நான் ரசித்த டீடீ நேசனல் :
இதுதான் தூர்தஷனின் இசை :
நான் சிறுவனாக இருக்கும் போது சில பல நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பேன் டீடீ நேசனல்ல , அந்த மாதிரியான நிகழ்ச்சிகள் இப்போலாம் எங்க பார்க்க முடிகிறது , எந்த டீவிய பார்த்தாலும் அதே ஒரே கதை தான் ,மாமியார் மருமகளை எப்படி தீர்த்துக்கெட்டுவது என்றும் மருமகள் மாமியாரை எப்படி வெளியேற்றுவது (வீட்டை விட்டா இல்லை உலகத்தை விட்டா? )என்றும் , அரசியல்வா(வியா)திகள் சார்பான நிகழ்ச்சியும் தான் ஓடுகின்றன ,
நான் ரசித்த சில நிகழ்ச்சிகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் , ஞாயிற்றுக்கிழமை என்றாலே காலை 830ல இருந்து மதியம் ஒரு மணி வரை நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிறுவாங்களே, ஸ்ரீகிருஷ்ணா ல ஆரம்பிச்சி கார்டூன் நிகழ்ச்சி வரை அமர்க்கள படுத்திருவாங்க, அப்பலாம் எங்க வீட்டுல டீவி கிடையாது ,ஒவ்வோரு வீடா போறது , இந்த நிகழ்ச்சிகளை பார்க்க சில சமயம் 25பைசா டிக்கெட் கொடுத்தெல்லாம் பார்க்கனும் , வெளில போயிட்டு உள்ள வருவதுக்கு மருபடியும் தூட்டு கொடுக்கனும் அதனால அடக்கிக்கிட்டு(அவ்வ்வ) உள்ளையே இருக்கிறது, அப்படி பார்த்த சில நிகழ்ச்சிகள் எனது நினைவுக்கு கொண்டுவருவதுக்காக உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன் ,
தூர்தஷன் தொலைக்காட்சியில் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இதுவாகத்தான் இருக்கும் , அது மட்டுமின்றி எல்லோராலையும் பார்க்கப்பட்ட ஒரு நிக்ழ்ச்சி இதுதான் , இதனை யாராலையும் மறக்க முடியாது ,
அது என்ன்னா’தடங்கல்’னு போட்டு கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு ஒரு ஒலி வரும் ,
அது வந்துங்க பங்காளி உங்க தம்பி டீச்சர வ்ச்சிருக்காருங்க’னு (நாட்டாமை’ல) சொன்னவுடனே கவுண்டர் காதுக்குள்ள ஒரு ஒலி வருமே அதேதான் ஹி ஹி ஹி
எனக்கு ரொம்ப பிடித்தமான நிகழ்ச்சி இது தான் , சுதந்திர நாள் விழாவின் போதும், குடியரசு தினத்தின் போதும் வரும் நிகழ்ச்சிகள் , விடாமல் பார்ப்பேன் சிறு வயது ஆர்வம் :)
நீங்களும் பாக்க சில படங்கள் இங்கே :
ஸ்ரீகிருஷ்ணா
ஸ்ரீகிருஷ்ணா பாடல் :
இதில் கிருஷ்ணனின் லீலைகளில் ஆரம்பித்து அவரின் பிறப்பு, வளர்ப்பு , இளமை பருவம் , பின்ன எப்படி பஞ்சபாண்டவர்களிடம் வந்து சேர்கிறார், தூவாரக எப்படி அழிகிறது , ஸ்ரீகிருஷ்ணனின் மாமன் கம்சன்(கம்சன் தானே) எப்படி பழி வாங்குகிறார், அப்படி இப்படின்னு ஒரு அரைமணி நேரம் போடுவாங்க
இப்போ விளம்பரம் போடனுமில்லே ,இது வீக்கோ டெர்மரிக் கீரிம் :
அடுத்து இன்னோன்னு
பார்லேஜி பிஸ்கட்
மகாபாரதம்
மகாபாரத்தின் தலைப்பு பாடல் :
இதலாம் பத்தி நான் சொல்லவா வேணும் , சண்டை போட்டுக்கொண்டே இருந்தாங்க அது முடியும்முன் தூர்தர்ஷன் டீவீ’ய பார்ப்பதை நிப்பாட்டியாச்சி , இன்னும் எதோ ஒரு தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டு இருப்பதை வெளிநாடு வந்த அப்புறமும் பார்த்தேன் , ஒருத்தரை அம்(ன்)பு படுக்கையில் படுக்க வைப்பாரே அந்த காட்சி தான் இன்னும் வந்திருக்கு (ஐய்யோ ஐய்யோ)
கேப்டன் வியோம் :
இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் எல்லோராலும் விரும்ப பட்ட நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று தான் என்பதில் ஐயம் இல்ல , ஏன்னா விண்வெளி என்பது என்னான்னு சொன்னதே இந்த நிகழ்ச்சிதான் ரொம்ப திரில்லா இருக்கும், இருந்திச்சி நல்ல சண்டைக்காட்சிகள் ,விண்வெளி ஓடம் , துப்பாக்கி இப்படி பலவற்றை பற்றி அரிய வைத்த நிகழ்ச்சி தான் இது ,
சக்திமான் :
இது பற்றி நான் சொல்ல வேணுமா என்ன , இந்த நிகழ்ச்சி எல்லாருக்குமே தெரியுமே , நம்ம பாஷையில் சொல்ல போனா பட்டி தொட்டின்னு எல்லாத்தையும் கலக்கு கலக்குன்னு கலக்கிக்கிட்டு இருந்துச்சே , இதுல தான் முகேஷ் கண்னா இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் , இந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு காரணம் நமது மக்களின் அறியாமையே என்பதுதான் ,சக்திமான் வந்து நம்மை காப்பாற்றுவார் என்று நினைத்துக்கொண்டு தீக்குளித்தும் , மாடியில் இருந்து விழுந்தும் இறந்தவர்கள் பல ,
இந்த வாரத்தில் ஒருத்தருக்கு ஆபத்து வந்தாக்க , அந்த ஆபத்தோட அதாவது அந்தரத்தில் நிப்பாட்டிட்டு தொடரும்னு போட்டுவிட்டு , அடுத்த வாரத்தில் தான் சக்திமான் வந்து காப்பாத்துறார் இதலாம் யோசிக்கனுங்க, அதாவது வாழ்க்கை வேறு சினிமா வேறு இத புரிஞ்சிக்கிடாம .....பலர் இன்னும் சுத்திக்கிட்டு வாராங்க என்பதுதான் கசப்பான உண்மை
ஓம் நமச்சிவய :
இந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகும் ஆனா எந்தன மணிக்குன்னு தான் மறந்து போச்சி,
உங்களுக்கு தெரிஞ்சா சொல்லிட்டு போங்க :)
ஒலியும் ஒளியும் :
வெள்ளிக்கிழமை ஆனா போதும் (வெள்ளயங்கிரி அங்கிள் பாட ஆரம்பிச்சிடுவார்) ”ஒலியும் ஒளியும் “எல்லோருமே வீட்டுல உக்காந்து கொண்டு பார்ப்பாங்க , பஞ்சாயத்து தொலைக்காட்சியில் பலர் நின்னுக்கிட்டும் பார்ப்பாங்க ,
வாங்க நாமளும் ஒரு ஐந்து பாடல் கேப்போம் ,
1.தலைவர் கோட்டா , எம்.ஜி.ஆர்’னு அன்போடு அழைக்கப்பட்ட தலைவர் ,எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் பாடல்
மக்கள் மனதில் இருந்த உண்மைகளை அள்ளி தெளித்த பாடல் இது , நீங்க நல்லா இருக்க வேண்டும் இந்த நாடு முன்னேற ..
2. நடிகர் திலகத்தின் அருமையான பாடல்களில் ஒன்று :
நான் பேச நினைப்பதாலாம் நீ பேச வேண்டும் ..
3.பாட்டு பாடவா :
4.மறுபடியும் தலைவர் பாட்டு : எம்.ஜி.ஆர்
இது நாட்டை காக்கும் கை , (உண்மைதானே)
5. எம்.ஜி.ஆர் பாடல் ,
என்னை தெரியுமாஆஆஆ,தலைவர் கேக்குறார் (என்னைத்தெரியுமான்னு சொல்லுங்க) ,
அவ்ளோ தானுங்க எனக்கு தெரியும் உங்களுக்கு தெரிஞ்ச நிகழ்ச்சிகள் எதுவும் இருந்தா (உங்க மண்டையில் உள்ள களிமண்ண சுரண்டி ) சொல்லிட்டு போங்க
நான் வாரேன் ..
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment