குழந்தையும் தெய்வமும் 2 !!!
அப்புறம் இவர பத்தி உங்களுக்கு தெரிஞ்சே ஆக வேண்டும்...
இவரு தான் ராம்குமார் கூப்பிடுவது குடுக்கை .(டாம்)
இப்ப இவோரோட அறிமுகம் பாப்போமா !!!
இயற்பெயர் :ராம்குமார்
கூப்பிடுவது : குடுக்கை
பிடித்தவை : ?????????
பிடிக்காதவை : யாரையும் அடிக்க முடியாதது ...!
செயல் : நாங்க எங்க போறோமோ....அதே!!!அதே !!
இவர் ஒண்ணாம் வகுப்பு படிக்கிறார் ,இவரும் ரொம்ப ரொம்ப பாசக்காரர் தான் , எங்க போனால்ம் பின்னாடியே வருவது ,அப்புறம் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ,மற்றபடி எல்லா இடத்துக்கும் போறது ,வாறது , நாங்க எத சொன்னாலும் செய்வது , அப்படி பல தனி திறமைகள் இவரிடம் உண்டு ,யாரையாச்சும் கூப்பிட்டு வான்னு சொன்னா போதும் நேர அவங்க விட்டுக்கு போய் கையோட கூப்பிட்டு வருவார் ...(ஹி ஹி பின்ன என்ன எல்லாரும் கைய கலட்டி விட்டுல வச்சிட்டா வருவாங்க! இந்த கேள்வி தோனுமே ,தோணனும் ..)
நாம முன்னாடி பாத்தோமே ஜெர்ரி(வண்டு ) அவருக்கும் இவருக்கும் அடிகடி சண்டை வரும் ஆனாலும் ரெண்டு பேரும் ஒன்னு போல தான் விளையாடுவாங்க ..ஹி ஹி இவங்க ரெண்டு பேரும் பன்னுற சேட்டைய பாத்துகிட்டே இருக்கலாம் அதுல ஒண்ணு உங்களுக்கும் சொல்லுறேன் , கேளுங்க சே பாருங்க ,,,, மண்ணுல போன் செய்து அதுல ரெண்டு பேரும் பேசிக்குவாங்க.. அந்த உரையாடல் வேணுமா!!வேணுமா !!!
நான் தான் ராம்குமார், "ஹாய்" எல்லாருக்கும் "
(பாவிங்க நான் ஒரு சின்ன பையன் நானே ஒரு ஹாய் சொல்லுறேன் நீங்க யாருமே சொல்ல மாட்டுக்கிங்கல, ஹாய் சொல்லாத எல்லாத்துக்கும் சூப்பர் பிகர பாக்கும் போதோ இல்ல போன்ல பேசும் போதோ "ஹாய்" சொல்ல வாய் திக்கட்டும் )
இப்ப புரியுதா, நான் ஏன் இவரோட சிரிப்ப பிடிச்சிருக்குன்னு சொன்னேன்னு ,கைல கார்த்திகை மாச விளக்கு இருந்தாலும் எவ்ளோ அழகா சிரிச்சிகிட்டே இருக்கார்ன்னு ஹி ஹி (நீங்க சிரிப்பது எனக்கும் தெரியும் அத நல்லாத்தான் சிரிச்சி தொலைக்க வேண்டியதுதானே!!! )
இது தை மாதம் 1 தேதி எடுத்த படம் இது , பஜனை குழுல தலைவர் எப்படி நிக்கிறார் பாத்திங்கள ...
முருகா இவருக்கும் நண்பர் தான் .... பாருங்க (ஆனா இவரும் கூட்டாளி தான் , யாருக்குன்னு முதல் பாகத்தை படிச்சா தெரியும் )
பாருங்க நான் தான் சொன்னேனே நாங்க எங்க போனாலும் பின்னாலே வருவார்ன்னு ஹி ஹி
ஒரு பக்கம் கதிர் அருத்துட்டாங்க , இன்னொரு பக்கம் அறுவடை பருவம் சரி இவர் எங்க போறார்னு கேக்குறிங்களா ? ஹி ஹி அந்த பக்கம் கரும்பு காடு இருக்கே , இந்த வயசுலையே கரும்பு ஒடிக்க வாரார், பாத்திங்கள! எங்க தலைக்கு எவ்ளோ "தில்"லுன்னு
ஹா ஹா ஹா ! என்னடா இவன் என் சி சி தலை கவசத்துடன் இருக்கிறானே அப்படின்னு தானே பாக்குறிங்க , ம்ம்ம் அதே தான், அது சும்மா எங்க ஊர்ல ஒரு கல்லுரி மாணவனுடையது அவன் அன்னைக்கு கொஞ்சம் கால தாமதமாக வந்தான் அவன உக்கார வச்சி அவன் பையில வச்சி இருந்தான் அத வாங்கி இவருக்கு வச்சி பாத்தா அய்யோடா எவ்ளோ அழகா இருக்குது ,,,,, நீங்களே பாருங்க !!
ஹி ஹி இங்க பாருங்க , இதுதான் என்னோட பட்டாளம் , அதுல நானும் இருக்கேன் நல்லா பாத்திட்டு உங்க பின்னுட்டம் போட்டு போங்க
(மக்கா படிச்சா மட்டும் போதாது உடனே உங்க கருத்தையும் தெரிவிக்க வேண்டும் ))
நன்றி நான் வரேன் !!
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
4 comments:
ok nice story who is this?
NIce
சுரேஷ் அது எங்க ஊர்ல உள்ள பையன் என்னோட நண்பர்கள, இவனும் ஒருத்தன் :)
unga puthiya muyarichi rombave nalla iruku nanba. yellarukum intha maathiri katha solla niraya visayam iruku.
Post a Comment