இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

மிக பெரிய கார்கோ கம்பெனிகள்!!!!

மிக பெரிய கார்கோ கம்பெனி!!!!

(எனக்கு தெரிந்த அளவிற்கு!? ஆனால் இது உண்மை )


முதல் இடத்தில் இருப்பது பெடெக்ஸ் (FedEx) ,1978லில் ஆரம்பித்த இந்த நிறுவனம் 1998 ல உலகத்தார் கண்பார்வைக்கு வந்து கடந்த 11 வருஷத்தில் இவ்ளோ பிரபலமாக ஆகி உள்ளனர் ... !

இது இங்கு(ஈராக்ல)உள்ள கிளை அலுவலகம்


இந்த கம்பெனி முயல் மாதிரி , ரொம்ப ஸ்பீட் , சும்மா இல்ல நண்பர்களே ! இவங்க உண்மையாலுமே ரொம்ப வேகமாக அந்த பொருள் போக வேண்டிய இடத்துக்கு சேர்த்து விடுவார்கள், எவ்வளவு நாட்கள் ஆகும்னு தானே கேக்குறிங்க , மூனு நாட்களில் இருந்து ஐந்து நாட்கள் வரை ஆகும் இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் சரி , பொருட்கள் பாதுகாப்பாகவும் ,உத்திரவாதமும் ,இன்சுரன்சும் உண்டு .....

நீங்கள் உங்கள் பொருட்களை உங்கள் அருகில் உள்ள கிளையில் கொடுத்த உடனே அவர்கள் உங்களுக்கு பன்னிரண்டு நம்பர்கள் தருவார்கள் ட்ராக்கிங் நம்பர்(Tracking #) அப்படின்னு சொல்லுவாங்க அத வைத்து நீங்கள் ஆன்லைன்ல உங்க பொருளை பின் தொடரலாம் ...மிக அருமையான தொழில் நுட்பத்தின் உதவி கொண்டு அதனை அடிக்கடி இணையத்தில் தொடர்ந்து அப்டேட்(update) செய்வார்கள்

இது மிக உதவியாக இருக்கும் அது மட்டுமில்லாமல் இந்த பொருள் எந்த தேதியில் அவர்களுக்கு கிடைக்கும் என்று போட்டு இருப்பார்கள் , அப்புறம் அவருக்கு கிடைத்த பின்பு யார் வாங்கியவரோ அவரின் பெயரையும் இணையத்தில் காணலாம்

இந்த நிறுவனத்தில் முயற்ச்சியில் ஏகபட்ட விமானங்களும் மிக அதிகமான வேலையாட்களும் (280,000+ (2009)இவ்ளோ பேரு இருக்காங்க ) உள்ளனர் ..இவங்க 123 க்கு மேற்ப்பட்ட நாடுகளில் தங்களுடைய கிளை வைத்துள்ளனர் ,

சொந்தமாக (வெப்சைட்) இணையதளம் வைத்துள்ளனர், இங்க சென்று உங்கள் பொருள் (pacakage) Tracking பண்ணலாம் ,

www.fedex.com , இதில் எல்லா உதவிகளும் கிடைக்கும்

இவிங்க சொந்தமாக ஒரு விமான நிலையமே வச்சிருக்காங்க ,அதுதான் இது


அப்புறம் இவங்களோட வாகனங்கள் ஒரு பார்வை ....





அவர்களின் விமானம் A310-200











விக்கிபிடியாவில் பெடெக்ஸ் இன் இணைய தளம்

http://en.wikipedia.org/wiki/FedEx

நான் எழுதியது ஒரு பாதிதான் , இன்னும் நெறைய விசயங்க உங்கள் பார்வைக்கு வரும் .....

குழந்தையும் தெய்வமும் 1 (2) !!!

குழந்தையும் தெய்வமும் 2 !!!

அப்புறம் இவர பத்தி உங்களுக்கு தெரிஞ்சே ஆக வேண்டும்...

இவரு தான் ராம்குமார் கூப்பிடுவது குடுக்கை .(டாம்)

இப்ப இவோரோட அறிமுகம் பாப்போமா !!!

இயற்பெயர் :ராம்குமார்
கூப்பிடுவது : குடுக்கை
பிடித்தவை : ?????????
பிடிக்காதவை : யாரையும் அடிக்க முடியாதது ...!
செயல் : நாங்க எங்க போறோமோ....அதே!!!அதே !!


