இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

தங்கள் மகிழ்ச்சிக்கும் & அடுத்தவர்களின் மகிழ்ச்சிகும் உதவுங்கள் !

தங்கள் மகிழ்ச்சிக்கும் & அடுத்தவர்களின் மகிழ்ச்சிகும் உதவுங்கள் !

’அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் பிரதிபலனே பாராமல் அடுத்தவர்களுக்கு உதவுங்கள்’- தலாய்லாமவின் பொன்மொழி தான் இது.
இதனை எல்லோராலும் விளக்க முடியாது , இதனை அனுபவபூர்வமாக அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.


பள்ளி செல்லும் சிறுவர்-சிறுமிகளுக்கு பாடப்புத்தகமோ இல்ல பேனாவோ வாங்குவதற்கு காசு கொடுத்துவிட்டு , ஏதோ என்னாலான உதவிகளை நான் செய்கிறேன், என்று பலர் தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக்கொள்வதுண்டு. ஆனால் இதுபோன்ற செயல்களுக்குப் பெயர் உதவி இல்ல. அதனால் இப்படி செய்வதை நிறுத்திவிட வேண்டாம். எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்தால் மட்டுமே அளவில்லாத பரிபூரணமான சந்தோசத்தை உங்களால் அனுபவிக்க முடியும்.என்பதைத்தான் வலியுறுத்துகிறேன்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் உண்டு தன் மனைவி உண்டு என்று தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர். விற்கும் விலை வாசியில் எங்களால் மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும்? என்று கூட சிலர் கேட்கலாம். மனம் இருந்தால் மார்க்கமுண்டு , உதவ வேண்டும்னெறு எண்ணம் இருந்தால் எப்படியும் உதவலாம். இளைஞர்கள் டாஸ்மார்க் செல்வதையோ இல்ல சிகரெடையோ குறைத்துக்கொண்டு ஏழை எளியோர்க்கு ஒருவேளை சாப்பாடு வாங்கி கொடுக்கலாம், உடுத்த நல்ல ஆடைகள் வாங்கிக்கொடுக்கலாம். ஓர் உதாரணத்துக்கு மட்டுமே இதை சொல்லுகிறேன்.


நீங்க அடுத்தவர்களுக்கு உதவினால் ஆண்டவன் உங்களுக்கு உதவுவான். எப்படி என்று இந்தக் கதையை படியுங்கள் புரியும் .



கண்ணனுக்கு வயது முப்பத்திரண்டு.இந்தச் சின்ன வயசுக்குள் அவன் அனுபவித்துவிட்ட சோதனைகள் மிக மிக அதிகம்.வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்த அவன்.வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு மெக்கானிக் ஷாப்பில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் இரவு நேரம் கண்ணனை அழைத்து டிபன் வாங்கிவரச்சொன்னார் முதலாளி. ரிப்பேருக்கு வந்திருந்த ஆட்டோவை எடுத்துக்கொண்டு கண்ணன் கிளம்பினான்.அப்போது பேய் மழை பெய்துகொண்டு இருந்த்து.தூரத்தில் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் ஒதுங்க இடமில்லாமல் பெட்டி படுக்கைகளுடன் மழையில் நனைந்த கோழிக்குஞ்சு மாதிரி நனைந்தபடி நின்றுகொண்டிருந்தார்.கண்ணன் அவர்ருகில் சென்று ஆட்டோவை நிறுத்தினான்.

என்ன சார் ! என்னாச்சு ? என்று விசாரித்தான்.தான் பயணம் செய்த பஸ் பிரேக்டெளன் ஆகி நடுவழியில் நின்று விட்டதாகவும் மற்ற பயணிகள் எல்லாம் லாரி ,ட்ரக் என்று பிடித்துச் சென்று விட்டதாகவும் ,தான் மட்டும் கடந்த ஒரு மணி நேரமாக வாகனம் எதுவும் கிடைக்காமல் இங்கே மழையில் நனைந்து கொண்டிருப்பதாகவும் வெட வெட்த்த குரலில் கூறினார் அந்தப்பெரியவர்.

