இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

சிறுத்தை-வெமர்சனம்

சிறுத்தை – எட்டுக்கால் பாய்ச்சல் :


சிங்கம் - சிறுத்தை, அண்ணன் – தம்பி,
சூர்யா - கார்த்தி




ரொம்ப நாளுக்கு அப்புறமா ஒரு காமடியான அதிரடியான திரைப்படம் , கார்த்திக்கு இந்த வேடம் சரியா ஒத்துப்போயிருக்கு’னு தான் சொல்லனும்.அவுக அண்ணன் சூரியா மாதிரி இரட்டை வேடத்தில அவ்வளவு மாறுபாடு காட்டலனாலும் மிரட்டிருக்கார் நம்ம கார்த்தி. போலீஸ் உடை இவருக்கு அவ்வளவு எடுப்பாக இல்லாட்டியும் ,மப்டியில் வரும் உடை செமையா இருக்கிறது கார்த்திக்கு , காமடியாக ஒட்டிக்கொண்டு வரும் காட்டுப்பூச்சி சந்தானமும் ராக்கெட் ராஜா கார்த்திக்கு ஒத்துப்போகிறார், கவுண்டரை அடிக்கடி நினைவு படுத்துக்கிறார் சந்தானம். சந்தானத்துக்கு பெண் வேடமும் ஒத்து வருகிறது என்றே கூற வேண்டும்.



பெண் வேடத்தில் சந்தானம் சூப்பராக நடித்திருக்கிறார் , நடித்திருக்கிறார் ( சிலர் கேட்டுக்கொண்டத்துக்கிணங்க )



ஆரம்பத்தில் ஆண்டிக்கு மொட்டையடிக்க ஆரம்பித்து கடேசியில் வில்லர்களை மொட்டையடிக்கும் வரை அமர்க்களம்(தல படமில்ல) இன்பார்மர் சொன்ன சேட்டு கல்யாணத்தில் களவாங்கப்போகும் ராக்கெட்டும் ,காட்டுப்பூச்சியும் தனித்தனியே களவாங்க அக்கிரிமெண்ட் போட்டு போவதும் ,அங்கே கண்ணா லட்டு திங்க ஆசையாவும் , வீட்டம்மா(வீட்டின் சொந்தக்காரரின் மனைவி) சாவியை கொடுத்திட்டு பக்கத்து ரூமில் நகையிருப்பதாக சொன்னவுடன் ”கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா’னு” சொல்லுவதும் காமடி. தமன்னாவுக்கு வெட்கத்துடன் தனது முகத்தை காட்டவும்(இதுக்கு முன்னாடி ஹீரோயின் தான் இப்படி காட்டுவாங்க , அதுவும் இந்தளவுக்கு வெட்கம் கலந்த புன்னகையுடன் காட்டியதில்லை என்று சொன்னால் அது மிகையாகாது) திருடிச்செல்லும் காட்டுப்பூச்சியை பிடித்துக்கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கொள்ளும் ராக்கெட்டை காட்டுப்பூச்சி பார்க்கும் போது ரேடியோவில் “நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு”மறுமலர்ச்சிப்படப்பாடலை ஒளிப்பரப்புவது டைமிங் காமடியே. என்ன வேலை செய்றீங்க’னு தமன்னா கேக்கும் போது மழுப்புவது கார்த்தியின் நேர்த்தி . இடை இடையில் மிமிக்கிரி செய்யவும் தவறவில்லை.


ஆரம்பத்தில் சிரித்த முகத்துடன் வரும் கார்த்தியா சிறிது நேரத்தில் IPS ரத்தினவேல் பாண்டியனா விஸ்வரூபமெடுத்து தாண்டவம் ஆடுகிறாரென்று திகைக்க வைக்கிறார் கார்த்தியுடன் சேர்ந்த இயக்குனர். வேகமாக அடிதடியில் இறங்கும் ரத்தினவேல் பாண்டியன் வேகமாகவே வில்லனின் தம்பியால் குத்துப்பட்டு சாகும் நிலைக்கு போகவும் அவரின் ஏற்கனவே தாயை இழந்த குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல்,ராக்கெட் ராஜாவாக வரும் கார்த்தியை சிக்க வைக்கிறார்கள் இவர்களின் வலைக்குள். பின்னர் அவரும் இடை இடையில் வந்து ஒரு சண்டையை ராக்கெட்டின் முன்னால் நிகழ்த்தி அடிப்பட்டு இறந்தும் போகிறார் IPS ரத்தினவேல் பாண்டியன். இவரைப்போலவே உள்ள கார்த்தி தனக்கே உரித்தான ஸ்டைல்லில் வில்லனை காலி பண்ணுகிறார் ,மிகவும் நகைச்சுவையோடு , சில இடங்களில் ஜாக்கிஜானையும் மனதில் நிறுத்துகிறார்.

படத்தில் தமன்னாவின் இடுப்பை காட்டுவதை குறைத்திருக்கலாம்.



தற்போது நடக்கும் உண்மை விசயத்தை , ஒருவர் போனை சுட்டது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருப்பது ,அவரின் ஆர்வக்கோளறு என்பதை எடுத்துக்காட்டிருக்கிறார்கள். (அந்த ஒருவர் காதல் படத்தில் (எப்படி ? ஸேட்டா ஹீரோவா’னு கேப்பாரே அவரு தான்)


IPS கார்த்திக்கு நல்ல வசனங்கள்,அதனை அவர் உச்சரிக்கும் விதமும் அழகு. உதட்டில் சிரிப்பும் ,கண்ணில் கனலையும் காட்டிருப்பார் கார்த்தி.முறுக்கு மீசையழகு.IPS க்கு உண்டான திமிரை இன்னும் காட்டிருக்கலாம்.

அந்த குட்டிப்பாப்பாவின் மழலைப்பேச்சழகு.



ஜாலியா காமடி , ஜாலியான ரூயட்ஸ் , ஜாலியான கதை,ஜாலியான சண்டை ,கொடுமையா வில்லர்களை(மரியாதைங்க) ஜாலியா ஒழிக்கிற ,அழிக்கிற ஜாலியான சிறுத்தை .


வாங்க பார்க்கலாம் ...................

பசி

பசி :


திடீரென்று இடித்த இடியில் மிரெண்டெழுந்தான் மாரி , கோயிலுக்கு போனவள இன்னும் காணுமே’னு அவனுக்குள் இருந்த பதட்டமே இதற்கு காரணம். ஈஸ்வரியும் மீனாக்காவும் கோயிலுக்கு போவதா சொல்லிட்டு போனாங்க’னு மீனாக்காவோட மக கார்த்திகா சொல்லித்தான் தெரிஞ்சிக்கிட்டான் மாரி. இன்னைக்கு மாதாந்திர வெள்ளி , வழக்கமா மாரி தான் அவள கூட்டிட்டு போவான் ,வெள்ளன வீடு வர முடியல , நாலு நாள நல்ல மழையா பெய்வதினால் நெல்லு வயலுக்குள் இருந்த தண்ணீரை விலகி விட்டுட்டு எல்லா வாய்க்காலையும் அடைச்சிட்டு தண்ணி தங்கவிடாம வெளியேறுதானு பாத்திட்டு வர தாமதம் ஆயிருச்சி , எட்டு மணிக்கெல்லாம் நடை சாத்திருவாங்க’னு இவனுடைய பொண்ணாட்டி கோயிலுக்கு போரேன்’னு பக்கத்து வீட்டு கார்த்திகாட்ட சொல்லிட்டு அவுக அம்மா மீனா கூட கோயிலுக்கு போயிருக்கா’னு தொப்பளா நனைஞ்சி வந்த மாரிக்கு கிடைத்த தகவலையும் நெனச்சிக்கிட்டே, மணியும் ஏழேமுக்கால் ஆச்சி இன்னும் ஆளக்காணுமே’னு இவன் துணியக்கூட மாத்தாம ஈரத்தோட சுவத்துல சாய்ந்திருந்தவன் அப்படியே அசந்து தூங்கியும் போனான். வயக்காட்டில் அங்கும் மிங்கும் அலைந்து மதியம் சாப்பிடக்கூட நேரமில்லாமல் பசி தான் அவனை தூங்க வைத்திருக்க வேண்டும்.


