சிறுத்தை – எட்டுக்கால் பாய்ச்சல் :
சிங்கம் - சிறுத்தை, அண்ணன் – தம்பி,
சூர்யா - கார்த்தி
ரொம்ப நாளுக்கு அப்புறமா ஒரு காமடியான அதிரடியான திரைப்படம் , கார்த்திக்கு இந்த வேடம் சரியா ஒத்துப்போயிருக்கு’னு தான் சொல்லனும்.அவுக அண்ணன் சூரியா மாதிரி இரட்டை வேடத்தில அவ்வளவு மாறுபாடு காட்டலனாலும் மிரட்டிருக்கார் நம்ம கார்த்தி. போலீஸ் உடை இவருக்கு அவ்வளவு எடுப்பாக இல்லாட்டியும் ,மப்டியில் வரும் உடை செமையா இருக்கிறது கார்த்திக்கு , காமடியாக ஒட்டிக்கொண்டு வரும் காட்டுப்பூச்சி சந்தானமும் ராக்கெட் ராஜா கார்த்திக்கு ஒத்துப்போகிறார், கவுண்டரை அடிக்கடி நினைவு படுத்துக்கிறார் சந்தானம். சந்தானத்துக்கு பெண் வேடமும் ஒத்து வருகிறது என்றே கூற வேண்டும்.
பெண் வேடத்தில் சந்தானம் சூப்பராக நடித்திருக்கிறார் , நடித்திருக்கிறார் ( சிலர் கேட்டுக்கொண்டத்துக்கிணங்க )
ஆரம்பத்தில் ஆண்டிக்கு மொட்டையடிக்க ஆரம்பித்து கடேசியில் வில்லர்களை மொட்டையடிக்கும் வரை அமர்க்களம்(தல படமில்ல) இன்பார்மர் சொன்ன சேட்டு கல்யாணத்தில் களவாங்கப்போகும் ராக்கெட்டும் ,காட்டுப்பூச்சியும் தனித்தனியே களவாங்க அக்கிரிமெண்ட் போட்டு போவதும் ,அங்கே கண்ணா லட்டு திங்க ஆசையாவும் , வீட்டம்மா(வீட்டின் சொந்தக்காரரின் மனைவி) சாவியை கொடுத்திட்டு பக்கத்து ரூமில் நகையிருப்பதாக சொன்னவுடன் ”கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா’னு” சொல்லுவதும் காமடி. தமன்னாவுக்கு வெட்கத்துடன் தனது முகத்தை காட்டவும்(இதுக்கு முன்னாடி ஹீரோயின் தான் இப்படி காட்டுவாங்க , அதுவும் இந்தளவுக்கு வெட்கம் கலந்த புன்னகையுடன் காட்டியதில்லை என்று சொன்னால் அது மிகையாகாது) திருடிச்செல்லும் காட்டுப்பூச்சியை பிடித்துக்கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கொள்ளும் ராக்கெட்டை காட்டுப்பூச்சி பார்க்கும் போது ரேடியோவில் “நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு”மறுமலர்ச்சிப்படப்பாடலை ஒளிப்பரப்புவது டைமிங் காமடியே. என்ன வேலை செய்றீங்க’னு தமன்னா கேக்கும் போது மழுப்புவது கார்த்தியின் நேர்த்தி . இடை இடையில் மிமிக்கிரி செய்யவும் தவறவில்லை.
ஆரம்பத்தில் சிரித்த முகத்துடன் வரும் கார்த்தியா சிறிது நேரத்தில் IPS ரத்தினவேல் பாண்டியனா விஸ்வரூபமெடுத்து தாண்டவம் ஆடுகிறாரென்று திகைக்க வைக்கிறார் கார்த்தியுடன் சேர்ந்த இயக்குனர். வேகமாக அடிதடியில் இறங்கும் ரத்தினவேல் பாண்டியன் வேகமாகவே வில்லனின் தம்பியால் குத்துப்பட்டு சாகும் நிலைக்கு போகவும் அவரின் ஏற்கனவே தாயை இழந்த குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல்,ராக்கெட் ராஜாவாக வரும் கார்த்தியை சிக்க வைக்கிறார்கள் இவர்களின் வலைக்குள். பின்னர் அவரும் இடை இடையில் வந்து ஒரு சண்டையை ராக்கெட்டின் முன்னால் நிகழ்த்தி அடிப்பட்டு இறந்தும் போகிறார் IPS ரத்தினவேல் பாண்டியன். இவரைப்போலவே உள்ள கார்த்தி தனக்கே உரித்தான ஸ்டைல்லில் வில்லனை காலி பண்ணுகிறார் ,மிகவும் நகைச்சுவையோடு , சில இடங்களில் ஜாக்கிஜானையும் மனதில் நிறுத்துகிறார்.
படத்தில் தமன்னாவின் இடுப்பை காட்டுவதை குறைத்திருக்கலாம்.
தற்போது நடக்கும் உண்மை விசயத்தை , ஒருவர் போனை சுட்டது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருப்பது ,அவரின் ஆர்வக்கோளறு என்பதை எடுத்துக்காட்டிருக்கிறார்கள். (அந்த ஒருவர் காதல் படத்தில் (எப்படி ? ஸேட்டா ஹீரோவா’னு கேப்பாரே அவரு தான்)
IPS கார்த்திக்கு நல்ல வசனங்கள்,அதனை அவர் உச்சரிக்கும் விதமும் அழகு. உதட்டில் சிரிப்பும் ,கண்ணில் கனலையும் காட்டிருப்பார் கார்த்தி.முறுக்கு மீசையழகு.IPS க்கு உண்டான திமிரை இன்னும் காட்டிருக்கலாம்.
அந்த குட்டிப்பாப்பாவின் மழலைப்பேச்சழகு.
ஜாலியா காமடி , ஜாலியான ரூயட்ஸ் , ஜாலியான கதை,ஜாலியான சண்டை ,கொடுமையா வில்லர்களை(மரியாதைங்க) ஜாலியா ஒழிக்கிற ,அழிக்கிற ஜாலியான சிறுத்தை .
வாங்க பார்க்கலாம் ...................
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment