இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

தமிழா வாராய் !!

வென்றொம் நாமென்று நன்றே ஆடிடலாம்!

– இரா.கோபாலகிருஷ்ண்ன்




தமிழா வாராய் !

வென்றோம் நாமென்று நன்றே ஆடிடலாம் !

ஆங்கிலன் அகன்றபின் அதகாரம் மாறியதால்

சோதனை ஏற்பட்டு சுதந்திரம் இழந்துநின்றோம்

சாதிக்க முயற்சித்தோம் சாலைகளில் முழக்கமிட்டு

முழங்காலை முறித்தார்கள் முரட்டுச் சிங்களர்கள்

மழுங்கர்களின் எண்ணிக்கை அதிகமே ஆனாலும்

கலங்காமல் முயற்சித்தோம் கனலாகி ஆயுத்த்தால்

மோதலில் சிதைத்தார்கள் மொட்டுகளையும் சிட்டுகளையும்

ஆதனிலால் புலியானோம் அதிரடியாய்ப் பாய்ந்தோம்

வலியாய் மாறியது வன்மையின் முடிவினிலே .

இன்றோ கண்ணகியாய் கரிக்கின்றோம் கவிதைகளில்

“ என்றோ மண்ணாவாய்,சிங்களனே சிதறுவாய்,

கொன்றே தீரும் என்சாபம்:” என்றெல்லாம் கொதிக்கின்றோம்

நன்றே சிந்திப்பீர்! நாம்வாழ வழிகாண்பீர் !

வென்றோம் நாமென்று நன்றே ஆடிடலாம்!



அமிழ்து தமிழென்றால் அதைக்கொணர்வோம் மத்தாலே

எமது இனமெல்லாம் எடுப்போம் ஒருசபதம்

“நமதுசாதி தமிழ்ச்சாதி இது ஒன்றே” என்றே

நம்புலவன் பாரதியின் பாலம் அமைப்போம் !

எங்கழீழ இனம்சேர்ந்து எழுந்து புதுமாநிலமாய்

அங்கமாய் அலங்கரிப்போம் அன்னை பாரத்த்தை-

சங்கதியாய் எத்துறையும் எம்கையில் வரும்வண்ணம்

படிப்படியாய் சாதிப்போம் பாரத்த்தில் பலம்பெருவோம்

கொடிய சிங்களனைக் குனிந்து நோக்கும்நிலை

கொடியினிற் காய்போல விளையும் வருங்காலம்-அப்போது

வென்றோம் நாமென்று நன்றே ஆடிடலாம் !

வழிதெரிந்த பின்னாலும் விழிபிதுங்கி நில்லாமல்

தெளியுறுவோம் !தேம்பாமல் தமிழீழ் மாநிலத்தைப்

பயிரிடுவோம் வாரீர் பாரத்க் கொடியேந்தி!

வென்றோம் நாமென்று நன்றே ஆடிடலாம்!






தமிழா வாராயின் ப்டிஃப் வடிவத்தை தரவிறக்கம் செய்ய ,


நேர்மை தோற்கலாம்
நிர்கதியாய்ப் போகலாம்
என் இன மாந்தர்கள்
எத்தனையோ இழந்தாலும்
இன்னும் கிடைக்காத ஈழம்
கானலாய்ப் போகாது
2010ல் ஈழம் கிடைக்க
என் இதயம் கசியும் ப்ரார்த்தனைகள்,



வாழ்க தமிழினம்...உருவாகும் தமிழீழம்,

கவிஞர் தாமரையின் கவிதைகள் + அவர் எழுதிய பாடல்களும் PDF வடிவில்

கவிஞர் தாமரையின் கவிதைகள் + அவர் எழுதிய பாடல்களும் ;




இவரின் கவிதைகள் சிலவும் , பாடல்கள் சிலவும் எனக்கு கிடைத்த வரை சேகரித்து

உங்களுக்காக ப்டிஃப் வடிவில் தந்திருக்கிறேன் ,இன்னும் சேகரிப்பு தொடர்ந்து

நடைப்பெற்றுக்கொண்டே இருக்கிறது ,அவரது கவிதைகள் கிடைத்தால் மின்னஞ்சலில்

அனுப்பவும்


தவறு இருந்தால் மன்னிக்க & சுட்டி காட்டுக ,

தொடர்புக்கு : thangamari2007@gmail.com


இது வரை சேகரித்த கவிதைகளும் பாடல்களும் தரவிறக்கம் செய்ய” தாமரை’யை “ , கிளிக்கவும்

நான் ஜெயிலுக்கு போறேன் , ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறென்

நான் ஜெயிலுக்கு போறேன் , ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறென்




நான் அப்படியே தினமலர் பேப்பர் பக்கம் போயிக்கிட்டு இருக்கும் போது வந்திச்சி
இந்த செய்தி & அப்புறம்தமிழ் 2 நண்பர்கள்அங்கையும் இந்த செய்தி போட்டாங்க

அவங்களுக்கும், இவங்களும் நன்றி

அப்புறம் நம்ம தலைவர் ஜெயிலுக்கு போறது இது ஒன்னும் புதுசு கிடையாதே , ஆமா

இதுவரைக்கும் அவர் எத்தன முறை ஜெயிலுக்கு போயிருப்பார் ?

யாருக்காவது தெரியுமா ?

வானத்தில எத்தன நட்சத்திரம் இருக்கு ?

சூரியனின் சுட்டெரிக்கும் ஒளி சூரியனுக்கு எங்கிருந்து கிடைக்குது ?

நிலா பூமிக்கு வெளிச்சம் கொடுக்க எத்தன நாள் சார்ஜ் பண்ணினா எத்தன நாள் நல்ல

வெளிச்சம் கொடுக்கும் ?

பூமி தன்னைத்தானே எத்தன முறை சுத்தி இருக்கு அப்படி இருந்தும் அதுக்கு கிறக்கம்,

மயக்கம், தலை சுற்றல் வரலையே ஏன் ?

இந்தியா எப்ப வல்லரசு நாடாகும் ?

(அண்ணண் விஜயகாந் ஒரு முறை ஆக்கி இருக்கார்ன்னு சொல்லக்கூடாது, சொன்னா அண்ணிக்கிட்ட போட்டுக்கொடுத்துருவேன்  )

இந்தியா கிரிக்கெட்’ல எப்ப வேல்ட் கப் வாங்கும் ?

நாம எப்ப அடுத்தவங்க பார்த்து அவங்க அப்படி இருக்காங்க இப்படி இருக்காங்கன்னு
பேசுறத நிப்பாட்ட போறோம் ?

இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ?? முடியாதுல ... அதே மாதிரி தான் நம்ம தலைவரும் :)



செந்தில் : அண்ணே எனக்கு ஒரு சந்தேகமுண்ணே ?

கவுண்டர் : என்னடா அர மண்டையா ?

செந்தில் : வைகோ ஏன்னே அடிக்கடி ஜெயிலுக்கு போறார் ?


கவுண்டர்: டேய் போண்டா வாயா , இதெல்லாம் அரசியல சகசமுடா நாளைய

சரித்திரத்தில வரும் , சிலை வைப்பாங்க, வரும் கால சந்ததியினர் படிக்க பாட

புத்தகத்துல வரும் , ஹெ ஹெ ஹெ 


செந்தில் : சரி விடுங்க அடுத்து ஆரு வெளில வர போறா, இல்ல உள்ள போக போரானு
பாப்போம் ,

கவுண்டர் : இன்னும் எதிர்க்கட்சில இருந்து ஒரு எதிர்ப்பும் வரலையேடா???

செந்தில் : அவங்க என்ன சொல்லணும் ?

கவுண்டர் : டேய் தயிர்சட்டி மண்டையா அவங்க வந்து எதாச்சும் சொல்லனும்டா இங்க பாரு இவங்க ஆளும்கட்சில இருந்தா , அவங்க எதாச்சும் சொல்லனும், அவங்க ஆளும்கட்சில இருந்தா இவங்க எதாச்சும் சொல்லனும் அது தான்டா அரசியல் தருமம்.............