அவரைப் பார்த்து இரக்கம் கொண்ட கண்ணன் , இந்த ராத்திரி நேரத்துல இந்த ரூட்டில் பஸ் ஒன்னும் கிடையாது சார், பேசாம ஆட்டோவில் ஏறி உட்காருங்க.இங்கிருந்து கொஞ்ச தூரம் போனா அங்கே ஏதாவது டாக்ஸி கிடைக்கும்.அதுல நீங்க செளகரியமா உங்க ஊருக்குப் போயிடலாம் ! என்றான். நன்றி பொங்கத் தலையாட்டிவிட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தார் அவர். அடுத்த ஐந்தாவது நிமிடம் அவரை ஒரு டாக்ஸி பிடித்து ஏற்றி,வழி அனுப்பினான் கண்ணன். பெரியவர் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு தப்பா நினைக்கலைனா இதை வெச்சுக்கோப்பா !என்று சில ரூபாய் நோட்டுகளை கண்ணனின் கையில் திணிக்க , கண்ணன் வெடுக்கென்று கைகளை உருவிக்கொண்டான்.

இதுக்கெல்லாம் காசு வேணாம் சார். நடு ரோட்டில் பரிதாபமாக நின்னுட்டு இருந்தீங்களேன்னு லிஃப்ட் கொடுத்தேன்.அவ்வளவு தான் ! இதே மாதிரிதான் முன்னே ஒரு சமயம் எங்க அப்பா முன்பின் தெரியாத இடத்துல வழிபுரியாம தவிச்சிட்டுருந்தப்போ யோரோ ஒருத்தர் வந்து தனக்கு உதவி பண்ணினதா சொல்லிருக்கார்.இப்ப உங்களுக்கு நான் உதவி செய்தேன்.இந்த உதவிச் சங்கிலி அறுந்துடாம இருக்க நீங்க இதேபோல வேற யாருக்காவது உதவி செய்யுங்க ! என்று டயலாக் பேசிட்டு ஆட்டோவை கிளப்பிக் கொண்டு பறந்தான் கண்ணன்.


டாக்ஸி நகர ஆரம்பித்த பிறகுதான் பெரியவருக்கு தான் ஒழுங்காக ஊர் போய்ச் சேர்ந்துவிடுவோம் என்ற பாதுகாப்பி உணர்வு வந்தது. உடனே பசியும் வந்தது. அவர் டாக்ஸி ட்ரைவரைப் பார்த்து , தம்பி நான் சாப்பிட்டு நாலு மணி நேரத்துக்கு மேல ஆகுது , இனிமே என்னால தாங்க முடியாது. உடனடியா நான் சாப்பிடலைன்னா எனக்கு மயக்கமே வந்துடும்.அதனால் வழியில ஓட்டல் ஏதாவது இருந்தா நிறுத்தேன் என்றார்.அதற்கு ட்ரைவர் சார் , இந்த வழியில ஓட்டல் ஏதும் இல்லீங்களே.. ஏழை ஜன்ங்க வசிக்கிற பகுதியாச்சுங்களே இது ! என்றான்.டாக்ஸி மெதுவா ஓடிக்கொண்டிருக்க ,சாலை ஓரத்தில் ஒரு குடிசைக்கு வெளியே ஒரு பெண்மனி இட்லி சுட்டு விற்றுக்கொண்டுருப்பதை யதேச்சையாகப் பார்த்துவிட்டார் அந்தப் பெரியவர்.டிரைவரிடம் டாக்ஸியை நிறுத்தச் சொன்னார். என்ன சார் , இங்கையா சாப்பிடப் போறீங்க ? என்று டிரைவர் முகம் சுளித்த்தைக் கூடப் பொருட்படுத்தாமல் இறங்கி விறுவிறுவென்று நடந்து சென்றார்.திருப்தியாக அந்தப் பெண்மணியிடம் ஏழெட்டு இட்லியை வாங்கிச் சாப்பிட்டார்.பின்னர் கை கழுவிக்கொண்டு எவ்வளவுமா ஆச்சு ? என்று கேட்க எட்டுரூபாய் கொடு சாமி என்றாள் அவள். பெரியவர் தன் பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்ட,ஐயோ சாமி,இதுக்கு சில்லறை கொடுக்க நான் எங்க போவேன் ? என்று பதறினாள் அவள்.

