இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

இளைஞன் - திரைவிமர்சனம்

இளைஞன் – முதியோர்களின் ஆட்சி :



முத்தமிழரிஞரின் கதையோடு, சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ,வித்தியாசாகரின் இசையில், வித்தக கவிஞர்(!?)பா.விஜயின் பாடல்களில்,பல பெரும் நடிகர்கள் நடித்து தற்போது வெளிவந்திருக்கும் படம் தான் இளைஞன்.

படத்தின் ஆரம்பத்தில் 1959ல் ஒரு கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் நகரில் ......’னு ஆரம்பிப்பாங்க ,பட டைட்டில் போடும் போதும் கலைஞரின் இளைஞனென்று போடுவார்கள். இதெல்லாம் உங்களுக்கு சொல்லும் கருத்து என்னவென்று படம் முடியும் போது உங்களுக்கு புலனாகும்.




படத்தின் கதை : (அப்படினு ஒன்னு இருக்கானு கேக்கக்கூடாது)

ராஜ நாயகம் என்னும் பெயரில் கப்பல் கட்டும் நிறுவனத்தை ஆரம்பித்த தெய்வ நாயகம் முதலில் நல்ல விதமாகவே தொழிலாளர்களை நட்த்தி வந்திருப்பதாகவும் , பின்னர் (ராஜ நாயகம்)அவரின் மகன் அந்த நிறுவனத்தை எடுத்து நடத்த ஆரம்பித்தவுடனே அங்கு மனிதர்களுக்கு மரியாதையற்று ஒரு இயந்திரம் போல வேலை வாங்குவதும் ,கொத்தடிமையாக அவரது காதலி சோனாவின் பேச்சைக்கேட்டு நடத்தி வருகிறார். அந்த கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்களில் ஒருவர் நாசர் , கொஞ்சம் தொழில் திறமை படைத்தவராக இருப்பதும் ,அவரை அடித்து அவமானப்படுத்துவதும் அதனை அவர் தண்னி அடிச்சிட்டு வந்து தனது மனைவியிடம் காட்டுவதும் ,அம்மாவின் மீது பாசம் வைத்துள்ள இளைஞன் அதை அதட்டி கேப்பதும் ,அதனால் மனம் நொந்து முதலாளியை எதிர்த்து பேசிவதும்,முதலாளி கோவமாகி நாசரை அடித்து கொல்லுவதும்,அவருடைய இடத்தில் அந்த இளைஞன் வேலைக்கு செல்வதும் ,அங்கு நடக்கும் அநியாத்தைப்பார்த்து இளம் ரத்தம் கொதிப்பதும்,ஆத்திரமடைந்து ஒருவனை போட்டு புரட்டி எடுப்பதும் அதற்கு தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதும் , நேரடியாக ஆயுதப்போராட்டத்தில் குதிக்க போகிறார் அந்த இளைஞன்.


அதனை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த இளைஞனின் மாமா டெல்லி கணேஷ் ,ஆயுதப்போராட்டாம் சரியல்ல ,கத்திய தீட்டுவதுக்கு பதிலா புத்திய தீட்டுங்களென்று அறிவுறை கூறுகிறார் அந்த இளைஞனுக்கு, அவரும் பல புத்தகங்களைப் படித்து அதில் வரும் நல்ல நல்ல கருத்துக்களை பேப்பரில் எழுதி தொழிலாளர்கள் மனதில் தூங்கிக்கொண்டிருக்கும் பகுத்தறிவை தட்டி எழுப்புறார். இதற்க்கிடையில் சொத்து ஏழைத்தொழிலாளர் பெயரில் மாற்றி எழுதப் போவதாக தெரிந்துகொண்ட ராஜ நாயகம் தனது அப்பாவை கொன்று கடலில் தள்ளி விடுகிறார். இது அவரது தங்கை மீரா ஜாஸ்மினு’க்கு தெரியாமல் பார்த்தும் கொள்கிறார்.