இப்படி ரெண்டு பெரும் பேசிட்டு பத்திரிக்கைய திருப்புறாங்க ,.. நாமளும் பாப்போம்

தலைவர் புத்தாண்டுக்கு கரெக்டா உள்ள போய்ட்டாரே

சரி விடுங்க பாஸ் ,,, கலிங்கத்து புலி கூண்டுக்குள்ள இருந்தாத்தான் நல்லதுன்னு நினைச்சிருப்பாங்களாக்கும் :)


தலைவருக்கும் & தமிழனுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

கவிஞர் தாமரையின் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசைகள் !!

"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்க வேண்டும், தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதை என் வாழ்நாளுக்குள் பார்க்க வேண்டும். நான் எந்தத் துறையில் இருந்தாலும் என் பயணம் இந்த ஆசையை உள்ளடக்கியதாகத் தான் இருக்கும்" 10 ஆண்டுகளுக்கு முன்பாக கவிஞர் தமாரை தமிழ் இணைய சஞ்சிகையான ஆறாம் திணைக்கு வழங்கிய பேட்டியொன்றில் இப்படி தெரிவித்திருந்தார்.


கவிஞர் தமாரை

சூரியாவின் நடிப்பில் தற்போது உலகெங்கும் வெற்றி நடை போடும் "வாரணம் ஆயிரம்" திரைப்படத்தில் பல பாடல்களை எழுதியுள்ள கவிஞர் தாமரை, இன்று தமிழகத்தின் முன்னணி திரை கவிஞர்களில் ஒருவர்.

கவிஞர் தாமரை தமிழ் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர். பாடலாசிரியராக ஆக வேண்டும் என்ற இலட்சியத்தில் பொறியாளராகத் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர் .

"உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" படத்தின் 'மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே' பாடலின் மூலம் கவிஞர் தாமரை பிரபல்யம் பெற்றுக்கோண்டிருந்த சமயத்தில், ஆறாம் திணை தமிழ் இணைய சஞ்சிகையில் கவிஞர் தாமரையுடனான இப் பேட்டி பிரசுரிக்கப்பட்டது:

கே: திரைப்படப் பாடலாசிரியராக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் தோன்றியது?

ப: பள்ளிநாட்களிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த செயல் புத்தகங்கள்வாசிப்பது தான். உண்பது, சுவாசிப்பது போல் வாசிப்பதும் ஆகிவிட்டது. அப்புறம் திரைப்படங்கள் பார்ப்பதும், திரைப்பாடல்கள் கேட்பதும் மகிழ்ச்சியான விஷயங்களாக இருந்தன. புத்தக வாசிப்பின் வெளிப்பாடுதான் நான் எழுத்தாளரானது. பாடல்கள் கேட்டதன் எதிரொலி திரைப்படப் பாடலாசிரியரானது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் சில பாடல்களை நான் மெய்ம்மறந்து ரசித்த போது, '' நான் ரசிப்பது போல் மற்றவர்கள் என் பாடல்களை ரசிக்க வேண்டும்" என்ற ஆசை விதை மனதிற்குள் விழுந்தது. பிற்பாடு அது வளர்ந்து மரமானது.

கே: திரைப் படத்துறை இரும்புக் கோட்டைகள் கொண்டது. உள்ளே நுழைவது கடினம். இது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? தெரிந்து தான் வந்தீர்கள் என்றால் என்ன தைரியத்தில் வந்தீர்கள்?

ப: 'கடினம்' என்பதால் விரும்பிய விஷயத்தை அடைய முயற்சி செய்யாமல் இருக்க முடியுமா? நாம் என்னவாக ஆகப் போகிறோம் என்றெல்லாம் ஒருவருக்கு ஏற்கனவே தெரிந்து விட்டால் வாழ்க்கையில் முயற்சியும் இருக்காது, முன்னேற்றமும் இருக்காது, சுவாரஸ்யமும் இருக்காது. 'முயல்தல்' என்பது வாழ்வு இயக்கத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறேன்.

கே:ஆரம்ப நாள்களில் வாய்ப்பு கேட்டு என்னென்ன விதங்களில் முயற்சி செய்தீர்கள்? முதல் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

ப: அப்போது திரைத் துறையைப் பற்றி எனக்கு நேரடியாக எதுவும் தெரியாது. பத்திரிகைத் தகவல்கள் தான் நான் அறிந்த திறையுலகம்.சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு வாய்ப்புத் தேடி கோவையிலிருந்து முதல் முறையாக சென்னை வந்தேன்.சில பிரபல இயக்குநர்கள், இசையமைப்பாளர்களின் முகவரிகள் கையில் இருந்தன.ஒவ்வொருவர் வீடு, அலுவலகமாக சென்று சந்திக்க முயன்றேன். சிலரை சந்திக்கவும் செய்தேன். சொல்லி வைத்தாற் போல் எனக்குக் கிடைத்த பதில் 'பிறகு சொல்லி அனுப்புகிறோம்' என்பது தான்.

ஆனால் அறிமுகம் இல்லாத இந்த சென்னை நகரில் தனியாக ஹோட்டலில் தங்கிக் கொண்டு, ஒவ்வொருவராகச் சென்று பார்ப்பது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. சென்னையிலேயே தங்கினாலொழிய வாய்ப்பு கிடைக்காது என்பதை, கோவை-சென்னை பயணக் காட்சி சில முறைகள் நிகழ்ந்த பிறகே நான்அறிந்து கொண்டேன். பொருளாதார சூழ்நிலையும், குடும்பச் சூழ்நிலையும் இதற்கு இடம் கொடுக்காத நிலையில் என் ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு ஏமாற்றத்தோடு கோவைக்குத் திரும்பி விட்டேன். அதன் பிறகு இலக்கியத் துறையில் முழுக் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

கதைகள், கட்டுரைகள், கவிதைகள் நிறைய எழுதினேன்.இவை நிறைய இலக்கியப் பரிசுகளை பெற்றுத் தந்தன.பத்திரிகை உலகில் என் பெயர் பிரபலமானது. இந்தக் கால கட்டத்தில் தான் நான் வென்ற பரிசுகள் வாங்க அடிக்கடி சென்னை வந்து போனதில் பல அறிமுகங்கள் கிடைத்தன.இப்போது முன்பு போல் சென்னைப் பயணம் மலைப்பாக இல்லை.

ஒரு முறை இசையமைப்பாளர் ஆதித்யனை சந்தித்த பொழுது அவருடைய 'தமிழ் பாப் பாடல்' ஒலி நாடாவிற்கு ஒரு பாடல் ஏழுத வாய்ப்புத் தந்தார். சந்தர்ப்பம் வரும் போது திரைப்படத்தில் எழுத வாய்ப்புத் தருவதாக சொல்லி இருந்தார்.

இந்த சமயத்தில் என் வாசக நண்பர் ஒருவர் நீண்ட நாள்களுக்குப் பிறகு எனக்குக் கடிதம் எழுதி நட்பைப் புதுப்பித்தார். அவரைக் கல்லூரி நாள்களிலிருந்தே கடிதம் மூலம் அறிவேன். என் படைப்புகளை விமர்சனம் செய்து எழுதுவார். அவர் வேலைநிமித்தம் இந்தியாவெங்கும் சுற்றி கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். மனோகர் என்ற அந்த நண்பரை பத்துவருடங்களாக அறிந்திருந்தும் நேரில் சந்தித்ததில்லை. அவர் தன்னுடைய திரைப்பட நண்பரான மோகனை சந்திக்குமாறு சொன்னார். நண்பர் மோகனை நான் சந்தித்த போது அவர் இயக்குநர் சீமானை எனக்கு அறிமுகம் செய்தார். சீமான் என் கவிதைகளைப் படித்து என்னைப் பெயரளவில் அறிந்திருந்தார். அப்போது 'இனியவளே' படம் ஆரம்பித்திருந்த நேரம். ஐந்து பாடல்கள் முடிந்து ஆறாவதாக ஒரு பாடல் வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். மூன்று நாள்கள் கழித்து திடீரென்று எனக்கு அழைப்பு வந்தது. ''இந்தப் பாடலை நீங்கள் எழுதுங்கள்" என்று திடீரென்று அவர் சொன்னதும் என்னால் நம்பவே முடியவில்லை.

'தென்றல் எந்தன் நடையைக் கேட்டது
தத்தோம் தகதோம்' என்ற பாடலின் மூலம் இப்படித்தான் அறிமுகமானேன்.


கே:பொதுவாக சினிமாவின் எந்தத் துறையிலும் நுழைவதே கடினமானது. பெண்ணாய் இருந்து நுழைந்ததில் கூடுதல் சிரமம் இருந்ததா?

ப: பெண்ணாக இருப்பதால் உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் எனக்கும் இருந்தது. பொதுவாக சினிமாவில் சேர வேண்டுமென்றால் ஆண்கள் அடுத்த இரயிலைப் பிடித்து சென்னை வந்து இறங்கி விடுவார்கள். வாய்ப்பு கிடைக்கும் வரை சென்னையிலேயே இருந்து முயற்சி செய்வார்கள். அப்படியெல்லாம் 'ஓடிவர' என்னால் இயலவில்லை. அவகாசம் கிடைக்கிற போதெல்லாம் சென்னை வந்து முயற்சி செய்வதும், திரும்பி செல்வதுமாக இருந்தேன். எனவே தான் என்னுடைய அறிமுகம் தாமதமானது. சென்னையிலேயே இருந்திருந்தேன் என்றால் நான்கு வருடங்களுக்கு முன்பே அறிமுகமாயிருப்பேன்.

கே:உங்கள் வீட்டில் யாரும் உங்கள் விருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?

பொதுவான எதிர்ப்பு இருந்தது. காரணம் அச்சம் தான். கோவையை விட்டு தனித்து எங்கும் சென்று பழக்கமில்லாதவள் நான். சென்னைப் பயணம் என்பதே எனக்கு பிரமிப்பாக இருக்கும். சொன்னால் நம்பமாட்டீர்கள் - இரயிலில் என் பெட்டியைக் கண்டுபிடித்து ஏறுவதற்குள் எனக்கு இமயமலை சிகரத்தைத் தொட்ட களைப்பு ஏற்பட்டு விடும். என்னை சென்னை அழைத்து வரவோ, என்னுடன் தெருத்தெருவாக அலையவோ வீட்டில் யாரும் தயாராக இல்லை. ஆனால் எனக்கு வீட்டில் சிந்தனை சுதந்தரம் உண்டு. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு நண்பர்களின் உதவி பெற்றே என் காரியத்தை சாதித்தேன். ஆக என் பிடிவாதம் தான் என் இன்றைய நிலைக்கு முதல் காரணம்.

கே:திரைப்படப் பாடலாசிரியராக இருக்க விசேஷ பயிற்சிகள் ஏதும் மேற்கொள்கிறீர்களா?

என்னை மிகவும் கவர்ந்த பாடல்களுக்கு என் சொந்த வார்த்தைகளைப் போட்டு பாடிப்பார்க்கும் பழக்கம் நீண்ட நாட்களாக இருந்தது. அதுதான் நான் செய்த ஒரே பயிற்சி. பின்பு 'எழுச்சிப் பாடல்கள்' என்ற தலைப்பில் ஒரு சட்டநிறுவனத்திற்காக ஆறு பாடல்கள் எழுதிய அனுபவம் பாடல்பதிவுத் தொழில் நுட்பத்தையும், நடைமுறையையும் அறிந்து கொள்ள உதவி செய்தது. திரு. ஆதித்யனிடம் எழுதிய போது என்னால் உடனுக்குடன் மெட்டுக்கு எழுத முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. அவ்வளவு தான். மற்றபடி விசேஷ பயிற்சி எதுவும் இல்லை.

