காதலர் தின வாழ்த்துகள் ,
உண்மையா காதலிப்போருக்கும் ,உண்மையா காதலில் இருந்து பிழைத்த்தும் பிழைக்க முடியாம இருப்பவர்களுக்கும் , உண்மையாவே காதலிக்க நினைத்துக்கொண்டே நாட்களை போக்கிக்கொண்டு இருப்போருக்கும் , எனது உண்மையான காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்
சென்னையில் காதலர் தினம் :
உலகநாடுகள் முழுவதும் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. மேலை நாடுகளில் இருந்த கலாச்சாரம் நம்நாட்டிலும் சமீபகாலமாக வேகமாக பரவிவருகிறது. ஒவ்வொரு முக்கிய நாட்களும் சிறப்பு தினமாக கொண்டாடப்படும் வேளையில் காதலர்களும் வேலன்டைன்ஸ் டே என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். தமிழக கலாச்சார பண் பாட்டிற்கு எதிராக இந்த தினம் இருந்தாலும் கூட இன்றைய இளைஞர்கள் மத்தியில் காதலர்தினம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கண்களில் உருவாகும் காதலை போற்றும் விதமாக இத்தினம் காதலர்கலால் மகிழ்ச்சியுடன் இன்று கொண்டாடப்படுகிறது. காதலர்கள் செல்போன் மூலமாகவும், வாழ்த்து அட்டைகள் மூலமாகவும் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். எஸ்.எம்.எஸ். வழியாக விதவிதமான இதயம் தாங்கிய அம்பு படங்களுடன் காதலர்கள் தகவல்களை அனுப்பி மகிழ்ந்தனர். சென்னையில் காதலர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். மெரீனா கடற்கரையில், காலை முதல் இளம் காதலர்கள் குவிய தொடங்கினர். கடற்கரை யோரம் தனித்தனியாக அமர்ந்து காதலர் தின வாழ்த்துக்களை கூறினார்கள். காதலர்தின பரிசாக காதலன் காதலிக்கு கொடுக்க, பதிலுக்கு காதலியும் காதலனுக்கு அன்பளிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
ரோஜா மலரை கொடுத்து வாழ்த்து கூறிய காதலர்களையும் கடற்கரையில் காண முடிந்தது. காதலிகள் திகைக்க கூடிய வகையில் பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து மனதை நெகிழச் செய்தனர். மெரீனா கடற்கரை முழுவதும் காதலர்கள் ஆங்காங்கே உட்கார்ந்து குதுகலத்தில் ஈடுபட்டனர். இதேபோல பெசன்ட் நகர் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலையிலும் காதலர்கள் கூட்டம் களை கட்டியது.
காந்திமண்டபம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட மாநகராட்சி பூங்காக்கள் இன்று காதலர் களால் நிரம்பி வழிந்தது. காதலர்கள் இருசக்கர வாகனத்தில் ஆங்காங்கே சீறிபாய்ந்து செல்வதையும் கடற்கரைகளில் ஓடி விளையாடியதையும் காண முடிந்தது.
காதலர்கள் எல்லைமீறி போகாமல் இருக்க போலீசார் நகரின் பல இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
காதலுக்காக சுட்ட கவிதை ஒன்னு போடுறேன் இங்கன பாருங்க ,
அன்புப் பரிசும் ஆசை முத்தமும்
இன்ப பெருக்கால் இதயச் சுத்தமும்
துன்பம் நீங்கி துயரம் மறப்பதும்
காதலர் தினத்தின் மகிமை அன்றோ
பெண்ணைப் படைத்த பிரமன் கூட
என்னை ஏன் தான் படைத்தானோ - அட
கண்ணை படைத்த இறைவன் பின்னர்
பெண்ணை ஏன்தான் படைத்தானோ
கண்ணையும் பெண்ணையும்
படைத்ததன் காரணம்
காதலின் பின்பே புரிந்ததன்றோ - அது
காதலர் தினத்தில் தெரிந்ததன்றோ
உண்மைக் காதலர் அனைவருக்கும் - எனது
உளமார்ந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்.
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment