இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

நான் ரசித்த டீடீ நேசனல்

நான் ரசித்த டீடீ நேசனல் :



இதுதான் தூர்தஷனின் இசை :




நான் சிறுவனாக இருக்கும் போது சில பல நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பேன் டீடீ நேசனல்ல , அந்த மாதிரியான நிகழ்ச்சிகள் இப்போலாம் எங்க பார்க்க முடிகிறது , எந்த டீவிய பார்த்தாலும் அதே ஒரே கதை தான் ,மாமியார் மருமகளை எப்படி தீர்த்துக்கெட்டுவது என்றும் மருமகள் மாமியாரை எப்படி வெளியேற்றுவது (வீட்டை விட்டா இல்லை உலகத்தை விட்டா? )என்றும் , அரசியல்வா(வியா)திகள் சார்பான நிகழ்ச்சியும் தான் ஓடுகின்றன ,


நான் ரசித்த சில நிகழ்ச்சிகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் , ஞாயிற்றுக்கிழமை என்றாலே காலை 830ல இருந்து மதியம் ஒரு மணி வரை நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிறுவாங்களே, ஸ்ரீகிருஷ்ணா ல ஆரம்பிச்சி கார்டூன் நிகழ்ச்சி வரை அமர்க்கள படுத்திருவாங்க, அப்பலாம் எங்க வீட்டுல டீவி கிடையாது ,ஒவ்வோரு வீடா போறது , இந்த நிகழ்ச்சிகளை பார்க்க சில சமயம் 25பைசா டிக்கெட் கொடுத்தெல்லாம் பார்க்கனும் , வெளில போயிட்டு உள்ள வருவதுக்கு மருபடியும் தூட்டு கொடுக்கனும் அதனால அடக்கிக்கிட்டு(அவ்வ்வ) உள்ளையே இருக்கிறது, அப்படி பார்த்த சில நிகழ்ச்சிகள் எனது நினைவுக்கு கொண்டுவருவதுக்காக உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன் ,


தூர்தஷன் தொலைக்காட்சியில் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இதுவாகத்தான் இருக்கும் , அது மட்டுமின்றி எல்லோராலையும் பார்க்கப்பட்ட ஒரு நிக்ழ்ச்சி இதுதான் , இதனை யாராலையும் மறக்க முடியாது ,

அது என்ன்னா’தடங்கல்’னு போட்டு கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு ஒரு ஒலி வரும் ,
அது வந்துங்க பங்காளி உங்க தம்பி டீச்சர வ்ச்சிருக்காருங்க’னு (நாட்டாமை’ல) சொன்னவுடனே கவுண்டர் காதுக்குள்ள ஒரு ஒலி வருமே அதேதான் ஹி ஹி ஹி

எனக்கு ரொம்ப பிடித்தமான நிகழ்ச்சி இது தான் , சுதந்திர நாள் விழாவின் போதும், குடியரசு தினத்தின் போதும் வரும் நிகழ்ச்சிகள் , விடாமல் பார்ப்பேன் சிறு வயது ஆர்வம் :)

நீங்களும் பாக்க சில படங்கள் இங்கே :






















ஸ்ரீகிருஷ்ணா


ஸ்ரீகிருஷ்ணா பாடல் :


இதில் கிருஷ்ணனின் லீலைகளில் ஆரம்பித்து அவரின் பிறப்பு, வளர்ப்பு , இளமை பருவம் , பின்ன எப்படி பஞ்சபாண்டவர்களிடம் வந்து சேர்கிறார், தூவாரக எப்படி அழிகிறது , ஸ்ரீகிருஷ்ணனின் மாமன் கம்சன்(கம்சன் தானே) எப்படி பழி வாங்குகிறார், அப்படி இப்படின்னு ஒரு அரைமணி நேரம் போடுவாங்க

இப்போ விளம்பரம் போடனுமில்லே ,இது வீக்கோ டெர்மரிக் கீரிம் :



அடுத்து இன்னோன்னு

பார்லேஜி பிஸ்கட்



மகாபாரதம்



மகாபாரத்தின் தலைப்பு பாடல் :


இதலாம் பத்தி நான் சொல்லவா வேணும் , சண்டை போட்டுக்கொண்டே இருந்தாங்க அது முடியும்முன் தூர்தர்ஷன் டீவீ’ய பார்ப்பதை நிப்பாட்டியாச்சி , இன்னும் எதோ ஒரு தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டு இருப்பதை வெளிநாடு வந்த அப்புறமும் பார்த்தேன் , ஒருத்தரை அம்(ன்)பு படுக்கையில் படுக்க வைப்பாரே அந்த காட்சி தான் இன்னும் வந்திருக்கு (ஐய்யோ ஐய்யோ)