மாமா ....மாமா...என்று புன்னைகையுடன் எழுப்பியவள் ஈஸ்வரி

இன்னைக்கு என்ன இவ்ளோ லேட் ஈஸ் ?தூக்க கலக்கத்துடன் கேட்டான் மாரி

குடையை எடுத்திட்டுப்போக மறந்திட்டேன் மாமா ,அதுதான் மழை நிக்கும் வரைக்கு கோயில உக்காந்து இருந்தோம் ,

நீ ஏ மாமா மத்தியானம் சாப்பிடக்கூட வராம சாய்ந்திரமும் இவ்ளோ நேரமாயிருச்சி ? உனக்காக எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ?


அடிபோடி இவளே , பக்கத்துக்காட்டுக்காரன் தண்ணிய வெளகி இந்தப்பக்க வாய்க்காலுல விட்டுட்டான், நம்ம வயலுல மூணு குண்டு பள்ளத்துல கெடக்கா தண்ணிக்காடு வாமடைய உடைச்சிட்டு நம்ம வயலுக்குள்ள போயிருச்சி , அத நம்ம கருவாயன் காட்டுவழியா வெளகி விட்டு அந்த வாய்க்காலுக்கு கொண்டுபோக போனா வாய்க்காவரப்பெல்லாம் கொடியும் ,முள்ளும் படந்து அடர்ந்து இருந்துச்சி பின்ன வாய்க்கால செதுக்கி கொண்டுபோய் விட்டுட்டு திரும்பிப்பார்த்தா கருவாயன் வந்திட்டான்.அவன்க்கிட்ட கதைய சொல்லி சமாளிக்க போதும் போது’னு ஆயிடுச்சி ஈஸ்’னு சொன்னவன் காலப்பார்த்தவளுக்கு தூக்கிவாரியது என்னது மாமா இரத்தம் ?

அதுதான் சொன்னேனே ,வாய்க்கா செதுக்குனோம்’னு எங்கையாவது இடிச்சிருக்கும் , சரி

குளிச்சிட்டு வாரேன் , என்ன குழம்பு இன்னைக்கு ?

வெள்ளிக்கிழம என்ன வைப்பாங்களாம் ? சாம்பார் தான் மாமா சிரிச்சிக்கிட்டே சொன்னவ , வாளி’ல தண்ணி வைச்சாள்.மாமா சுடு தண்ணில குளிக்க மாட்டார்’னு அவளுக்கு நல்லாவே தெரியும்.

குளிச்சி வந்தவனுக்கு பாசத்தோட சோறு போட்டாள்.

குனிஞ்சி சாப்பிட போனவன் காதுல ஐயா.........’னு குரல்க்கேட்டு நிமிர்ந்தான்.

நீ சாப்பிடு மாமா ,நான் போய் யார்’னு பார்க்கிறேன்’னு எழுந்தவளை நிறுத்தி அது கருவாயன் தான் ஈஸ் , நீ சாப்பிடு,

வெளியே.

ஐயா கம்மாயி’ல மடைய திறந்து விட்டாங்களாம் இது கருவாயன்

கெரகம் புடிச்சவனுங்க இப்ப எதுக்கு திறந்தாங்களாம் , ஒரு வாரத்துக்கு முன்னாடி வயக்காடு காஞ்சி கருவாடா கெடக்கும் போது கேட்டதுக்கு தொறக்காதவனுவ’னு முணங்கிக்கிட்டே திரும்பவம் ஈஸே ஈஸே இந்தா காட்டுக்கு போனதும் வாரோம்’னு சொன்னத கேட்ட ஈஸ் , மாமா மாமா’னு கூப்பிட்டுக்கிட்டே வெளியே வரும்முன் சைக்கிளை எடுத்திட்டு கருவாயனும் மாரியும் தெருக்கோடியை கடந்திருந்தார்கள். மாமா வரும்’னு மத்தியானமும்
சாப்பிடாமா காத்துக்கிடந்த ஈஸ்க்கும் வயிறு பசித்து தான் இருந்தது.


மழையும் லேசா வெறித்திருந்தது .....


ஏதோ போஸ்ட் பண்ணனும்னு தோணுச்சி , பாத்து படிச்சி சொல்லிட்டு போங்க :) இந்த வருச ஆ’ரம்பம்.

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)