இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

பிப்ரவரி 14 காதலர் தின வாழ்த்துகள் !!!!

காதலர் தின வாழ்த்துகள் ,

உண்மையா காதலிப்போருக்கும் ,உண்மையா காதலில் இருந்து பிழைத்த்தும் பிழைக்க முடியாம இருப்பவர்களுக்கும் , உண்மையாவே காதலிக்க நினைத்துக்கொண்டே நாட்களை போக்கிக்கொண்டு இருப்போருக்கும் , எனது உண்மையான காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்



சென்னையில் காதலர் தினம் :





உலகநாடுகள் முழுவதும் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. மேலை நாடுகளில் இருந்த கலாச்சாரம் நம்நாட்டிலும் சமீபகாலமாக வேகமாக பரவிவருகிறது. ஒவ்வொரு முக்கிய நாட்களும் சிறப்பு தினமாக கொண்டாடப்படும் வேளையில் காதலர்களும் வேலன்டைன்ஸ் டே என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். தமிழக கலாச்சார பண் பாட்டிற்கு எதிராக இந்த தினம் இருந்தாலும் கூட இன்றைய இளைஞர்கள் மத்தியில் காதலர்தினம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கண்களில் உருவாகும் காதலை போற்றும் விதமாக இத்தினம் காதலர்கலால் மகிழ்ச்சியுடன் இன்று கொண்டாடப்படுகிறது. காதலர்கள் செல்போன் மூலமாகவும், வாழ்த்து அட்டைகள் மூலமாகவும் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். எஸ்.எம்.எஸ். வழியாக விதவிதமான இதயம் தாங்கிய அம்பு படங்களுடன் காதலர்கள் தகவல்களை அனுப்பி மகிழ்ந்தனர். சென்னையில் காதலர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். மெரீனா கடற்கரையில், காலை முதல் இளம் காதலர்கள் குவிய தொடங்கினர். கடற்கரை யோரம் தனித்தனியாக அமர்ந்து காதலர் தின வாழ்த்துக்களை கூறினார்கள். காதலர்தின பரிசாக காதலன் காதலிக்கு கொடுக்க, பதிலுக்கு காதலியும் காதலனுக்கு அன்பளிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ரோஜா மலரை கொடுத்து வாழ்த்து கூறிய காதலர்களையும் கடற்கரையில் காண முடிந்தது. காதலிகள் திகைக்க கூடிய வகையில் பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து மனதை நெகிழச் செய்தனர். மெரீனா கடற்கரை முழுவதும் காதலர்கள் ஆங்காங்கே உட்கார்ந்து குதுகலத்தில் ஈடுபட்டனர். இதேபோல பெசன்ட் நகர் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலையிலும் காதலர்கள் கூட்டம் களை கட்டியது.

காந்திமண்டபம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட மாநகராட்சி பூங்காக்கள் இன்று காதலர் களால் நிரம்பி வழிந்தது. காதலர்கள் இருசக்கர வாகனத்தில் ஆங்காங்கே சீறிபாய்ந்து செல்வதையும் கடற்கரைகளில் ஓடி விளையாடியதையும் காண முடிந்தது.

காதலர்கள் எல்லைமீறி போகாமல் இருக்க போலீசார் நகரின் பல இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



காதலுக்காக சுட்ட கவிதை ஒன்னு போடுறேன் இங்கன பாருங்க ,

அன்புப் பரிசும் ஆசை முத்தமும்
இன்ப பெருக்கால் இதயச் சுத்தமும்
துன்பம் நீங்கி துயரம் மறப்பதும்
காதலர் தினத்தின் மகிமை அன்றோ


பெண்ணைப் படைத்த பிரமன் கூட
என்னை ஏன் தான் படைத்தானோ - அட
கண்ணை படைத்த இறைவன் பின்னர்
பெண்ணை ஏன்தான் படைத்தானோ


கண்ணையும் பெண்ணையும்
படைத்ததன் காரணம்
காதலின் பின்பே புரிந்ததன்றோ - அது
காதலர் தினத்தில் தெரிந்ததன்றோ




உண்மைக் காதலர் அனைவருக்கும் - எனது
உளமார்ந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

இந்த ப்ளோக்’ல எழுதியது !

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?