இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

இந்தியா ஏன் வளரும் நாடாவே இருக்கு ?

நான் பதினொன்று ”டி”பிரிவு படித்துக்கொண்டு இருந்த போது நடந்த ஒரு நிகழ்வு :




பொருளியல் பாட வேளையில் நடந்த நிகழ்வு தான் :




எங்க பொருளியல் வாத்தியாரை பற்றி சொல்லியே ஆக வேண்டும் (வேண்டானா விடவா போறேன்), இவரு பொருளியல் வாத்தியார் மட்டுமில்லிங்க எங்கள் பள்ளியின் துணை தலைமை ஆசிரியரும் கூட, இவரு பள்ளிக்கு வரும் ஸ்டைலே தனி (என்ன தலைகிழாவா நடந்து வருவாரு?) எப்படின்னா, சைக்கிளில் வந்து இறங்கியவுடன் தனது கூடை பையை (அதுல நோட்டு,புத்தகம்லாம் இருக்காதுங்க) எடுத்து கட்டை விரலிலும், ஆள் காட்டி விரலிலும் பிடித்துக்கொண்டு (ட்ரை பண்ணி பார்க்கிறிங்களா?) அப்படியே கைய வீசி நடந்து வருவாரு , அப்புறம் ஒரு வசிகர புன்னகை எப்பவும் அவருடைய உதட்டில் குடி கொண்டு இருக்கும் , அவர் பேசும் தமிழும் ஸ்டைல் (எலே லே லே ,மாடு ) எதையும் ரெண்டு மூனு வாட்டி சொல்லுவார் (அப்ப அவருக்கு அவரே எக்கோ கொடுத்துப்பாருன்னு சொல்லுங்க) பின்ன நல்ல நகைச்சுவையா பேசுபவர் , அடுத்தவர்கள் கஷ்ட்த்தை உணர்ந்து கொள்பவர் , நல்ல பண்பாளர் , எப்பையுமே வெள்ளை சட்டை வெள்ளை கால் சட்டையும் போட்டு இருப்பார், காய்ச்சல் , தலைவலி , வயித்துவலின்னு போய் அரை நாள் விடுமுறை கடிதம் எழுதி கொடுத்தா உடனே முட்டை முட்டையா (அவ்வ்வ்வ்வ்வ்வ்) போட்டு வீட்டுக்கு கொண்டு போய் விட்டுட்டு வர துணைக்கு ஆளும் அனுப்புவார்னா பாத்துக்கோங்களேன் (அம்முட்டு நல்லவர்) இன்னும் நிறையா சொல்ல்லாம் இவர பற்றி ..


இவரோட பாடவேளை (எப்பவுமே மதிய உணவுக்கு அப்புறம் தான்) ஐந்தாவது பாடவேளையாத்தான் வரும் எல்லோரும் உண்ட மயக்கத்தில் இருப்போம். எதாவது ஒரு சில நாள் தான் சிலர் அப்படியே சொர்க்கத்துக்கும் ,சிலர் எதாவது ஒரு தியட்டருக்கும் போயிட்டு வருவாங்க கனவுலங்க , அப்படி ஒருத்தன கண்டு பிடிச்சிட்டாருனா , அவருக்கு பக்கத்தில இருக்கிறவனிடம் ஏலே ஆப்பகாதா அந்த ஆப்ப காதன எழுப்பிவிடு நு சொல்வார்,அவன் எழுந்தவுடன் ராஜாவுக்கு பெட்டும் தலைவானியும் கொண்டு வந்து போட சொல்லவான்னு கேப்பார் ,அவன் அந்த வகுப்பறைக்கு (சுயநினைவுக்கு) வந்ததும் இப்ப எதுல நிப்பாட்டுனேன் அதுல இருந்து வாசிலே’னு வாரு , அவன் திக்கு முக்காடி நிப்பான் ,சரி அப்படியே நில்லு ஆந்தக்கண்ணா’னு சொல்லிட்டு மருபடியும் பாடம் நடத்துவார்


இப்படி தான் ஒரு நாள் எல்லாருமே விழித்துக்கொண்டு இருந்தோம் ,(ஹி ஹிஹி) ஆரம்பத்திலையே ஒரு காமடி பண்ணிட்டார், அது என்னானா .......அன்னைக்கு எல்லோரும் அவங்க அவங்க பெஞ்சு மேல உக்காந்து இருந்தோம் ....


(எல்லாரும் அந்த ஊதுபத்தியே பாருங்க , அந்த புகை சுத்தி சுத்தி நாம எல்லாம் பிளாஸ்பேக்குக்குள்ள போவோம்)






வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகள் &வளர்ந்து கொண்டு இருக்கும் நாடுகள் இதனை பற்றிய வகுப்பு தான் போய்க்கொண்டு இருந்திச்சி ,அப்ப ஒரு ஆப்பக்காதன் எழுந்திருச்சி சார் இந்தியா ஏன் சார் வளரும் நாடுகளிலையே இன்னும் இருக்குதுன்னு கேட்டான் ,(இந்தியா வளரும் நாடுகள தான் இருக்கான்னு கேக்க பிடாது) அதுக்கு பொருளியல் வாத்தியார் சொன்ன பதில கேட்டதும் பக்கத்துல இருந்த 12’அ”(A group),11(அ,ஆ A.B group), நாங்க எல்லோரும் கெக்க பிக்க , கெக்க பிக்கன்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டோம், அவ்ளோ தான் எல்லா வகுப்புக்குள்ள இருந்த வாத்தியார்,டீச்சர்ஸ் எல்லாம் வெளில வந்து பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க , (ஏன் ? அப்படி என்ன சொன்னார்னு கேக்குற மாதிரி இருக்கு) அப்படி அவர் என்ன சொன்னார்னா , இந்தா நீயெல்லாம் இப்படி கேள்வி கேக்குறி’ல அதனாலத்தாலே இன்னும் வளரும் நாடாவே இருக்குதுன்னார்(ஹி ஹி ஹி அட நீங்களும் சிரிங்கப்பா )


இந்த மாதிரி பல நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கலாம் அதனை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே !


0 comments:

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

இந்த ப்ளோக்’ல எழுதியது !

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?