இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

இந்தியாவின் சிறந்த விமான நிலையங்கள்

ஹைதராபாத்.... இந்தியாவின் சிறந்த விமான நிலையம்!

விமானப் போக்குவரத்தில் இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது இந்தியா. முன்பு தூங்கி வழிந்து கொண்டிருந்து இந்திய விமான நிலையங்கள் தற்போது மகா சுறுசுறுப்பாகக் காட்சியளிக்கின்றன. முக்கியமாக பெரிய விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீனப்படுத்தி வருகிறது விமானப் போக்குவரத்து இயக்கம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம், சமீபத்தில் இந்தியாவின் சிறந்த விமான நிலையமாக ஹைதராபாத்தை தேர்வு செய்துள்ளது. வாடிக்கையர் திருப்தி, விமானங்களின் வருகை, செக் இன் செய்யப்படும் முறை என பல்வேறு விஷயங்களில் பயணிகளின் திருப்தியை அடிப்படையாகக் கொண்டு ஹைதராபாத்துக்கு இந்த கவுரவத்தை அளித்துள்ளது இந்த நிறுவனம்.

இது தவிர இந்தியாவின் சிறந்த 10 விமான நிலையங்களையும் அறிவித்துள்ளனர்.அந்த வகையில் ஹைதராபாத் உள்பட இந்தியாவின் சிறந்த 10 விமான நிலையங்கள்...

1. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் [^], ஹைதராபாத்



ஹைதராபாத் நகரிலிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ளது இந்த விமான நிலையம்.

ஆண்டுக்கு 4 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையத்தில் எவ்வளவு பெரிய விமானமும் தரையிறங்கலாம்.


இந்திய அரசும் ஜிஎம்ஆர் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள விமான நிலையம் இது. ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் ஆகியவையும் இதன் பங்குதாரர்கள். 31 மாதங்களில் கட்டப்பட்டு கடந்த மார்ச் 2008-ல் பயன்பாட்டுக்குவிடப்பட்டது. இதில் 13 லவுஞ்ச்கள் உள்ளன.


சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கு 'Leadership Energy and Environment Design' விருது வழங்கப்பட்டது. உலகிலேயே இந்த விருது பெற்ற முதல் விமான நிலையம் ஹைதராபாத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2. இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம், டெல்லி

நாட்டின் மிகப்பெரிய விமான நிலையம் இதுவே. ஜிஎம்ஆர் குழுமம், ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா, ப்ராபோர்ட் மற்றும் மலேசியன் ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டுள்ளது. மூன்று டெர்மினல்கள் உள்ளன.

இதில் மூன்றாவது டெர்மினல் மிக சமீபத்தில் கட்டப்பட்டது. உலகத் தரத்தில் அமைந்த இந்த மூன்றாவது டெர்மினல் சர்வதேச நாடுகளையும் வியக்க வைத்துள்ளது. அத்தனை நவீன வசதி. உலகின் எட்டாவது பெரிய பயணிகள் டெர்மினல் இதுவே. இந்த ஒரு டெர்மினலில் மட்டும் 34 மில்லியன் பயணிகள் வந்து போகமுடியும், ஆண்டுக்கு.

ஆட்டோமேடிக் பார்க்கிங் வசதி உண்டு. ஒரே நேரத்தில் 4300 கார்களை 7 அடுக்குகளில் நிறுத்தலாம்.

இரண்டடுக்கு கட்டடமாக உள்ள இந்த மூன்றாம் டெர்மினலில் 168 செக்-இன் கவுண்டர்கள் உள்ளன. 48 விசாரணை அல்லது தொடர்பு கவுன்டர்கள், 78 ஏரோபிரிட்ஜஸ், 72 இம்மிக்ரேஷன் கவுன்டர்ஸ், 15 ஸ்கேன் கவுன்டர்கள் என பிரமாண்ட வசதிகள் இங்குள்ளது.

3. சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை

தெற்கு ஆசியாவில் அதிக பயணிகளைக் கையாளும் விமான நிலையம் என்ற பெருமைக்குரியது மும்பை விமான நிலையம். முன்பு சர்வதேச விமானங்கள் மற்றும் உள்ளூர் விமானங்களுக்கு தனித்தனி டெர்மினல்கள் இருந்தன.

இப்போது அவை ஒன்றாக்கப்பட்டு சத்ரபதி சிவாஜி விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. ஜிவிகே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய விமான நிலையம் 2006-ல் உருவாக்கப்பட்டது.

4. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம், கொல்கத்தா

கிழக்கு இந்தியாவின் பெரும் விமான சேவை மையம் கொல்கத்தா சர்வதேச விமான நிலையம். பங்களா தேஷ், பாங்காக் போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்துதான் செல்ல வேண்டும்.

ஆண்டுக்கு 8.5 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டது இந்த விமான நிலையம்.

5. சென்னை சர்வதேச விமான நிலையம், சென்னை

நகருக்குள்ளேயே அமைந்துள்ள ஒரே விமான நிலையம் என்ற பெருமை கொண்டது சென்னை விமான நிலையம். புதிதாக இரண்டாவது டெர்மினல் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ 2350 கோடி செலவில் அதிநவீனமயமாக்கப்பட்டு வருகிறது.

கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு ஆண்டுக்கு 50 மில்லியன் பயணிகளைக் கயாளும் திறன் கொண்ட முன்னணி விமான நிலையமாகத் திகழவிருக்கிறது சென்னை.

6. சர்தார் வல்லபபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத்

நாளொன்றுக்கு 150 விமானங்களைக் கையாளும் இந்த விமான நிலையம் 1124 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. மூன்று டெர்மினல்களைக் கொண்ட அகமதாபாத் விமான நிலையத்துக்கு நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் விமானங்கள் உண்டு.

ஆகஸ்ட் 14 முதல் இதன் புதிய டெர்மினல் இயக்கப்படுகிறது.

7. லோக்ப்ரிய கோபிநாத் போர்டோலாய் சர்வதேச விமான நிலையம், கவுகாத்தி

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விமான நிலையம் இந்திய விமானப் படைத் தளமாகவும் செயல்படுகிறது. முதன்முதலாக அசாம் மாநிலத்தின் முதல்வராக இருந்தவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான கோபிநாத் போர்டோலாய் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்காசிய நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவை உண்டு. எதிர்காலத்தில் இந்த விமான நிலையத்தை பெருமளவில் விஸ்தரித்து, கிழக்கு இந்தியாவின் முதன்மை விமான நிலையமாக்க மத்திய அரசு [^] திட்டமிட்டுள்ளது.

8. ராஜா சான்ஸி சர்வதேச விமான நிலையம், அமிர்தசரஸ்

தினசரி 90 விமானங்களைக் கையாளும் அமிர்தசரஸ் விமான நிலையம், சமீபத்தில்தான் முற்றாகப் புதுப்பிக்கப்பட்டது. முன்பு வெறும் 12770 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலிருந்த இந்த விமான நிலையம்,

இப்போது 40175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2009-ம் ஆண்டுதான் திறக்கப்பட்டது.

9.டபோலிம் விமான நிலையம், கோவா

கோவா மாநிலத்தின் ஒரே விமான நிலையம் இது. இந்திய ராணுவத்தின் விமானப் படைத் தளமாகவும் இது செயல்படுகிறது. இதந் ஏர் ட்ராபிக் கண்ட்ரோல் இந்தியக் கடற்படை வசமுள்ளது.

நாளொன்று 250 விமானங்கள் வருகை மற்றும் புறப்பாட்டுக்கேற்ற வகையில் கட்டப்பட்டுள்ளது கோவா விமான நிலையத்தின் உள்நாட்டு முனைமம்.

வெளிநாட்டு முனைமம் 1996-ல் கட்டப்பட்டது. இப்போது புதிய டெர்மினல் கட்டப்பட்டு வருகிறது.

10. பெங்களூரு சர்வதேச விமான நிலையம், பெங்களூரு

பெங்களூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது இந்த விமான நிலையம். 4000 ஏக்கரில் அமைந்துள்ள இந்தப் புதிய விமான நிலையம் 2008 முதல் செயல்படுகிறது. 2009-ல் நாளொன்றுக்கு 280 விமானங்களைக் கையாண்டது இந்த விமான நிலையம்.

பெங்களூரிலிருந்து இந்தியா மற்றும் உலகின் 50 முக்கிய நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது 9 மில்லியன் பயணிகளைக் கையாளும் பெங்களூரு விமான நிலையம், 2015-ல் 17 மில்லியன் பயணிகளைக் கையாளும் அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது.

11. கொச்சி சர்வதேச விமான நிலையம், கொச்சி

கொச்சியிலிருந்து 30 கிமீ தூரத்தில் நெடும்பாசேரி என்ற இடத்தில் உள்ளது இந்த விமான நிலையம்.

ரூ 31500 கோடியில் கட்டப்பட்டு, நாட்டிலேயே பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்ட முதல் விமான நிலையம் இதுதான். 30 நாடுகளைச் சேர்ந்த 10000 என்ஆர்ஐகள் இந்த விமான நிலையத்தில் முதலீடு செய்துள்ளனர்.

நந்தலாலா – விமர்சனம்

நந்தலாலா - நொந்தலாலா



நந்தலாலா ஒரு முழு நேர அம்மா செண்டி’மெண்டல் படமாக,இயற்கை அழகுல படமெடுத்திருக்கின்றார்கள், மெண்டலாக நடித்திருக்கும் பெரிய பைத்தியமும் , சின்ன மெண்டலாக நடித்திருக்கும் சின்ன பைத்தியமும் சேர்ந்து தனது அம்மாக்களை பார்க்க கெளம்பி செல்லும் வழியில் என்ன என்ன கஷ்டங்களை சிரித்துக்கொண்டே அனுபவிக்கிறார்கள் என்பதே படம் , (அவ்வளவு தானே’னு கெளம்பிறாதிங்க மக்கா )

ஒரு மெண்டல் மெண்டல் ஆஸ்பத்திரியில் இருந்தும் ,இன்னொன்னு வீட்டில் சுற்றுலா செல்வதாக பொய் சொல்லிவிட்டும், கிளம்பும் மெண்டல்கள் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள் ,தனது கையில் இருக்கும் பணத்தை ஒருவன் பறிக்கும் போது மெண்டல் ஹீரோ வந்து காப்பாற்ற நினைத்து அடி வாங்கி தனது சூ’வை தூக்கிக்கொண்டு ஓடுவதும் , மாமா மாமா என்று பின்னாடியே திரிகிறார் சின்ன மெண்டல் இது தான் ஆ’ரம்பம் .

அடுத்த சீன் பஸ் ஸாண்டில் பணப்பற்றாக்குறையால் சிறுவன் பிஸ் அடிக்க போவதாக ஏமாற்றி தான் மட்டும் தனியே அம்மாவை பாக்க செல்லவேண்டுமென்று திட்டமிட்டு கெளம்பி அங்கு சில அங்கிள்’கள் இவரை ஆட்டைய போட திட்டமிட்டு பஸ்ஸீல் ஏறுவதும் ,தன்னுடைய மாமா கூடத்தான் வந்திருக்கிறேன் என்று கீழே இறங்கி மீண்டும் வந்து பார்த்தால் மாமாவை காணோம் , மெண்டல் மாமா சிறுவனின் உண்டியலை சுட்டு தான் தனியாக போய்விடலாமென்று திட்டமிட்டு பஸ்ஸீல் ஏறி கண்டெக்டரிடம் அடிவாங்குவது இயல்பான விசயமே ,

பின்னர் இருவரும் தனது நடை’ராஜா பயணத்தில் பயனிக்கின்றனர் , பின்னர் ஆட்டோகாரர் ஒருவரிடம் நூறு ரூபாய்க்கி பேரம் பேசி ஏற்கொண்டு வழியில் ஆட்டோகாரர் பேச்சுவாக்கில் மெண்டல் மாமாவை மெண்டலா’னு
ஒரு கேள்வி கேக்க அடிதடியில் இறங்குகிறார் மெண்டல் மாமா (ஆட்டோவும் போச்சி )ரோட்டில் வரும் போலீஸ் வேனில் இங்கிலிபீசீல் பேசி சமாளித்துக்கொண்டிருக்கும் போது மெண்டல் மாமா வழக்கம்போல தனது பேச்சில் போலீஸ் மாமாவை கடுப்பேத்துவதை தெரிந்த சின்னவர் எஸ் ஆக ”இரட்டை இலை’யை” (அரசியல் இல்லீங்க, முக்கியமான விசயம் : இதுக்கும் ஆளும் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்ல) காண்பித்து வெளியேருகிறார், போலீஸ் மாமா மிரட்டி கேட்டதும் மெண்டல் மாமா தானும் காட்டி வெளி’யேருவதும் ,பின்னர் போலீஸ் பின் தொடர்ந்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாத்துவிட்டு ”சனியன் பிடித்தவனே வாயா”என்று வழக்கமான முறையில் பேசி கெளம்புகிறார்கள் ,

படத்தில் பிடித்த காட்சி :


இந்த பள்ளி மாணவியாக வரும் கிராமத்து கருவாச்சி , மெண்டல் மாமாவை பாத்துக்கொண்டே ரோட்டை விட்டு கீழே விழுந்து காலில் அடிபட நம்ம மெண்டல் மாமா அதுக்கு கிராமத்து வைத்தியமான எச்சிலை தொட்டு வைக்கவும் , கருவாச்சிக்கி பிடித்து போவ இவர்களின் சோக கதையை கேட்டு வருத்தப்பட்டு டக்கரில் (எங்கைய்யாட்ட காசு கேட்டேனா தரமாட்டேனுட்டாரு ,இப்ப என்ன செய்வாரூஊஉவா வா’னு கிராமத்து தமிழில் அழகாக பேசிருக்காங்க நம்ம கருவாச்சி ) டக்கராக ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு (நல்ல வேலை மத்த படங்கள் மாதிரி ஹீரோ கூடவே கடேசிவரைக்கும் போவல அதுவரைக்கு சந்தோசம் தான் ) கொண்டு போய் இறக்கி விட்டு “ பத்திரமா போயிடுவியா’னு அப்பாவி தனமா கேக்கும் கேள்வி மனதுக்கு நெகிழ்வு , அதற்கு நியாபகத்தமா கொடுக்க ஒன்னுமில்லாத மெண்டல் மாமா பக்கத்தில ஓடும் வாய்க்காலுக்குள் கைய விட்டு கல்லை (என்ன கொடுக்கிறாங்க’னு முக்கியமில்ல யார் கொடுக்கிறானுதான் முக்கியம் ) எடுத்து தருகிறார் , பிரியாவிடை பெற்று செல்கிறார் நமது கருவாச்சி , மெண்டல் மாமா இலவச யோசனை ”புண்ணுல இரத்தம் வந்தா எச்சி தொட்டு தடவிக்கோ “

மாட்டு வண்டிக்கார் :

தான் செவிடு என்பதை வெளிக்காட்டாமல் அவர் செவிடு என்பதை புரிந்து கொள்ள வைத்திருக்கிறார்கள் (ஹா ஹா’னு சிரிக்காதீர்கள்) , அப்புறம் ஒரு நொண்டி ஒருத்தர் வழிக்காட்டுதேன்’னு சொல்லி ஐந்து ரூபாய் வாங்கிக்கிட்டு போறார், கொஞ்ச தூரத்தில கீழே விழுந்துவிட்டு (நான் வயித்தில இருக்கும்பொதே செத்து போயிருக்கவேண்டியதுதானே’னு தனது அம்மாவை நொந்து கொள்கிறார்)

அப்புறம் இரவு தூங்குவதுக்காக பெரிய ட்ரைலர் வண்டிய ஏற்பாடு பண்ணிருக்கிறார் டைரக்டர் , விடிந்ததும் லாரி ட்ரைவரை இம்சை பண்ணுகிறார் நம்ம மெண்டல் மாமா , அப்புறம் ஒரு ஹனிமூன் ஜோடியை டிஸ்ரப் பண்ணுகிறார்கள் , அவர்களை கிண்டல் செய்யும் இளைஞர்களின் பீர் பாட்டிலை உடைக்க அவர்களின் மண்டையை தேர்ந்தெடுக்கிறார் நமது மெண்டல் மாமா , தண்ணீர் தீர்ந்து விட இளநீர் திருடி அவருக்கே வெட்டி தந்து தானும் தாகத்தை தீர்த்து விட்டு கிளம்புகிறார்கள்,


லாரி ட்ரைவர் :

படத்திலையே ரொம்ப தேவையான விசயம் , கோவமிருக்கும் இருத்தில் தான் குணம் இருக்கு என்பதை டைரக்டர் காட்டிருப்பார் தனது ஹார்னை திருடிட்டு வந்த மெண்டல் மாமாவை அடியோ அடியோ’னு அடித்துவிட்டு பின்னர் அவர் இன்னசெண்ட்’னு (மெண்டல்’னு) தெரிஞ்சவுடனே மெண்டல் மாமவையும் சிறுவனையும் ஏற்றிக்கொண்டு சாப்பாடு வாங்கித்தருகிறார்,(இந்த படத்தில் இவர்கள் சாப்பிடும் இரண்டாவது காட்சி )
இந்த சிறுவனின் அம்மாவை பார்க்கும் மெண்டல் மாமாவிடம் காலில் விழுந்து ஏதோ சொல்லுகிறார் அந்த அம்மா (அது என்னனு என்கிட்ட சொல்லலயே எனபது வருத்தமே !)
பின்னர் இரண்டு குண்டர்கள் பைக்கில் வர அவர்களையும் நண்பர்களாக ஆக்கிவிட்டு நடந்து செல்லும் வழியில்,
ஒரு 50 ரூபாய்க்காக (50 ரூபாய் கொஞ்சம் ஓவரா தெரியல’னு பருத்திவீரன் ஸ்டைல லுக் விடக்கூடாது) சண்டை போடும் விலைமகளின் வாழ்க்கையை தெளிவாக புரிய வைத்திருக்கிறார் டைரக்டர் , மூனாவதா அவரும் இவர்களுடன் தொத்திக்கொள்கிறார்,

கடேசியாக என் அம்மாவ எங்கே , என் அம்மாவை எங்கே’னு நச்சரிக்கும் பொடியனுக்கு தனது அம்மாவை காண்பிக்க கூட்டி செல்கிறார், அங்கு தன் அம்மா பைத்தியமா இருப்பதை பாத்தவுடன் என்ன செய்வதறியாது திக்கிறார், அதைவிட்டு வெளில் வந்து மறுபடியும் சிறுவனின் நொச்சரிப்பை தாங்க முடியாமல் “உன் அம்மா செத்துவிட்டாள்’னு சொல்லுவதும் அதுக்கு அந்த பையன் போடா மெண்டல்’னு சொல்லுவதும் பின்னர் பொய் சொல்லிருக்கலாமில்ல’னு பாசத்தை பொழிவதும் கண்ணீர் , தனது தாய் எதிர்த்த திசையில் மற்றொரு சிறுமியை தூக்கிக்கொண்டு சென்றபின்(பாத்துட்டாங்களாம் )அந்த போட்டோவை பறக்க விட்டுவிட்டு அந்த விலைமகளை அம்மாவாக எண்ணி முத்த மழையை பொழிகிறார் அந்த சிறுவன் , அந்த சிறுவனை பள்ளிக்கி அழைத்து செல்லும் வழியில் பலூன்க்காரராக வரும் மெண்டல் மாமா என்கிற பாஸ்கர் மணி ஒரு பீலீங்கோட அந்த அகி அம்மாவுக்கு ஹாய் சொல்லும் விதம் :)அழகுனு சொல்ல முடியாவிட்டாலும் ஓகேனு சொல்லலாம் ,பின்னர் இனிய இசையுடன் எழுத்தை போட்டு படத்தை முடிக்கின்றார் டைரக்டர்

படத்தின் இசையுடன் வரும் இரு சோகப்பாடல்கள் கண்ணீர்க்கு கண்ணீர் , இசை இனிமை.
படத்தின் மெண்டலான போக்கை கொஞ்சம் கண்டித்திருக்கலாம் டைரக்டர், தான் என்னதான் சொல்ல வருகிறோமென்று தெளிவாக சொல்லிருந்திருக்கலாம் நந்தலாலா என்னை பொறுத்த மட்டிலும் நொந்தலாலாதான் :)

படத்தின் டிப்ஸ் :

(நாளைக்கி அரையாண்டுத்தேர்வில் கேள்வி கேட்டா எழுதவேண்டாம்)

1.மெண்டல் மாமாவின் வேலை காலைலைல பெல் அடிச்சா எழுந்திருக்கனும் ,எவ்ளோ குளிர் அடிச்சாலும் குளிக்கனும்,அப்புறம் பெல்லு ,
அப்புறம் உப்பூமா, உப்பூமா’ல பச்ச புல்லு இருந்தா நல்லா இருக்கும், அப்புறம் உலாத்தனும், யாராவது யாருக்காவது கேக் கொண்டுவருவாங்க ,காசு கிடைகும், அப்புறம் பெல்லு ,அப்புறம் தூக்கம் ,அப்புறம் பெல்லு ,

2.மெண்டல் மாமாவின் அம்மா எங்கே ? சொரம் அடிக்கும் முன்னாடி இருந்திச்சி , அப்புறம் இல்ல

3.படத்தின் காமடி :

அப்பாக்களெல்லாம் ஓட்டப்பந்தையத்தில ஓடி போயிட்டாங்களா ?

4.இந்த கேள்வியை வேற யார்கிட்டவும் கேக்கவேண்டாம் மக்கா :

அகி அவுங்க அம்மாவ கட்டிபுடிச்சி முத்தம் கொடுக்காம உனக்கு முத்தம் கொடுத்தா என்னோடயே இருப்பீயா ? (மீறி கேட்டு அடிவாங்கினா கம்பெனி பொறுப்பல்ல )

5.படத்தின் கரு என்ன ?

அம்மாங்களில் பசக்கார அம்மாவும் இருக்காங்க , வேசக்கார அம்மாவும் இருக்காங்க !? (இதுவா )

6. ஒரு மார்க் கேள்விகளில் தமிழ்’னு வந்த ஷேர் ஆட்டோவ ஓட்டி வந்த ட்ரைவர் யார்’னு கேட்டா நாசர்’னு தெளிவா சொல்லிடுங்க மக்காஸ்

7. மெண்டல் மாமாவின் கால்சட்டையை மாட்டி விட்டது அந்த விலைமகள் தான் அதுவும் பாதிப்படம் முடிந்த பிறகுதான் (ஆரம்பத்திலையே கெட்டி விட்டுருக்கலாம் )

படங்களை தந்த இணையத்துக்கு நன்றி

(இதுக்குமேலையும் மொக்கையா விமர்சனம் எழுதினா என்ன அடிக்காம விடமாட்டீங்கங்கிற ஒரே காரணத்துக்காக எழுதாம விடுறேன் )

நகரம் விமர்சனம்

நகரம் – நரகம்

நகரம் படம் மொக்கை , நகரம் படத்தில் என்ன கதை இருக்கிறது ? நகரம் பட்த்தை பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன ? என பல கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக்கு கொண்டே இதனை படிப்பீர்கள் என நம்புகிறேன் . நகரத்தை பற்றி ஏற்கனவே ஏகப்பட்டோர் பலவிதமான விமர்சனத்தை கொடுத்திருப்பார்கள் , இவன் என்ன எழுத போகிறான் என்ற எண்ணத்துடன் படிக்க போகும் நண்பர்களே உங்களுக்கு வணக்கம்  ,

நகரம் விமர்சனம் :



ஆரம்பத்திலையே ஹீரோவை ஸ்டெச்சரில் அள்ளிக்கொண்டு போக வைக்கிறார் டைரக்டரும், கதாநாயகனுமான சுந்தர்.சி , அப்புறம் காமடிங்கிற பேர்’ல நீதிமன்றத்தில் ஒரு சில நொடிகள் மொக்கையா வசனங்களோட ஆரம்பிக்கும் படம் நிதானமாக ஹீரோவை பெரிய ரவுடியாக காட்டும் , ஹீரோவை காதலித்தே ஆகவேண்டும் என்கிற கோட்பாடுடன் (இன்னும் தமிழ்படவுலகில் மாறலப்பா ) தனது என்ரீயை தரும் ஹீரோயின் . காவல் நிலையத்தில் நிலவும் இவர்கள் சந்திப்பு ஒரு சில நிமிட்த்து பார்வை பறிமாற்றத்திலையே காதல் வந்துவிட்ட்து என அடுத்த காட்சியில் தெளிவா சொல்லிருப்பார் டைரக்டர், புறாவை பறக்க விட்ட்தும் ஹீரோயின் ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு (லவ்ஸ் அங்கேயும் ஸ்டாட் ஆகிருச்சாம் ) தான் இங்கு வந்ததே உன்ன பிடிச்சிருக்குன்னு சொல்லுவதுக்குதான் என்று காதலை புது விதமாக சொல்லுவதும் (வெளங்கிடும்) , தன் காதலனிடம் இனிமேல் சண்டைபோடக்கூடாதுன்னு சத்தியம் வாங்குவதும் தனது நண்பனுக்காக சத்தியத்தை மீறின காதலனை சண்டை போடும் என்ற நோக்கமே இல்லமால் சண்டை போடும் ஹீரோயின் (இன்னும் ரொம்ப டீப்பா சொல்லிருக்கலாம்) படத்தில் கதை என்று குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை என்ற போதும் , உண்மையான நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதை நடித்து காட்ட முயற்சி செய்திருக்கும் சுந்தர்.சி, இன்னும் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும் , நல்ல ஒரு விசயத்தை ரொமப் அழுத்தமாக குறிப்பிடாத விசயம் தவறு , பட்த்தில் பிடித்த விசய்ம் ஒரு நண்பனுக்காக தனது காதலியுடனான கல்யாணத்தை விட்டு செல்வதுவும் ,காதலி கேக்கும் கேள்விக்கு எனக்கு நண்பன் தான் முக்கியமென்று செல்வதும் நண்பனே வாழ்வில் முக்கியமென உணர்த்திருக்கிறார் ,ஆனாலும் கடேசியில் தனது உடன் நண்பனே ஆப்பு வைக்கிறான் என்று தெரிந்தவுடனே அவனை தான் கொல்லவும் மனமில்லாமல் ,காப்பாற்றவும் எண்ணமில்லாமலும் வருவது சற்று குறைத்து மதிப்பிட வைத்திருக்கீறார் ,நீ என்னை மாதிரியே நண்பனுக்கா உயிரையே கொடுப்பன்னு நினைத்தேன் ,ஆனா நீ ஏமாத்திட்ட ,
டேய் உயிரே போனாலும் நண்பன விட்டுக்கொடுக்க கூடாது’னு அப்பாவி தனமா பேசும் சுந்தர்.சிய பாத்து நமக்கு சிரிப்பதா அழுவதான்னே தெரியதது சோகம் :(, கடேசியும் தனது இன்னொரு நண்பன் தனது கஞ்சிக்காக,வாழ்க்கைக்காக ,பணத்துக்காக எதிரியுடன் சேர்வது இயல்பு :)


வடிவேல் வெடிவேல் :


சில மாதங்களாய் ஆளை காணாமல் இருந்த வடிவேல் தனது டெர்ர் முகத்தை இதில் காண வைத்து அதிரடியாக சிரிப்பை மூட்டுகிறார் , என் ஏரியாவுக்கு வாடா , என் தெருவுக்கு வாடா , என் வீட்டுக்கு வாடா என அவருக்கே உரித்தான காமடி கலந்த பாடி லாங்வேஜில் சொல்லிருப்பது படத்துக்கு + பாயிண்ட் தானுங்க , மணி 3 ,லஞ்ச் டைம்,நாங்க அன்னத்துல கை வைக்கற டைம், யார் கன்னத்துலயும் கை வைக்க மாட்டோம்கடேசியாக கதாநாய்கன் வடிவேலின் குடியுருப்புக்கே வந்த பின் அவர் காலை பிடித்துக்கொண்டு கதறி கதறி அழுவதும் ,பின்பு நான் ஒன்னும் பைட்டர் கிடையாது ஒன்லி பாடிலாங்குவேஜ் தான்னு சொல்லுவதும் , அப்புறம் அவரு அதுதாங்க அந்த கதாநாயகரூஊஊ வீடு பாக்கத்தான் வந்திருக்கார்னு தெரிஞ்சவுடனே வீட்டுக்காரம்மாவை கேக்கபோய் வீட்டுக்காரம்மாவை இரு இரு உன்ன வச்சிக்கிறேன்னு பொதுவான வார்த்தையில் சொல்ல அதுக்கு அந்த அம்மா நான் ஏற்கனவே ரெண்டு பேரை வச்சிருக்கேனு சொல்லவும், ரெண்டு பேரா மாமீஈஈஇ நு இவ்வள்வு நாளா நமக்கு தெரியாம போச்சே’னு ஒரு இளிப்ப போடுவாரூஊஉ பாருங்க , அது வடிவேலுக்கே உரித்தானது  , பல பீதிகளுக்கு மத்தி’ல எங்கோ பிறந்து எங்கோ வளந்த உன்ன மாமி மூலம் கடவுள் என்னோட ரூம் மேட்டா ஆக்கிட்டான் ,God Is Great (போட்டு விட்டா வேடிக்கை பார்க்கிற இரு உன்ன வச்சிக்கிறேன்) , பிறந்தநாள் விழாவில் ஒரு முத்த்த்த தப்பான இட்த்தில் பதிவு செய்து தப்பிக்க நினைத்து ஓடும் போது ஒரு குரல் கேக்கும் , சத்தம் போடாம இவளை அவனுக்கே கல்யாணம் பண்ணி கொடுத்திருங்கனு மாமி சொல்லுவதும்,அதுக்கு அந்த பன் சே பெண் அப்படி ஒன்னு நடந்தா ஒன்னையும் கொல்லுவேன் ,அவனையும் கொல்லுவேன்னு பத்திரகாளியா மாறுவதை கேட்ட்தும் அப்படினா இந்த கல்யாணத்து சம்மதிக்க மாட்டேன்னு ஓடுவதும் ஜாலி தான் சத்தியத்த வாங்கிட்டு செத்துபோகும் முத்தக்காளை தம்பிக்காக அண்ணன்கள் இவரை பின் தொடர, பொண்ண கரெக்ட் பண்ணுவதுக்கு முன்னாடி ஆண்டியை கரெக்ட் பண்ணுவேனு உள்ள நுழைந்து நாய்க்கு பன்’ல ஜின்’ன ஊத்தி கொடுப்பதும் ,நாயோட வெளாடும் வெளையாட்டும் சூப்பர் , கடேசியா 100 திருட்டை போஸ்டர் அடிச்சி கொண்டாடும் விழுதுகள் இதுவரை கண்டுபிடிக்காத புது ட்ரெண்டு ,

ஸ்டைல் பாண்டியின் 100 திருட்டு வால்போஸ்டரில் இருந்த விபரம் :

வாழ்த்துகிறோம் !
எங்கள் ஆரூயீர் அண்ணன்
திருடர் குல திலகம் “ஸ்டைல் பாண்டி
அவர்களது
100 வது திருட்டு விழா
வெற்றி பெறவும் மேலும் பல வீடுகளில் திருடி 1000 வது திருட்டு விழாவை கொண்டாட மனமாற வாழ்த்துகிறோம்

இப்படிக்கு :
அண்ணனின் விழுதுகள்

இடம் : 8, சிவன் கோயில் தெரு ,
நாள் ;10:06:2010
நேரம் : இரவு 12 மணி


இத படிச்சவுடனே அழுதுக்கிட்டே , ஒரு தடவ கூட திருடல அதுக்குள்ள டோட்டல் தமிழ் நாடு போலிஸையே முன்னாடி கொண்டு நிப்பாட்டிடாங்க , கடேசியா தன்னுடைய முகம் பதித்த போஸ்டரை போலீஸ் வேனிலையே ஒட்டி வடிவேலை கடுப்பேத்தும் விதம் அழகுதான் :)

சோ முக்கியான விசய்ங்கள் :

இந்த படத்துக்கு நகரம் என்ற பெயருக்கு பதிலா தலைநகரம் Part2 என்று பெயர் வைத்திருக்கலாம் ,ஆனால் இதுவரை தமிழ் படங்களில் பார்ட் 2 வந்த்தில்லை எனபதினாலோ என்னவோ தலையை கத்தரித்து விட்டு நகரம் என்று நரக வேதனையை கெளப்பி விட்டுருக்கிறார்கள் ,டைரக்டரும் ,தயாரிப்பாளரும் :
வடிவேலை மறுபடியும் காமடிக்காக புக் பண்ணியிருப்பது சிறுவர்களை தங்கள் படத்தை பார்க்க வைக்க இழுப்பதுக்காவே ,இது குஸ்புவின் குசும்பு :)
முத்துக்காளையின் வசனம் , நீங்க தான் என்ன விட க்ளாமரா இருக்கீங்க , ஒரு சைடு’ல பாக்கும் போது ”வாழ்வே மாயம்” கமல் மாதிரி இருக்கீங்க’னு சொல்லும் போது இஸீட்’னு இங்கீலிபீசு’ல கேக்க பக்கத்துல இருந்த கருவாயர் புரியாம இஸீட்டு’னு சொல்லும் பகுதி காமடி

இலவச அட்வைஸ் :

நகரம் படமாக பார்ப்பதுக்கு பதிலா வடிவேலின் காமடி பகுதியை மட்டும் பார்த்தால் நேரமிச்சமாகும் :) சிரித்து வாழுங்கள்

ஹைலைட் :

வடிவேலுக்கு பெண் வேடம் அழகாக இருப்பது :) ,டேய் அதென்ன உள்ள வந்து ஆத்து’ல பாயுற மாதிரி பாயுற ’னு கடுப்பாகுவது காமடியே

படத்தில் வடிவேலுவை தவிர மற்ற பகுதிகளை சுருக்கி தந்திருக்க அட்வைஸ் பண்ணியிருக்கலாம் டைரக்டருக்கு , தயாரிப்பாளரும் , டைரக்டரின் பொண்ணாட்டியுமான ,கதாநாயகனின் உண்மை நாயகியுமான குஷ்பு :)

படத்தில் பாடல்கள் தேவையற்றவை , கதாநாயகனுக்கும் ,கதாநாயகிக்கும் சுத்தமா ஒத்து போகவில்லை இருவரில் யாராவது ஒருவரை தவிர்த்திருக்கலாம் , பழைய ப்ரியாவையே (தலைநகர ஹீரோயின்) போட்டுருக்கலாம்

நகரம் எனது பார்வையில் நரகமே ,

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)