபடி போட்டுக்கிட்டு வெர்போட present ஃபார்மட்டிலிருந்து ing சேர்த்துக்கிட வேண்டியதுதான். Tell (இது ப்ரெஸெண்ட் ஃபார்மட் - இதுகூட ing சேர்த்து telling ஆக்கிடுங்க. ஆனா tell-ஓட past ஃபார்மட்டான told-ஓட ing சேர்த்து தயவுசெய்து tolding ஆக்கிடாதீங்க!!! Subject-

இப்போ இந்த அட்டவணையைப் பாருங்க:






எதிர்மறை உபயோகம் எப்படி வரும்னு கொஞ்சம் பார்க்கலாமா?





am going, are going, is going இதை உடைச்சு இடையில் not போட்டுக்கிட்டா எதிர்மறைஉபயோகம்.

ப்ரெசெண்ட் கண்டியூனுவஸ் டென்ஸ் இத்தோடு முடியுது.

நாளைக்க்கு அடுத்த டென்ஸ் பார்க்கலாம்.


பாடம் - 5

Present Perfect Tense

இன்னிக்கு Present Perfect Tense – ஐப் பத்திப் பார்க்கலாம்.

இதை விளக்குறது கொஞ்சம் கஷ்டமானது. ஏன்னா, பாக்கிறதுக்கு Simple Past Tense-க்கும்இந்த டென்சுக்கும் வித்தியாசம் அவ்வளவா தெரியாது.

ம்.. என்னாலே முடிஞ்ச அளவு சொல்றேன்.

நிகழ்காலத்தில் நடந்து முடிந்த ஒரு செயலைச் சொல்றதுக்கு இந்த டென்ஸைஉபயோகப்படுத்தணும்.

நான் இந்த வேலையை முடித்து விட்டேன்.

I have completed this job.

அவன் இங்கேயிருந்து கிளம்பி விட்டான்.

He has left from here.

முடிச்சிட்டேன், செஞ்சுட்டேன். பாத்துட்டேன், பேசிட்டேன் – நு சொல்றதையெல்லாம்இந்த டென்ஸை வச்சு சொல்லலாம்.

அப்புறம் இந்த டென்சுக்கான வெர்ப் பார்மட்டைப் பார்ப்போம்:




எதிர்மறை உபயோகத்தைப் பார்க்கலாமா:



இதிலேயும் மிகவும் கவனமா பாக்க வேண்டியது தேர்ட் பேர்சன் சிங்குலர். அதுக்குமட்டும் has. மத்ததுக்கெல்லாம் have.



பாடம் – 6

Present Perfect Continuous Tense


இன்னிக்கு ப்ரெசெண்ட் பெர்ஃபெக்ட் கண்டினியூவஸ் டென்சைப் பத்திப் பார்க்கலாம்.

எனக்குத் தெரிஞ்சு இந்த டென்சு ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் உபயோகமாகுது.

அதாவது கொஞ்ச காலமா ஒரு வேலையைச் செஞ்சுக்கிட்டு இருக்கீங்க. இப்பவும் அதையே செய்றீங்க. அதைச் சொல்றதுக்கு இதை உபயோகப் படுத்தலாம்.

He has been living there for five years.

அவன் அங்கே 5 வருஷமா வசிச்சிக்கிட்டு இருக்கான். இப்பவும் அங்கே தான் இருக்கான். இந்த வெளங்காமப் போனா இங்கிலீஷ் ஒரு வரிக்கு இந்த ரெண்டு அர்த்தமும் இருக்கு.

இதிலே பாத்தீங்கன்னா for அப்புறம் since இந்த ரெண்டு வார்த்தை உபயோகத்தில் வரும்.

For போட்டீங்கன்னா எத்தனை வருடம் அல்லது எத்தனை மாதம் நு எழுதணும்.

Since போட்டீங்கன்னா என்னிக்கிலேருந்து நு எழுதணும்.

I have been teaching Hindi for 6 years.
I have been teaching Hindi since 1993

மறுபடியும் சொல்றேன் இதுக்கு அர்த்தம் 6 வருஷமா ஹிந்தி சொல்லிக்குடுத்துக்கிட்டு இருக்காரு. இப்பவும் சொல்லிக்குடுத்துக்கிட்டு இருக்காரு.