கேப்டன் வியோம் :



இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் எல்லோராலும் விரும்ப பட்ட நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று தான் என்பதில் ஐயம் இல்ல , ஏன்னா விண்வெளி என்பது என்னான்னு சொன்னதே இந்த நிகழ்ச்சிதான் ரொம்ப திரில்லா இருக்கும், இருந்திச்சி நல்ல சண்டைக்காட்சிகள் ,விண்வெளி ஓடம் , துப்பாக்கி இப்படி பலவற்றை பற்றி அரிய வைத்த நிகழ்ச்சி தான் இது ,

சக்திமான் :



இது பற்றி நான் சொல்ல வேணுமா என்ன , இந்த நிகழ்ச்சி எல்லாருக்குமே தெரியுமே , நம்ம பாஷையில் சொல்ல போனா பட்டி தொட்டின்னு எல்லாத்தையும் கலக்கு கலக்குன்னு கலக்கிக்கிட்டு இருந்துச்சே , இதுல தான் முகேஷ் கண்னா இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் , இந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு காரணம் நமது மக்களின் அறியாமையே என்பதுதான் ,சக்திமான் வந்து நம்மை காப்பாற்றுவார் என்று நினைத்துக்கொண்டு தீக்குளித்தும் , மாடியில் இருந்து விழுந்தும் இறந்தவர்கள் பல ,

இந்த வாரத்தில் ஒருத்தருக்கு ஆபத்து வந்தாக்க , அந்த ஆபத்தோட அதாவது அந்தரத்தில் நிப்பாட்டிட்டு தொடரும்னு போட்டுவிட்டு , அடுத்த வாரத்தில் தான் சக்திமான் வந்து காப்பாத்துறார் இதலாம் யோசிக்கனுங்க, அதாவது வாழ்க்கை வேறு சினிமா வேறு இத புரிஞ்சிக்கிடாம .....பலர் இன்னும் சுத்திக்கிட்டு வாராங்க என்பதுதான் கசப்பான உண்மை

ஓம் நமச்சிவய :



இந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகும் ஆனா எந்தன மணிக்குன்னு தான் மறந்து போச்சி,

உங்களுக்கு தெரிஞ்சா சொல்லிட்டு போங்க :)


ஒலியும் ஒளியும் :


வெள்ளிக்கிழமை ஆனா போதும் (வெள்ளயங்கிரி அங்கிள் பாட ஆரம்பிச்சிடுவார்) ”ஒலியும் ஒளியும் “எல்லோருமே வீட்டுல உக்காந்து கொண்டு பார்ப்பாங்க , பஞ்சாயத்து தொலைக்காட்சியில் பலர் நின்னுக்கிட்டும் பார்ப்பாங்க ,

வாங்க நாமளும் ஒரு ஐந்து பாடல் கேப்போம் ,

1.தலைவர் கோட்டா , எம்.ஜி.ஆர்’னு அன்போடு அழைக்கப்பட்ட தலைவர் ,எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் பாடல்

மக்கள் மனதில் இருந்த உண்மைகளை அள்ளி தெளித்த பாடல் இது , நீங்க நல்லா இருக்க வேண்டும் இந்த நாடு முன்னேற ..



2. நடிகர் திலகத்தின் அருமையான பாடல்களில் ஒன்று :

நான் பேச நினைப்பதாலாம் நீ பேச வேண்டும் ..



3.பாட்டு பாடவா :



4.மறுபடியும் தலைவர் பாட்டு : எம்.ஜி.ஆர்

இது நாட்டை காக்கும் கை , (உண்மைதானே)



5. எம்.ஜி.ஆர் பாடல் ,

என்னை தெரியுமாஆஆஆ,தலைவர் கேக்குறார் (என்னைத்தெரியுமான்னு சொல்லுங்க) ,





அவ்ளோ தானுங்க எனக்கு தெரியும் உங்களுக்கு தெரிஞ்ச நிகழ்ச்சிகள் எதுவும் இருந்தா (உங்க மண்டையில் உள்ள களிமண்ண சுரண்டி  ) சொல்லிட்டு போங்க

நான் வாரேன் ..

0 comments:

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

இந்த ப்ளோக்’ல எழுதியது !

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?