இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

ஏழாவது சுவை ! நகைச்சுவை :)


செய்தி : அகல இரயில்பாதை அமைத்ததில் ஆளும்கட்சி ஊழல்.

தொண்டர்: தலைவரே அகலப்பாதை அமைக்கிறதுல ஊழல் செஞ்சதா எதிர்கட்சிக்காரங்க வழக்கு போட்டிருக்காங்க!

தலைவர்: வழக்குலருந்து தப்பிக்க ஏதாவது ‘குறுக்குப் பாதை’ இருக்கான்னு கண்டுபிடிங்கப்பா!
---------------

போலிஸ்: எதுக்குடா பிள்ளையார் சிலைய திருடினே?

திருடன்: தொழில முதல்முறையா ஆரம்பிக்கும்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கணும் இல்லையா? அதான் சார்!


****


போலிஸ்: உங்க இருசக்கர வண்டிய காணோம்ன்னு புகார் குடுத்திருந்தீங்க.. இல்லையா? அதோ நிக்குதே.. அதுவா பாருங்க.

நம்மவர்: இல்லைங்க, இது இல்ல.

போலிஸ்: பரவாயில்ல.. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. அப்புறம் உங்க மனைவிய காணோம்ன்னு இன்னொரு கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருந்தீங்க இல்லையா? அதோ அவங்களா பாருங்க?

நம்மவர்: இல்லை! பரவாயில்ல.. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்!




புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)

"நர்ஸ், ஒரு மொபைல் ‏இருந்தா கொடுங்க."

"எதுக்குடா செல்லம்?"

"நா‎ன் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டே‎னு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"



ஏண்டா.. உங்க அப்பா எ‎ந்நேரமும் உ‎ன்னைத் திட்டிக்கிட்டே இருக்காரு."

"ஹ..ஹ்ஹ.ஹா.... சிங்கத்தைக் கொஞ்ச முடியாதுல்ல.. அதா‎ன்!!"



"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல ‏இருக்கு."

"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"



(‏ஐ.டி.தொழிலாளி, கார்ப்பொரேஷ‎ன் குப்பைத் தொழிலாளியிடம்..)

"எ‎ன் கையில டிகிரி இருக்கு; நெறய நாலெட்ஜ் ‏ இருக்கு; சொசைட்டில பெரிய அந்தஸ்து இ‏ருக்கு. உனக்கு??"

"நிரந்தரமான வேலை ‏இருக்கு!!"



நான் சீசனுக்கு சீசன் வியாபாரத்தை மாத்திடுவேன்"

"இப்போ என்ன வியாபாரம் பண்றே?"

"செருப்பு வியாபாரம். நல்லா சேல்ஸ் ஆகுது. முக்கியமா பிரஸ் மீட் நடக்குற இடங்கள்ல..!!"


'உனக்காக நான் நரகத்திற்கும் செல்லத் தயார்' என்று சொன்னான் அந்தக் காதலன். இப்போது அவன் நிஜமாகவே நரகத்தில்தான் வாழ்கிறான். அவனுக்குத் திருமணமாகிவிட்டது



எங்க வீட்டுல கேபிள் கனெக்ஷன் இருந்தும் என்னால படம் பார்க்க முடியல"

"ஏன்.. என்ன பிராப்ளம்?"

"அதுக்கு ஏதோ 'டிவி'ன்னு ஒண்ணு வேணுமாம்ல..."




"சினிமா போலாமா.. பீச்சுக்குப் போலாமா.."

"இல்ல.. பேசாம இன்னிக்கு படிக்கலாம்"

"சரி உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம். டாஸ் போடலாம். தலை விழுந்தா சினிமா. பூ விழுந்தா பீச். ரெண்டுக்கும் நடுவில நின்னா படிப்பு. சரியா..?!"




நேத்து ஒரு பொண்ணு என்கிட்ட வந்து ஆட்டோகிராப் கேட்டா. கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்."

"ம்ம்..அப்புறம்!"

"கையெழுத்தப் பார்த்துட்டு கேட்டா.. 'அப்போ நீங்க சூரியா இல்லையா!'. நான் அப்படியே ஷா..க்க்...காயிட்டேன்.

"என்ன கொடுமை சார் இது?"



"விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

"தப்பில்லை. ஏன் கேட்கிறே?"

"நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!"



மாணவர்கள் ஜாக்கிரதை!


“மாணவர்களே.. கடவுளிடம் வேண்டிக்கொண்டால் நீங்கள் விரும்பியது கிடைக்கும்..”


“போங்க சார்.. ‏ இது உண்மை‎ன்னா நீங்க உயிரோடவே இருந்திருக்க மாட்டீங்களே!!”




கடி


“யோவ் கண்டக்டர்.. பஸ்ஸுல ஏ‎‎ன் பிச்சைக்காரங்களா இருக்காங்க?”


“கையில சில்லறை வச்சிருக்கறவங்க மட்டும் ஏறுங்க‎ன்னு சொன்னேன்.. அதான்..”




காட்சி வேறு - வசனம் ஒ‎‎ன்று


“டாக்டர்ஸ் ஆபரேஷ‎ன் முடிஞ்சு வெளியே வரும்போதும், பசங்க பரீட்சை எழுதிட்டு வெளியே வரும்போதும் சொல்ற ஒரே வரி...?”


“எவ்வளவோ ட்ரை பண்ணோம்.. ஆனாலும் முடியல..”




சுள்ளா‎ன்கள் ஜாக்கிரதை!


“நா‎ன் இனிமே படிக்கலை.. வேலை செய்யப் போறே‎ன்..”


“டேய்.. யூகேஜி படிக்கிற உனக்கு எ‎ன்ன வேலை கிடைக்கும்?”


“எல்கேஜி படிக்கிற பொ‎ண்ணுங்களுக்கு ட்யூச‎ன் எடுக்கப் போறே‎ன்”

------------

மருந்துக் கடைக்கு அவசர அவசரமாய் வந்த ஒருவர் கேட்கிறார்: “விக்கலுக்கு ஏதாவது மாத்திரை குடுங்க”

அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும் என்றெண்ணிய கடைக்காரர் பளார் என்று அறைகிறார்.

அடுத்த நொடி வந்தவர் திருப்பி விட்ட அறையில் கடைக்காரருக்கு பொறி பறக்கிறது.

”யோவ்.... விக்கல் எனக்கில்ல.. எம் பொண்டாட்டிக்கு!”

0 comments:

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

இந்த ப்ளோக்’ல எழுதியது !

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?