இப்போ இந்த டென்சோட வெர்ப் ஃபார்மட்டைப் பாக்கலாம்:





ஃபார்மட்டில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. மறுபடியும் அந்த தேர்ட் பேர்சன் சிங்குலர். அதுக்கு மட்டும் ஹேஸ். மத்ததுக்கெல்லாம் ஹேவ்.

இந்த டென்சுக்கு எதிர்மறை உபயோகம் இருக்கிற மாதிரி தெரியல. கொஞ்சம் உங்களுக்குள்ளேயே சொல்லிப் பாருங்க நான் 5 வருஷமா பெங்களூரில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கலை. இப்புடி யாராவது நட் கழண்டு போன ஆளு தான் சொல்வாங்க. அதனால, எதிர்மறை உபயோகம் பார்க்க வேண்டாம்.

அதையும் மீறிச் சொல்லித்தான் ஆகணும்னா, கீழே உள்ளது மாதிரி சொல்லுங்க:




எதுக்காக எதிர்மறைக்கு முக்கியத்துவம் குடுக்குறோம்னா, I have been not going – னு சொன்னீங்கன்னா அது தப்பா. எந்த இடத்தில not ஐ நுழைக்கணும்னு ஒரு ரூல் இருக்கு. அங்க தான் நுழைக்கணும்.

இன்னிக்கு இவ்வளவு தான். நாளைக்கிலேருந்து இறந்த காலத்துக்குப் போயிடலாம்


பாடம் – 7


Simple Past Tense


இந்த டென்ஸ் ரொம்ப முக்கியமானது. ஏன்னா இதை நாம அடிக்கடி உபயோகப்படுத்தப் போறோம்.

கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்வதற்கு நாம இந்த டென்ஸை உபயோகிக்கிறோம். அந்த நிகழ்ச்சி சிறிசோ பெருசோ, சிம்ப்பிள் பாஸ்ட் டென்ஸைத் தான் உபயோகிக்கணும்.

சின்ன நிகழ்ச்சி:

The car exploded at 9.30 am yesterday.
She went to the door.
We did not hear the telephone.
Did you see that car?

பெரிய நிகழ்ச்சி:

I lived in Bangkok for 10 years.
The Jurassic period lasted about 62 million years.

நிகழ்ச்சி சிறிசோ, பெருசோ, எத்தனை நிமிடம் நடந்ததோ அல்லது இரண்டு விநாடிகளுக்கு முன் நடந்ததோ, இல்லை லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததோ, அதெல்லாம் மேட்டர் இல்லை. சிம்பிள் டென்ஸை எப்போ உபயோகப்படுத்தணும்னா:

நிகழ்ச்சி கடந்த காலத்தில் உள்ளதா இருக்க வேண்டும்.
அது முற்றிலும் முடிந்திருக்க வேண்டும்.
அந்த வாக்கியத்தில் நேரத்தையோ அல்லது நடந்த இடத்தையோ நேராகவோ மறைமுகவோ சொல்லியிருந்தால்.

பொதுவாக, நேரமோ அல்லது இடமோ குறிப்பிடப்பட்டிருந்தால், அங்கே சிம்ப்பிள் பாஸ்ட் டென்ஸ் தான் உபயோகப் படுத்த வேண்டும். ப்ரெசெண்ட் பெர்ஃபெக்ட் டென்ஸை உபயோகப்படுத்தக்கூடாது.

I lived in that house when I was young.
He didn't like the movie.
What did you eat for dinner?
John drove to London on Monday.
Mary did not go to work yesterday.
Did you play tennis last week?
I was at work yesterday.
We were not late (for the train).
Were you angry?


அப்புறம் பாருங்க, கதை சொல்லணும்னா, பாஸ்ட் டென்ஸைத்தான் உபயோகப்படுத்தணும். பாஸ்ட் கண்டியுனுவஸ் டென்ஸ் ஒன்னு இருக்கு அதை வந்து கதையில் உள்ள சீனை செட் பண்றதுக்கு மட்டும் உபயோகிக்கலாம். ஆனால், பெரும்பாலும் சிம்ப்பிள் பாஸ்ட் டென்ஸ் தான் உபயோகிக்கணும்.


"The wind was howling around the hotel and the rain was pouring down. It was cold. The door opened and James Bond entered. He took off his coat, which was very wet, and ordered a drink at the bar. He sat down in the corner of the lounge and quietly drank his..."

ஏதாவது புரிஞ்சதா? புரியாட்டாலும் விடுங்க, நடைமுறையில் வந்திடும். இப்போ ஃபார்மட்டைப் பார்ப்போம்:



நாளைக்கி பாஸ்ட் கண்டினியூவஸ் டென்ஸைப் பாப்போம்.

பாடம் – 8 பாஸ்ட் கண்டினியூவஸ் டென்சுக்குள்ளே போகும் முன் மறுபடியும் இந்த ப்ரெசெண்ட் பெர்ஃபெக்ட் டென்ஸை இன்னொரு முறை ரிவ்யூ பண்ணிக்கலாமா?
ஏன்னா, Present Perfect, Simple Past இந்த டென்சும் ஒன்னு மாதிரியே தெரியும்.


ம்... இப்போ present perfect tense-ன் உபயோகத்தை மறுபடிய் ஒருமுறை பார்ப்போம்.
கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் அனுபவத்தைப் பற்றிச் சொல்ல உபயோகப் படுத்துறோம்.


எப்போ அந்த நிகழ்ச்சி நடந்ததுங்கிறது முக்கியம் இல்லை. நடந்ததா அது தான் முக்கியம்.


I have seen Taj Mahal.


He has lived in Delhi.


We have never eaten mutton.


இந்த மூனு வாக்கியத்திலும் என்ன தெரியுதுன்னா இந்த நிகழ்ச்சிகள் கடந்த காலத்தில் நடந்தது. (கடந்த காலத்தோடு தொடர்பு) இன்னும் என் மூளைக்குள் அந்த நிகழ்ச்சி பற்றிய ஞாபகம் இருக்குது. (இது நிகழ்காலத்தோடு தொடர்பு) அப்புறம் இந்த உதாரணத்தைப் பாருங்க:


I have bought a car – இதுக்கு என்ன அர்த்தம்னா, போன வாரம் எங்கிட்டே கார் இல்லை. இப்போ இருக்கு.


Ram has broken his leg – போன வாரம் கால் நல்லாத்தான் இருந்துச்சு. இப்போ எலும்பு முறிஞ்சிடுச்சு. Has the price gone up? – இதுக்கு முன்னாடி பெட்ரோல் லிட்டர் 50 ரூ இருந்துச்சு. இப்போ 55 ரூபாய். இந்த மாதிரி உபயோகத்துக்கும் ப்ரெசெண்ட் பெர்ஃபெக்ட் டென்ஸ் பயன்படும். ஆனா, கவலைப்பட வேண்டாம். அமெரிக்காக்காரன் இந்த டென்ஸை அவ்வளவா உபயோகிக்கிறது கிடையாது (பிரிட்டிஷ்காரன் உபயோகிக்கிற அளவு). நான் சொல்றதெல்லாம் இந்த ரெண்டு டென்சில் எந்த டென்சு வேண்டுமானாலும் உபயோகிங்க. ஆனா, சரியான ஃபார்மெட் பயன்படுத்துங்க. அம்ம்புட்டுதேன். நாளைக்கி அடுத்த டென்ஸ் பார்ப்போம்.


பாடம் - 9 Past Continuous Tense
கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்த நிகழ்ச்சியைச் சொல்வதற்கு நமக்கு பாஸ்ட் கண்டினியூவஸ் டென்ஸ் தேவைப் படுது.
நாம பாஸ்ட் டென்ஸை உபயோகிச்சுப் பேசும்போது, அதைக் கேக்கிறவங்களுக்கு எந்த நேரத்தைப் பற்றிப் பேசுறோம்னு நல்லாத் தெரியும். இப்போ, கீழே உள்ள உதாரணத்தைப் பாருங்க:


* I was working at 10pm last night.


* They were not playing football at 9am this morning.


* What were you doing at 10pm last night?


* What were you doing when he arrived?


* She was cooking when I telephoned her.


* We were having dinner when it started to rain.


* Ram went home early because it was snowing.