இவர் ஒண்ணாம் வகுப்பு படிக்கிறார் ,இவரும் ரொம்ப ரொம்ப பாசக்காரர் தான் , எங்க போனால்ம் பின்னாடியே வருவது ,அப்புறம் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ,மற்றபடி எல்லா இடத்துக்கும் போறது ,வாறது , நாங்க எத சொன்னாலும் செய்வது , அப்படி பல தனி திறமைகள் இவரிடம் உண்டு ,யாரையாச்சும் கூப்பிட்டு வான்னு சொன்னா போதும் நேர அவங்க விட்டுக்கு போய் கையோட கூப்பிட்டு வருவார் ...(ஹி ஹி பின்ன என்ன எல்லாரும் கைய கலட்டி விட்டுல வச்சிட்டா வருவாங்க! இந்த கேள்வி தோனுமே ,தோணனும் ..)

நாம முன்னாடி பாத்தோமே ஜெர்ரி(வண்டு ) அவருக்கும் இவருக்கும் அடிகடி சண்டை வரும் ஆனாலும் ரெண்டு பேரும் ஒன்னு போல தான் விளையாடுவாங்க ..ஹி ஹி இவங்க ரெண்டு பேரும் பன்னுற சேட்டைய பாத்துகிட்டே இருக்கலாம் அதுல ஒண்ணு உங்களுக்கும் சொல்லுறேன் , கேளுங்க சே பாருங்க ,,,, மண்ணுல போன் செய்து அதுல ரெண்டு பேரும் பேசிக்குவாங்க.. அந்த உரையாடல் வேணுமா!!வேணுமா !!!

நான் தான் ராம்குமார், "ஹாய்" எல்லாருக்கும் "
(பாவிங்க நான் ஒரு சின்ன பையன் நானே ஒரு ஹாய் சொல்லுறேன் நீங்க யாருமே சொல்ல மாட்டுக்கிங்கல, ஹாய் சொல்லாத எல்லாத்துக்கும் சூப்பர் பிகர பாக்கும் போதோ இல்ல போன்ல பேசும் போதோ "ஹாய்" சொல்ல வாய் திக்கட்டும் )



இப்ப புரியுதா, நான் ஏன் இவரோட சிரிப்ப பிடிச்சிருக்குன்னு சொன்னேன்னு ,கைல கார்த்திகை மாச விளக்கு இருந்தாலும் எவ்ளோ அழகா சிரிச்சிகிட்டே இருக்கார்ன்னு ஹி ஹி (நீங்க சிரிப்பது எனக்கும் தெரியும் அத நல்லாத்தான் சிரிச்சி தொலைக்க வேண்டியதுதானே!!! )



இது தை மாதம் 1 தேதி எடுத்த படம் இது , பஜனை குழுல தலைவர் எப்படி நிக்கிறார் பாத்திங்கள ...



முருகா இவருக்கும் நண்பர் தான் .... பாருங்க (ஆனா இவரும் கூட்டாளி தான் , யாருக்குன்னு முதல் பாகத்தை படிச்சா தெரியும் )



பாருங்க நான் தான் சொன்னேனே நாங்க எங்க போனாலும் பின்னாலே வருவார்ன்னு ஹி ஹி



ஒரு பக்கம் கதிர் அருத்துட்டாங்க , இன்னொரு பக்கம் அறுவடை பருவம் சரி இவர் எங்க போறார்னு கேக்குறிங்களா ? ஹி ஹி அந்த பக்கம் கரும்பு காடு இருக்கே , இந்த வயசுலையே கரும்பு ஒடிக்க வாரார், பாத்திங்கள! எங்க தலைக்கு எவ்ளோ "தில்"லுன்னு



ஹா ஹா ஹா ! என்னடா இவன் என் சி சி தலை கவசத்துடன் இருக்கிறானே அப்படின்னு தானே பாக்குறிங்க , ம்ம்ம் அதே தான், அது சும்மா எங்க ஊர்ல ஒரு கல்லுரி மாணவனுடையது அவன் அன்னைக்கு கொஞ்சம் கால தாமதமாக வந்தான் அவன உக்கார வச்சி அவன் பையில வச்சி இருந்தான் அத வாங்கி இவருக்கு வச்சி பாத்தா அய்யோடா எவ்ளோ அழகா இருக்குது ,,,,, நீங்களே பாருங்க !!



ஹி ஹி இங்க பாருங்க , இதுதான் என்னோட பட்டாளம் , அதுல நானும் இருக்கேன் நல்லா பாத்திட்டு உங்க பின்னுட்டம் போட்டு போங்க




(மக்கா படிச்சா மட்டும் போதாது உடனே உங்க கருத்தையும் தெரிவிக்க வேண்டும் ))


நன்றி நான் வரேன் !!

குழந்தையும் தெய்வமும் 1 !!!

குழந்தையும் தெய்வமும் 1 !!!

என்னடா இவன் இப்படி எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டானே அப்படின்னு ரொம்ப பேத்துக்கு தோணுமே, தோணும் ...! தலைப்ப பாத்ததுமே !!! ஹி ஹி
சரி விசயத்துக்கு வ(வா)ருவோமா ....

நான் விடுமுறைக்கு ஊருக்கு போனா அந்த குழந்தைகளுடன் தான் விளையாடுவேன் ..குழந்தையும் தெய்வமும் ஒன்னு அப்படிங்கிறது அந்த காலம் இந்த காலத்து பிள்ளைகள் அய்யய்யோ!!!!!!!!!! எல்லாம் நமக்கு சொல்லி தருது கலி காலம்டா சாமி ...!!!

இங்க கொஞ்சம் பாருங்க எங்க ஊர் சுட்டி குழந்தைகள் என்ன பண்ணுகின்றனர்னு :

முதல வருவது என் பெயர் கொண்ட வாண்டு ....அவன் பட்ட பெயர் வண்டு ...!! ஹி ஹி

இவருக்கு இன்னொரு பேரும் இருக்கு டாம் ..அப்ப ஜெரி யார் ? சொல்லுவோம்ல

இதுதான் அவர் ..!சல்யுட் (சிங்கம்ல

(ஒரு சின்ன பையன் எவ்ளோ அழகா வணக்கம் செலுத்துகிறான் , உங்க கைல என்ன நெக சொத்தையா !!! ம்ம்ம் அடிங்க ... ஹலோ ஹலோ சல்யுட் மட்டும் தான் நீங்க பாட்டுக்கு பஸ் ஏறி இங்க வந்திட போறீங்க அடிக்க )

இவரோட அறிமுகம் :

இயற்பெயர் : தங்கமரியாப்பன்
கூப்பிடுவது : வண்டு
படிப்பது ; 1 நா வது
பிடித்தது : சொல்பேச்சு கேளாமை ,நாதஸ்வரம் ஊதுவது
பிடிக்காதது : கட்டுபடுத்த நினைப்பது....
செயல் : எதுனாச்சும் , உதாரணமாக (கல் எறிவது )


இவர் இருக்காரே இவரிடம் ஒரு முறை கூறினால் அவ்ளோ தான் யாரோட பேச்சையும் இவர் கேக்க மாட்டார்... கூறினால் கூறியதுதான் இவருக்கு வேணும் என்றால் வேணும் வேண்டாம் என்றால் வேண்டாம் .. ஏதாவது ஒரு விளையாட்டு ஆரம்பிக்கும் முன் "ஐ ப்ஸ்ட்" இதுதான் முதல வரும் அவர் வாயில் இருந்து ,,,,நாம முடியாது அப்படின்னா அவ்ளோ தான் கலை கூத்தே நடக்கும் , அழுது ஊர கூட்டிருவார், ஆனா இவர யாருமே நம்ப மாட்டாங்க இவங்க அம்மா கூட , என்னென்றால் இவர பத்தி எல்லாருக்குமே தெரியும் , சும்மா அழுது காரியம் சாதித்தவுடன் மறுபடியும் அதே "ஐ ப்ஸ்ட் " வரும் .., அப்புறம் ஆள் சின்ன ஆள் தான் ஆனா கல் கொண்டு எரியும் அழகு இருக்கே , அதை பார்க்க எவ்ளோ ம்ம்ம்ம்ம்ம் ....

எதையும் எளிதாக செய்ய கூடிய திறமை இவரிடம் உண்டு ..... இவரை நாங்க எல்லா விதத்திலும் பயிற்ச்சி அளித்துள்ளோம் , நிச்சல் ,கிரிகெட் , கபாடி ,டான்ஸ்,மிதிவண்டி அப்படின்னு இன்னும் இருக்கு ...அவரின் சில படங்களை கிழே காணலாம் ..முக்கியமாக பயம் என்பது அறவே கிடையாது ..


1.இந்தாங்க காதுல வச்சிக்கோங்க....! ஹி ஹி ஹி



2.இது இவனோட நண்பர் (முருகா(நாய்னு சொல்லாதிங்க) சில நேரங்களில் !??? பல நேரங்களில் எதிரி (கல்லில் அடி வாங்கியது அதுக்குல தெரியும் ஹி ஹி )



3.பொங்கலுக்கு ஆட்டம் ...எப்படியியிய் !!!!



4.இதுவும் பொங்கலுக்கு தான் விளையாட்டு போட்டில பரிசு வாங்கியது என்னிடம் !!!



5. பொங்கலுக்கு ஆட்டமும் போட்டாச்சி ....!! சு சு மாரி பாட்டுக்கு




நாம இவர(டாம்) பத்தி பாத்தாச்சி அடுத்து ஜெரி பத்தி அடுத்த பகுதில பாப்போம் ....