கே:இங்கிருக்கிற மற்ற பாடலாசிரியர்களுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது?

ப: பெரும்பாலும் எல்லோரையும் எனக்கு அறிமுகம் உண்டு. 'நல்ல நட்பு' என்று சொல்கிற அளவிற்கு யாரோடும் பழக்கமில்லை. கவிஞர் அறிவுமதியோடு மட்டும் நல்ல தொடர்பு உண்டு. இனிமையான, நல்ல சுபாவமுடைய அவரது நட்பு எனக்கு திரைத்துறையில் காலூன்ற நல்ல ஊக்கம் கொடுத்திருக்கிறது.

உங்கள் பாடலாசிரியர் வாழ்க்கையில் ஒரு முக்கிய சம்பவம்...

பொதுவான நிகழ்ச்சிகள் தாம்! குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எந்த அசாதாரண நிகழ்ச்சியும் நடக்கவில்லை.




கே:உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

ப: எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அந்தத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்பது குறைந்த பட்ச ஆசை! -லக்கியத் துறையில் என் பெயர் நிலைக்கும்படி நல்ல படைப்புகள் தர வேண்டும். திரைத் துறையைப் பொறுத்தவரை, 'வந்தார், போனார்' என்றில்லாமல் பட்டுக்கோட்டை, கண்ணதாசன் வரிசையில் என் பெயரும் சேர வேண்டும்.

ஆனால் என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்க வேண்டும், தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதை என் வாழ்நாளுக்குள் பார்க்க வேண்டும். நான் எந்தத் துறையில் இருந்தாலும் என் பயணம் இந்த ஆசையை உள்ளடக்கியதாகத் தான் இருக்கும்.

கணவருக்கு மனைவியாகவும், திரைத்துறைக்கு பாடலாசிரியராகவும் ஒரே நேரத்தில் இருப்பது கடினமாயிற்றே.. எப்படி சமாளிக்கிறீர்கள்...

இப்படியும் சொல்லலாம் தன் குடும்பத்திற்காக கணவன்மார்கள் பல வருடங்கள் வெளிநாடு சென்று பணிபுரிவதில்லையா? அப்போதெல்லாம் மனைவிகள் கேள்வி கேட்காமல் அந்தப் பிரிவினைத் தாங்கிக் கொள்கிறார்களே! ஓர் ஆணிடம், ''ஒரே நேரத்தில் மனைவிக்குக் கணவனாகவும், பணியில் சிறந்த ஊழியராகவும் எப்படி இருக்க முடிகிறது?" என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. வாழ்க்கையில் ஏதாவதொன்று வேண்டுமென்றால் இன்னொன்றை இழக்க வேண்டி வரும் என்பது எனக்குத் தெரியும். சொந்த ஊர், குடும்பம், நண்பர்கள் - எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து சென்னையில் பாடல் எழுத வேண்டுமென்றால் அது எனக்கு ஒருவிதமான இழப்பு தான். ஆனால என் சிறு வயது கனவு நிறைவேறுகிறதே! 'Professional' பெண்கள் என்றால் கூடுதலாக இந்தச் சிக்கலை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.


கே:உங்களுக்குப் பிடித்த உங்களுடைய ஒரு கவிதை சொல்லுங்களேன்?

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்...

கசப்பாக இருந்தது
அம்மா அப்பாவையும்
ஆற்றோர கிராமத்தையும்
நூறுமைல் தூரத்தில்
விட்டுவந்து
அப்படியென்ன படிப்பு?

விடுதி
சென்ம விரோதியாயிற்று...
காற்றடித்து என்
பிறந்தமண்ணை அள்ளி
வந்து போட்டதால்
சன்னல் மட்டும்
சிநேகிதியாயிற்று...


வாரம் இருமுறை நானும்
மும்முறை பெற்றோரும்
வந்து போனோம்...
ஆனாலும்
இதென்ன படிப்பு
இதென்ன வாழ்க்கை...?