கடந்த காலத்தில் நடந்த ஒரு கதையைப் பத்தி (கதைன்னாலே கடந்த காலம் தானே) சொல்லும்போது, காட்சி அமைப்பைப் பற்றி சொல்லணும்னா இந்த டென்ஸை உபயோகப்படுத்தணும். அதாவது அந்த ஆக்‌ஷன் ஆரம்பிச்ச போது பேக்கிரவுண்டு காட்சி எப்படி இருந்தது இதைப் பற்றி சொல்றதுக்கு. எப்பவுமே, கதை பாஸ்ட் கண்டினுயூவஸ் டென்ஸில் ஆரம்பிச்சு, சிம்ப்பிள் பாஸ்ட் டென்சுக்கு மூவ் ஆகிடும்.


இந்த உதாரணத்தைப் பாருங்க:


“James Bond was driving through town. It was raining. The wind was blowing hard. Nobody was walking in the streets. Suddenly, Bond saw the killer in a telephone box..."


ஒரு நீளமான செயல் நடந்துக்கிட்டிருந்துச்சு. அதுக்கு இடையில் ஒரு சின்ன செயல் நடந்துச்சு. இந்த ரெண்டையும் சேர்த்து இங்கிலீஷில் சொல்லும்போது நீளமானதுக்கு கண்டினியூவஸ் டென்சையும் சின்ன செயலுக்கு சிம்ப்பிள் பாஸ்ட் டென்சையும் உபயோகிக்கணும்.


I was watching TV at 8pm. -


இது நீளமான ஆக்‌ஷன் - சில மணி நேரம் எடுக்கக்கூடியது


You telephoned at 8pm. - இது சின்ன ஆக்‌ஷன் - சில நிமிடங்கள் தான். இந்த ரெண்டையும் when ஐ வச்சு சேர்த்தோம்னா எப்படி வருது பாருங்க. I was watching TV when you telephoned. when you telephoned - ங்கிறது “8 மணி” –ங்கிறதை இன்னொரு விதமா குறிப்பிடுறது. நாலு ஸ்டைலில் இந்த ரெண்டு ஆக்‌ஷனையும் சேர்க்கலாம். பாருங்க:


I was walking past the car when it exploded.When the car exploded I was walking past it.The car exploded while I was walking past it.While I was walking past the car it exploded. walking past the car - சில நொடிகள் நடக்கும் நிகழ்ச்சி.


exploded - சில மில்லி நொடிகள் நடக்கும் நிகழ்ச்சி. இப்போ இந்த டென்சோட ஃபார்மட்டைப் பாப்போம்:


இன்னிக்கு அவ்வளவு தான். நாளைக்கு அடுத்த டென்சைப் பார்க்கலாம்.



பாடம் – 10

Past Perfect Tense

இன்னிக்கு நாம பாக்கப் போற டென்ஸ் பாஸ்ட் ஃபெர்பெக்ட் டென்ஸ். இது ரொம்ப சுலபமான டென்ஸ். அதாவது கடந்த காலத்துக்குள்ள ஒரு கடந்த காலத்தைச் சொல்றதுக்கு இந்த டென்ஸைப் பயன்படுத்தலாம். ரொம்ப சுலபம். இல்லீங்களா…?

இப்போ ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்:

The train had left when we arrived.

நாங்க வந்த பொழுது டிரைய்ன் கிளம்பி போயிருந்துச்சு.

டிரைய்ன் கிளம்பினது – முதல்ல நடந்தது – இதுக்கு பாஸ்ட் பெர்ஃபெக்ட்.
நாம வந்தது – ரெண்டாவது நடந்தது – இதுக்கு சிம்ப்பிள் பாஸ்ட் டென்ஸ்.

இன்னும் சில உதாரணங்களைப் பார்ப்போம்:

I wasn't hungry. I had just eaten.
They were hungry. They had not eaten for five hours.
I didn't know who he was. I had never seen him before.
"Mary wasn't at home when I arrived."
"Really? Where had she gone?"