அதற்கு அந்தப் பெரியவர், நீ பாக்கி எதுவும் எனக்குத் தர வேண்டாம்மா ! எனக்கு உதவி தேவைப்பட்ட போது யாரோ முன்பின் தெரியாத ஒரு புண்ணியவான் தேடிவந்து எனக்கு உதவி செய்தார்.இப்பவும் பசியில உயிர் போகிற மாதிரி துடிச்சிட்டுருந்தப்போ அன்னலட்சுமியா என் எதிர்ல வந்து என் பசியைப் போக்கினே.இது இட்லிக்கான பைசா இல்லே. என் நன்றிக்கான அடையாளம்.உன் மடியில இருக்கிற குழைந்த சளியும் இருமலுமா அவதிப்பட்டுக்கிட்டிருக்கே... அதை ஆஸ்பத்திரியில காட்டி,மருந்து வாங்கிக்க இந்தா பணத்தை வெச்சுக்கோ ! நான் வரேன்,என்று அவளிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார் பெரியவர்.பெரியவர் பயணித்த கார் சென்ற திசையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்.அவள் கடையின் முன் ’கிரிச்’ என்ற சத்ததுடன் ஒரு ஆட்டோ வந்து நின்றது.

வந்தவன் ஆட்டோவை விட்டு இறங்கும் வரைகூட காத்திருக்காமல்,யோவ் குழந்தைக்குக் காய்ச்சல் அடிக்குது.டாக்டர்கிட்ட போலாம்னா காசு இல்லீயே’னு கவலைப் பட்டுட்டு இருந்தீயே.. கடவுளாப் பார்த்து கண் திறந்திட்டார், யோரோ ஒரு பெரியவர் வந்து ஆயிரம் ரூபா கொடுத்திட்டு போனார்.உடனே கிளம்பு டாக்டர் கிட்ட போய் நம்ம குழந்தையைக் காட்டி மருந்து வாங்கிட்டு வரலாம் ! என்று அவள் பரபரப்பும் உற்சாகமுமாகச் சொல்ல, ஆச்சரியத்தில் உறைந்தவனாக எதிரே நின்றிருந்தான் கண்ணன்.

டிஸ்கி :

இக்கதை எங்கையோ எப்பையோ படித்தது !

மச்சான்ஸ் நமீதா !

நமிதா :

இந்திய திரைப்படங்களில் பேச ஆரம்பித்து இன்றோடு 80 ஆண்டுகள் ஆகிவிட்டது.அதனை கொண்டாடும் தங்களுக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி தகவல் !


1981ல குஜராத்தில் பிறந்த குல்பி தான் நம்ம மச்சி நமிதா. இளவயதில் அழகாக இருந்த நமீதாவைத்தான் இப்போ நீங்க இங்கே பார்க்க போறீங்க !








1998 குஜராத்தில் சூரத் ப்யூட்டி காண்டெஸ்டில் முதலிடத்தை நமது ஷில்பா ஷெட்டியிடமிருந்து தட்டிச் சென்றிருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா !? படத்தைப் பாருங்கள்




ஷில்பாவிடமிருந்து வாழ்த்துகளை பெறும் மச்சி நமிதா !


படங்களுக்கு நன்றி : http://gujarationweb.blogspot.com/2009/07/namithas-unseen-beauty-contest-pictures.html

கோப்பையுடன் என் குடியிப்பு என்று கோலமயிலின் புன்னகை :)




வள்ளலார் கூட பாடிருக்காரே “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் “ அப்படியிருக்கும் போது அழகாக இருந்த ரோஜா காற்றடைத்த்து போல் ஆனால் யாரைத் தான் கவலை சூழாது ,


2001’ல மிஸ் இந்தியா காண்டெஸ்ட்’ல இவர் கலந்து கொண்டிருக்கிறார்.அதில் நாலாவது இடத்தையும் கைப்பற்றிருக்கார் .

கொசுறு தகவல்:

இதில இவருக்கு ஆங்கிலம் தெரியாமல் மொழிப்பெயர்ப்பாளரை பயன்படுத்தியதால் மிஸ் இந்தியா காண்டெஸ்டில் நாலாவது இட்த்துகு பின் தள்ளப்பட்டார்.