குறைந்தது நூறுமுறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும், கடந்த
காலத்தையும், வந்து
அழைத்துப் போய் கலையும்...

திடீரென்று எனக்குள் ஒருகதவு
அறைந்து திறந்தது
என் அறைக் கதவு
திறந்தது போலவே...

அறைத் தோழியாய் வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது.
யாழ்ப் பாணத்துக் காரியாம்!

இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்...

என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
''அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்திவிட்டேன்
அடுத்தமுறை அங்கே
வரும்போது
ஒரு சிநேகிதியை அழைத்து
வருவேன்...
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி..." - தாமரை

தமிழ் நண்பர்களின் நவின திருவிளையாடல்

எனது நண்பர்கள் கதை , கவிதை , மட்டும் அல்ல , மொக்கைகளையும் மொக்கை இல்லாமல் மொக்கை போடுவார்கள் அதற்க்கு சான்று இந்த நவீன திரு விளையாடல் , மிக அழகாக எளிய நடையில் எழுதியுள்ளார் நண்பர் பிரசாத் ..

பாருங்க நீங்களும் படிச்சி மகிழவும் ...



பிரசாத்தின் திருவிளையாடல்


யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகவும் பெற ...

நண்பரின் எளிதாக ஆங்கிலம் கற்க வாங்க PDF வடிவம் !!!!

வாங்க ஆங்கிலம் கத்துக்கிடலாம் :


இது வரை நாம தனி தனி பாடமா பாத்து வந்து கொண்டு இருந்த வாங்க ஆங்கிலம் கற்கும் பாகங்கள் இப்போது PDF வடிவில் உங்களுக்காக ...


இந்த வகுப்பு தமிழ் 2 நண்பர்கள் என்ற குழுமத்தில் உள்ள நண்பரால் நடத்தி வரப்பட்டது ,


நண்பரின் பெயர் திரு :கோகுல் குமரன்


இவரை பற்றி சொல்ல வேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலாம் , இவர் ஒரு அஞ்சா நெஞ்சர் , பீ(பி)ட்(டு)டர் மன்னர் ,செயல் வீரர்,படங்களின் அதிபதி , படம் எடுப்பதிலும் அதிபதி , எதிரி களை (அது தாங்க ).,, வெளிநாட்டுக்காரர்களை ஒரு வார காலம் ஆனாலும் நேருக்கு நேர் எதிக்கொள்ளும் போர் குணம் கொண்ட போர்வாள்

குழுமத்தில் யாராவது ஆங்கிலத்தில் கடுப்பாக பேசினாலும் அவர்களின் இலக்கண பிழைகளை திருத்தும் திறமை படைத்தவர் ...! அருமையாக பிட்டு ஜோக்குகளை அள்ளி அள்ளி தருபவர் ...



சரி இப்போதைக்கு இது போதும் , இல்லாட்டி இவரு எனக்கு ஒரு பெரிய கிளாஸ்'ஸே எடுத்து விடுவார் ,


அந்த பிட்டு ஜோக்குகளின் பிடிஃப் வடிவமும் இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம் ,




சரி இந்த PDF வடிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும் :)



1.கோகுலின் வாங்க ஆங்கிலம் கத்துக்கலாம்




2.கோகுலின் பிட்டு ஜோக்ஸ்







. தென்னாடுடைய சிவனே போற்றி ..

நண்பர்களின் கவிதைத்தொகுப்பு

வணக்கம் நண்பர்களே ,

நான் ஒரு புது முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன் , என்னோட நண்பர்கள் (" தமிழ் 2நண்பர்கள் "& தமிழ்த்தென்றல்" ) கதை , கவிதைகளையும் தொகுத்து உங்களுக்காக PDF வடிவில் தர உள்ளேன் ,



அதன் முதல் கவிதைத்தொகுப்பு இங்கே ...



நண்பர் இமலாதித்தன் அவர்களின் கவிதைகளை தொகுத்துள்ளேன் ,


கவிதைகளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும்

தமிழ் வாசல்

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?