தனது கம்பெனியில் ஏற்ப்பட்டிருக்கும் கொந்தளிப்பில் தனது பங்கையும் கொடுக்கிறார் மீரா ஜாஸ்மின்.ஒரு கட்டத்தில் சோனா கோவத்தில் அவளது அப்பாவை கொன்னது மாதிரி உன்னையும் கொல்லுவேனென்று சொல்ல தனது அப்பா செத்த விசயம் வெளிச்சத்துக்கு வருகிறது. கடலோரத்தில் ஒரு இரவு முழுவதும் ரூம் போட்டு அழுவார் மீரா ஜாஸ்மின்.காலையில் கண்ணீர் தீந்ததும் இளைஞனை அழைத்து ஆயுதப்புரட்சிக்கு வழிவகுப்பார்.இளைஞன் சரியென்று எல்லா ஆயுதங்களையும் தயாரிப்பார் தொழிலாளர்களோடு சேர்ந்து, கடேசியில் அம்மாவை கூட்டி வந்து காட்டுவார்,உடனே அம்மா அஹிம்சை தான் சரியென்று சொல்லவும் எடுக்காத ஆயுதத்தை கீழே போடுவார்.
பின்னர் ராஜ நாயகம் நல்லவர் போல் நடித்து கப்பல் வேலையை முடித்துவிடுவார் சில நாட்களிலே, அப்புறமென்ன கிளைமேக்ஸ் தான் ஒரு நீண்ட வசனத்துக்கு பிறகு அம்மா சொல்ல இளைஞன் எதிரியை அழிக்க செல்கிறார் கூண்டோட இல்லை இல்லை கப்பலோட , எதிரியை அழித்து சுற்றுசுவற்றையும் அடித்து நொறுக்கி அங்கிருந்து போக மனம் இல்லாமல் அங்கையே சுதந்திரமாக வாழ்வரென்று தனது கதையை முடித்திருக்கிறார் கலைஞர் சாரி கதையாசிரியர்.


வடிவேல் வெடி’வேல் வெத்துவேட்டு :

இதற்கு முன்னால் திரையில் பார்த்தாலே குபுக்கென்று வாந்தி வருவது போல சிரிப்பு வரும் நடிகர்களில் வடிவேல் ஒருவெறென்று சொன்னால் அது மிகையாகாது . ஆனால் இந்த படத்தில் அவரைப்பார்த்தால் சிரிக்க வேண்டுமே என்ற கட்டாயத்தில் சிரிக்க வேண்டி இருக்கிறது . நகரத்தில் கூட ஓரளவு சிரிக்க வைத்தார் வடிவேல். ஐசக் ஆறுமுகம் இது தான் இவருடைய பாத்திரம் அந்தளவுக்கு திரையில் இருக்கு பாத்திரம் கிடைக்கல என்பது உண்மை. வடிவேல் இதற்கு மேல் படம் நடித்தால் வருங்கால இளைஞர் சமுதாயம் உக்கிரமாக மாறிவிடுமென்பதே எனது கருத்து.

நமிதா :

சும்மா காட்சி பொருள் மட்டுமே .

காமடி :

இளைஞனாக வரும் நாயகன் ,மீரா ஜாஸ்மின் எண்ட்ரியில் அவர் கையில் உரை போட்டு இருப்பதை பார்த்து விட்டு குஸ்டமாக இருக்குமென்பார் கருணாஸிடம் .

கருணாஸ் :

காமடி நடிகரா ?

ஹீரோயின் :

தேவையா ?





ஏதோ படமென்று வந்தால் நாலு ரூயட் பாட்டு வருமே என்றும் , அப்படி வந்தால் ஹீரோவோட ஆட ஹீரோயினும் வேணுமே என்பதற்க்காக இந்தப் பாத்திரத்தை தயார் செய்திருப்பதாக தோணுகிறது.படம் ஆரம்பம் முதலே ஹீரோவின் மீது காதல் மழையை பொழிகின்றார்.ஹீரோவுக்கு காதலா ஒரு சின்ன பார்வை கூட கிடையாது என்பது வருத்தமே.

என்னிடம் அறிவுரை :(ப்ரீ அட்வைஸ்)

படத்தை வெளியுடும் முன்னர் என்னிடம் அறிவுரை கேட்டிருந்தால் இந்த படத்தை 1960லையே வெளியிட்டிருக்க வேண்டுமென்று கூறிருப்பேன்.
அதாவது கலைஞரின் இளமைக்காலத்திலையே வெளியிட்டு இருக்கலாம்.