தகவலுக்கு நன்றி : http://www.chakpak.com/celebrity/namita/biography/15455


”எங்கள் அண்ணா” படத்தின் மூலமா தமிழுக்கு அறிமுக நம்ம நமிதா வெகுவிரைவில் தமிழ் இளைஞர்கள் மனதில் தீ’யை மூட்டினார். அதனாலோ என்னவோ அவருக்காக இயற்றப்பட்ட பாட்டு :

படம் : கோவை ப்ரதர்ஸ் :

உலகத்தில நீ எங்க வேணாலும் ஏன் பொறந்திருக்க கூடாத ?

கோரஸ் :பொறந்திருக்க கூடாத ?

ஏன் இந்தியாவுல பொறந்த ?

இந்தியாவில நீ எங்க வேணாலும் ஏன் வளர்ந்திருக்க கூடாதா ?

கோரஸ் : வளர்ந்திருக்க கூடாதா ?

ஏன் மும்பை நகரில வளர்ந்த ?

மும்பை நகரில் நீ நிரந்தரமாக இருந்திருக்க கூடாதா ?

கோரஸ் : இருந்திருக்க கூடாதா ?

ஏன் சென்னை பட்டணம் வந்த !

சென்னை பட்டணம் வந்தாலும் எங்க ஏரியா வில எதிர் வீட்ல ஏன் வந்த ?

---

உன்ன பார்த்தோம் ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம் நொறுங்கி நூலானோம்
---
நீ பல்லு வேலக்க கையில் ப்ருஷ எடுத்தா

அந்த டூத் ப்ரஷ் கூட தூரிகை ஆச்சு

உன் பலாபல மேனியில்

தொட்டு தவழும் பொது

பல சாதா சோப்பும் சந்தனம் ஆச்சு

நீ சீவும் போது சீப்புக்கு கூட சிங்க பல்லு மொளசாச்சு

நீ வாங்கும் போது ஆவின் பாலும் அடடா அக்மார்க் நெய் ஆச்சே

நீ சர்வீஸ் போட்ட டென்னிஸ் பாலும் டைபிஒய்து வந்து செஞ்சுரி ஏறி படுத்தாச்சே

----
உன்ன பார்த்தோம் ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம் நொறுங்கி நூலனோம்
----
நீ சைவம் என்று பொய் சொல்ல வேணாம்

உன் கண்ணுக்குள்ள மீன்கள் உள்ளதடி

பணக்காரி என்று ஒரு கர்வம் வேணாம்

உன் இடுப்ப பார்த்த வறுமை தெரியுதடி

நீ நடக்கும் போது கார்றேண்ட்ட் எடுத்து நெய்வேலிக்கு அனுப்பிடலாம்

நீ சாஞ்சி பாத்தா சரிஞ்சி கெடக்கும் பைசா கோபுரம் நிமிர்ந்திடலாம்

உன் சிரிப்பில் சிந்தும் சில்லறை சேர்த்தால்

இந்திய நாட்டின் மொத்த கடனையும் தீர்த்திடலாம்

----

உன்ன பார்த்தோம் ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம் நொறுங்கி நூலனோம்
----

உலகத்தில நீ எங்க வேணாலும் ஏன் பொறந்திருக்க கூடாதா ?

கோரஸ் : பொறந்திருக்க கூடாதா ?

ஏன் இந்தியா வுல பொறந்த ?
இந்தியா வில நீ எங்க வேணாலும் ஏன் வளர்ந்திருக்க கூடாதா ?

கோரஸ் : வளர்ந்திருக்க கூடாதா ?

ஏன் மும்பை நகரில வளர்ந்த ?

மும்பை நகரில் நீ நிரந்தரமாக இருந்திருக்க கூடாதா ?

கோரஸ் : இருந்திருக்க கூடாதா ?

ஏன் சென்னை பட்டணம் வந்த

சென்னை பட்டணம் வந்தாலும் எங்க ஏரியா வுல எதிர் வீட்ல ஏன் வந்த ?

உன்ன பார்த்தோம் ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம் நொறுங்கி நூலனோம்

கண்டு மகிழ காணொளி :


நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)