வர்ட்டாஆஆஆஆ

என்னோட பயணம் - ஈராக் 1

ஐயா வணக்கம் ,

நான் அப்படியே ஒரு பயணமாக ஈராக் வரைக்கு போனேன் அத உங்களோட ஒரு ஷேர் ..அவ்ளோ தான், சரி வாங்க உங்களுக்கும் சுத்தி காட்டுதேன் ,சுத்தி காட்டும் போது கத்தி கூச்சல் போட்டா ,நெத்தில அடி வாங்கி புத்தி கலங்க கலங்க மிதி மிதி ன்னு மிதிப்பேன் சரியா, ரொம்ப அமைதியா வாங்க .....ஏன் ? என்னெறால் இது ராணுவ பகுதி !!!!!

இப்ப நாம விமானத்தில இருந்தே ஆரம்பிப்போம் , கீழ இறக்கும் முன் விமான ஓட்டி கீழ உள்ள (டவர்) கண்டோர்ல் அறை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று தான் தரையிரக்குவார் ,அதுதான் இப்போ நீங்க பாக்குறது ,!!





இங்க இருந்து நாம் உள்ள போவோமா !!!! என்னோட அலுவலத்திற்கு இதுதான் வழி
ரொம்ப குழு குழுன்னு இருக்கும்னு கர்ப்பனை பண்ணி வச்சிருப்பிங்கள நீங்க நினைக்கிற மாதிரிலாம் ஒண்ணுமில்ல பாருங்க ........! (அவ்வ்வ்வ்வ்வ்வ் )இங்க தான் நானும் குப்பை கொட்டுகிறேன், நல்லா பாருங்க எவ்ளோ அழகா இருக்குது கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கு இல்லாத பச்சை பசுமை,மிக அழகான மணல் பரப்பு ...இதெல்லாம் அனுபவிங்க பாஸ் ம்ம்ம் நீங்களும் என்ஜாய் !!!



இங்க பஸ் கம்பெனி இதுதான் இவங்க ஒசியா தான் கூப்பிட்டு போவாங்க, ஆனா இந்த பஸ்ல போவதற்கு முன்னால ஒரு முக்கியமான விசயம் இவங்க அலைல புது பைக் வாங்கிகிட்டு சிம்பு& விவேக்கும் போவாங்களே அந்த மாதிரி தான் ,ஊசிர வாங்குவாங்க ,புரிது நீங்க என்ன சொல்ல வாரிங்கன்னு, ஒரு பக்கம் குண்டு போட்டு ஊசிர வாங்கிறாங்க இந்த பக்கம் இப்படி வாங்குறாங்கன்னு தானே " ஹி ஹி வேகம் 20 க்கு மேல போக மாட்டாங்க, சரி விடுங்க பாஸ் ஒசினா அப்படி தான் இருக்கும்,



இதுதான் பஸ் ஸ்டாண்ட் , இவங்க ஊர் பஸ் ஸ்டாண்ட் எவ்வளவோ பெட்டெர் சார்
எப்படினா , பஸ் ஸ்டாண்ட்ல ஆள் இருக்காங்களோ இல்லையோ ஆனா ஒரு குப்பை தொட்டி , ஒரு விளம்பரம் போர்டு இது என்னனு பின்ன சொல்லுறேன் ,ஒரு விளக்கு கம்பம் இதெல்லாம் இருக்கும் ,அப்புறம் இந்த இடத்துல தேவை இல்லாம நிக்க கூடாது , பஸ் மட்டும் தான் நிக்கணும் ...,,,,



இது தான் ஹோட்டல் ,(ஹி ஹி அப்படின்னு நீங்க சிரிக்கிறது எனக்கு கேக்குது , என்னடா இவன் ரெண்டு மூனு சுவத்தை காட்டி ஹோட்டல் அப்படின்னு சொல்லுதான் அப்படின்னு தான் நீங்க சிரிக்கிறிங்க அப்படின்னும் தெரியும் ,பாஸ் இது ஒன்னும் துபாயோ இல்ல இங்கிலாந்தோ இல்லை ஈராக் அதுனால தான் இப்படி ,,,,,)இங்க ஒரு இந்தியன் தான் மேலாளர் அவரின் தலைமையில்தான் நடை பெற்று வருகிறது, இந்த ஹோட்டலில் ரொம்ப தங்குமிடங்களும், சாப்பிட அருமையான இந்தியன் சாப்பாடும் கிடைக்கும் வாடகை எவ்ளோ தெரியுமா ????? ஒரு நாளைக்கு 125$ மட்டும் தான் இணையமும் கிடைக்கும் ,



இந்த மாதிரி தானுங்க டிசேல், பெட்ரோல் லோட் ஆகி வெளியேறுகிறது ,இது ட்ரைலர் தான் இன்னும் ரொம்ப இருக்குதுங்கோ !!!!

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)