மந்திரகுமாரி’ படத்தில் கதையெழுதிய அதே கதாசிரியரா இந்த படத்துக்கும் கதை எழுதிருக்கிறார் என்று நினைக்கும் போது தான்............

மந்திரகுமாரி படத்தில் திருடனாக நடித்திருக்கும் எஸ் ஏ.நடராஜன் பேசும் வசனமிது :
வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் (திருட்டும்) ஒரு கலைதான்!


டைரக்டர் கட் & ஆக்‌ஷன்:


டைரக்டர் படத்தில் பிரமாண்டம் காட்ட முயன்று தோல்வியை தழுவிருக்கிறார் என்று வெளிப்படையா காட்டிருக்கிறார் இந்தப்படத்தில்.அந்தக்காலத்தில் கதையைக்கொண்ட படமென்பதால் அந்தக்கால சாயலிலையே எடுக்க முயன்று இருக்கிறார். உடை,கார்,பாட்டுப்பொட்டி,ஓவியமென்று அந்தக்காலத்தைக்காட்டி மற்றவற்றையும் காட்ட தவறிவிட்டார்.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி :):

சோனா : என்ன அம்மா அம்மா’னு கெஞ்சுறதுனால சொல்லுறேன். டார்லிங் ஒரேரடியா சுட்டு கொல்ல வேண்டாம் , கொஞ்சம் கொஞ்சமா அடிச்சி துன்புறுத்தி கொல்லு !

டெல்லி : நீங்க நினைச்சாத்தான் கார்க்கிய(இளைஞன) காப்பாத்த முடியும்

சோனா : இப்படித்தான் எல்லாரும் நம்பி ஏமாந்து போறாங்க ?

இளைஞன் : அம்மா ,ஹுகும்ம்ம்,.. ஊர் தாலிய அறுத்து ,எல்லா தொழிலாளர்கள் வயித்திலையும் மண்ணள்ளிப் போட்டு,உலகபுகழ வாழ்ந்த தெய்வ நாயகம் ஐயா குடும்பத்தையும் ,கவுரத்தையும் குழி தோண்டி புதைச்ச இந்த குள்ள நரிக்கு பெயரா அம்மா இவலாம் சும்மா ? ஒவ்வொரு வீட்டுலையும் குடும்ப விளக்கா தான் வாழனும் நினைக்காம , மத்தவங்க வாழனும்னு நினைக்கிற என்ன பெத்தவ அம்மாவா இல்ல ஊரை அடிச்சி உலையில் போடும் இவ அம்மா ?


முக்கியமான விசயம் :

இங்கு கதாசிரியர் சொல்ல வருவது ஒரே ஒரு விசயம் தான் உலகிலையே கப்பல் கட்டும் தொழிலை முதல் முதலில் தமிழர்கள் தான் செய்தார்கள்.கப்பல் (கடல்வழி வாணிகம்)மூலமாகவும் வாணிகம் செய்தார்கள்.

படத்துக்கு பொறுத்தமான சில தலைப்புகள் :

அடிமை விலங்கு ,முதலாளித்துவம்,கொத்தடிமை,அஹிம்சை,ஆயுதப்போராட்டம்,சகுனியின் ஆட்டம்.



எல்லோரும் தனக்கு கொடுத்த வேடத்தை நிவர்த்தி செய்தாலும் , கதைக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாதவாறு ,ஏனோ தானா என்று வந்து செல்கின்றனர். ஆதலால் இளைஞன் எனது பார்வையில் முதியோர்களின் ஆட்சியே !


டிஸ்கி தகவல் :

ரஷ்ய நாவலாசி‌ரியர் மாக்சிம் கார்க்கியின் நாவலை தழுவி நமது கதாசிரியர் திரு.முதல்வர் முத்தமிழறிஞர் மு.கருணாநிதி அவர்கள் திரைக்கதையாக எழுதியிருக்கும் படமே இளைஞன் என்கிறார் டாஸ்மார்க் குவாட்டர் கட்டிங் .



படிச்சிட்டு சீரியஸா ஆனா கம்பெனி பொருப்பல்ல :)

0 comments:

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)