சில சமயம் பாஸ்ட் பெர்ஃபெக்ட் டென்ஸை ப்ரெசெண்ட் பெர்ஃபெக்ட் டென்ஸ் மாதிரி நினைச்சுக்கலாம். என்ன அது நிகழ் காலத்தில் நடந்தது. இது கடந்த காலத்தில் நடந்தது. அவ்ளோ தான் வித்தியாசம்.
உதாரணத்துக்கு நீங்க 9.15-க்கு ஸ்டேஷனுக்கு வர்றீங்க. ஸ்டேஷன் மாஸ்டர் உங்க கிட்டே சொல்றாரு:
"You are too late. The train has left."
இது ப்ரெஸெண்ட் பெர்ஃபெக்ட். இப்போ இதே விஷயத்தை நீங்க அப்புறமா உங்க நண்பர்கள் கிட்டே சொன்னீங்கன்னா எப்படி சொல்வீங்க:
"We were too late. The train had left."


இது பாஸ்ட் பெர்ஃபெக்ட்.
அப்புறம் said, told, asked, thought, wondered இந்த வார்த்தைகளுக்கு அப்புறம் வருகிற வாக்கியங்களில் (அதுக்கு ஆங்கிலத்தில் Reported Speech – னு பேர் – இதைப் பத்தி நம்ம நேர்கூற்று – அயல் கூற்று வகுப்பில் (அதாவது direct to indirect speech) பார்ப்போம். இப்போ இந்த உதாரணங்களைப் பாருங்க:
He told us that the train had left.
I thought I had met her before, but I was wrong.
He explained that he had closed the window because of the rain.
I wondered if I had been there before.
I asked them why they had not finished.


இப்போ இந்த டென்சோட ஃபார்மட்டைப் பாக்கலாம்:





இன்னிக்கு இவ்வளவு தாங்க. நாளைக்கு அடுத்த டென்சைப் பார்க்கலாம்.

அசத்தல் திரைக் காட்சிகள்..!

ஆகா.. ஆகா.. என்னே அருமையான காட்சிகள். ஏன் இன்னும் தென்னிந்திய சினிமா ஆஸ்கார் விருது பெறவில்லை? எல்லாம் இந்த வெள்ளைக்காரனின் ஓர வஞ்சனையப்பா..!

ஒரு திருமணத்தின் முன்னரும் பின்னருமான ஒரு உரையாடலை ஒரே உரையாடலில் அடக்கும் சிறப்பு! (சுட்டது)


திருமணத்திற்கு முன்

அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது?

அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..

அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..

அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?

அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்…

அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?

அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….

அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?

அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…

அவள் : என்னை அடிப்பீர்களா?

அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….!

அவள் : நான் உங்களை நம்பலாமா?

அவன் : ம்ம்ம்.

அவள் : அன்பே…!

திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும் குறிப்பு( இது சொந்த ஆக்கம் கிடையாது கிடைத்ததில் சுட்ட ஆக்கம்)

முயலுக்கு முடியல !!முயலின் தற்கொலை முயற்சிகள்
















கிச்சன் டிப்ஸ் !


* பூண்டு, வெங்காயம் போன்றவற்றை முதல் நாளே ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தால், சுலபமாக தோல் உரிக்க வரும்.

* உணவில் காரம் அதிகமாகி விட்டதா? கவலையை விடுங்கள். அதில், சிறிது எலுமிச்சம் பழச்சாறை சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.

* பிரியாணி செய்யும் போது அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டால், சாதம் ஒன்றுடன் ஒன்று ஓட்டாமல் இருக்கும்.

* எலுமிச்சம் பழம் வாடாமல் இருக்க, தினசரி ஒரு மணி நேரம் நீரில் போட்டு எடுத்து வைக்கலாம். இப்படி செய்தால் ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும்.

* வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

* கீரையின் வேர்பகுதி தண்ணீரில் இருக்குமாறு வைத்திருந்தால், கீரை மறுநாள் வரை வாடாமல் இருக்கும்.

* மாங்கொட்டையின் உள்ளே உள்ள பருப்பை வெதுவெதுப் பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பித்தளை பாத்திரங்களை துலக்கினால், அவை பளிச்சிடும். அதே போல், காபி போட்ட பின், அந்த காபி தூளை காயவைத்து பாத்திரம் துலக்கினால், பாத்திரங்கள் மின்னும்.

* பட்டாணியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்தால், வெந்ததும் வாசனை நன்றாக இருக்கும்.

* சாம்பார் செய்யும் போது அதில் ஒரு நெல்லிக் காயை சேர்த்தால், சாம்பாரின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

* உளுத்தம் வடை செய்யும் போது, சிறிது இட்லி மாவு சேர்த்து செய்தால், வடை எண்ணெய் குடிக்காது. சுவையும் நன்றாக இருக்கும்.

* முட்டை ஓட்டில் விரிசல் இருந்தால் வேக வைக்கும் போது, அதில் உள்ள திரவம் தண்ணீரில் கலந்து விடும். இதை தடுக்க தண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி வேக வைக்கலாம்.

* அப்பளம், வடாம் போன் றவை வைத்திருக்கும் டப்பாவில், சிறிது பெருங்காயத் தை போட்டு வைத்தால், அவை அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.

* மைக்ரோ ஓவனில் அரிசியால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை மீண்டும் சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், வேகமாக சூடாகும்.

* முகத்திற்கு பூசும் மஞ்சள் கிழங்கு நீண்ட நாட்கள் இருந் தால், உளுத்துப் போகிறதா? மஞ்சள் கிழங்குடன், கற்பூரத் தையும் சேர்த்து டப்பாவில் போட்டு மூடி வைத்தால் உளுத்து போகாமல் இருக்கும்.

* கலந்த சாதம் செய்ய, சாதத் தை ஆற வைக்கும் போது அதில் சிறிது நல்லெண் ணெய் ஊற்றி ஆறவைத்தால், உதிராக இருக்கும்.

* தேங்காய் சாதத்தில் சிறிதளவு வேர்கடலையை சிறிது சிறிதாக உடைத்து போட்டால், சுவை பிரமாதமாக இருக்கும்.

* மைக்ரோ ஓவனில் சமைக்கும் போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும்; இல்லையென் றால், சில வெந்தும், சில வேகாமலும் இருக்கும்.

* ரவா லட்டு செய்யும் போது சர்க்கரையுடன், சிறிது பால் பவுடர் சேர்த்து செய்தால், சுவை சூப்பராக இருக்கும்.

* தக்காளி சாதம் செய்யும் போது, தண்ணீருக்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால், சுவை கூடுதலாக இருக்கும்.

* தேங்காய் துருவலை பால் சேர்த்து அரைத்து பர்பி செய் தால், கூடுதல் வெண்மை நிறமாக இருக்கும்.

* பக்கோடா செய்யும் போது சிறிது ரவை கலந்து செய்தால், மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். இதில் ரவைக்கு பதில் வேர்க்கடலையை பொடி செய்து கலந்தும் பக்கோடா செய்யலாம்.

முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை வேக வைக்கும் பொழுது ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊத்தி வேக வைத்தால் வேண்டாத வாசம் போய் விடும்.

தேங்காய் துருவும் பொழுது ஓட்டையும் சேர்த்து துருவி பயன்படுத்தினால் குடல் புண் உண்டாகும். அதனால் வெள்ளைப் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.

மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்...... ஊச்......... என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.

வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.

வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது.

அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில் அதிகம்.

ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும். கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.

மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.

ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் பிடிக்காமல் இருக்கும்..



நன்றி தினமலர்!

கலக்கல் கவுண்டர் !

நான் அடிச்சா நீ செத்துருவ




இதோ பார் இங்க பூசு , இதோ பார் இங்க பூசு காந்த கண்ணழகி உனக்கு நான் மினிஸ்டில இடம் பாக்குறேன்




மாமன் மகள் சத்யராஜ், கவுண்டர்


காதுகுத்து கலாட்டா




ஒரு கோடி ருபாய் குடுத்தாக்கூட சாந்திரம் ஆறு மணிக்கு மேல வேல பாக்கமாட்டேன் !!



அயோ!! அயோ !! செந்தில் தற்கொலை நாடகம் !



பஸ் நிலையத்தில் கவுண்டரும், செந்திலும்

குழந்தைகளின் குறும்பு படம் ~!























நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

இந்த ப்ளோக்’ல எழுதியது !

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?