இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

வெற்றியை வெளியே தேடாதீர்கள் !

பேராசை -பெரு நஷ்டம்

ஆப்பிரிக்காவில் ஒரு விவசாயி தனக்கு சொந்தமான நிலத்தோடு சந்தோசமாகவும் திருப்திகரமாகவும் இருந்து வந்தான். அவன் சந்தோசமாக இருந்தான் ஏன்னென்றால் அவன் திருப்தியான மனநிலையை கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் அந்த நிலத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஒரு ஞானி அந்த வழியாக போனவர் ,இவனுக்கு வைரக்கற்களைப் பற்றிய ஆசைகளை விதைத்து விட்டு சென்றார். எப்படி என்றால் உனக்கு கை கட்டை விரல் அளவுக்கு வைரம் கிடைக்குமேயானால் இந்த ஊரையே சொந்தமாக்கி விடலாம்,அதனை விட கொஞ்சம் பெரிய அளவு வைத்திருந்தால் இந்த நாட்டையே உனதாக்கிவிடலாமென்றும் சொல்லி விட்டு சென்றார் அந்த ஞானி.



அதற்க்கு முதல் நாள் வரை நன்றாக தூங்கிக்கொண்டு இருந்த விவசாயி , அன்று முதல் தூங்க முடியவில்லை. காரணம் வைரத்தின் மேல் உள்ள ஆசை.பெரிய பணக்காரனாக ஆசை. இதற்கு முன்னர் அவன் போதுமென்ற மனோநிலையை கொண்டிருந்ததால் நிம்மதியாக தூங்கினான்.இப்போது அது முடியவில்லை.


பொழுது விடிந்த்தும் முதல் வேலையாக அவனது நிலத்தை இன்னொருவருக்கு விற்று விட்டு நாடு முழுவதும் தேடித்திரிந்தான் வைரத்தை, பின்னர் தனது நாட்டை விட்டு ஐரோப்பா கண்டம் முழுவதும் தேட ஆரம்பித்தான்.அடுத்து வேறிடத்துக்கு சென்றான், கடேசியாக ஸ்பெனில் உடல் நிலையும் ,மன நிலையும்,பணமும் இல்லாத காரணத்தினால் அங்கையே தற்க்கொலை செய்து இறந்து போனான்.



இந்த விவசாயின் நிலத்தை வாங்கியவர் ஒரு ஒட்டகம் வளர்பவர். இவர் ஒட்டகத்துக்கு எல்லா வித செயற்பாட்டையும் விளக்குபவர்.ஒரு நாள் காலை ஒட்டகம் தனது கட்டவிழ்த்ததும் ஓட்டமாய் ஓடியது அந்த நிலத்தில் ,காலை சூரியன் தனது ஒளியை பூமியில் செலுத்தியதும் ,அந்த நிலத்தில் இருந்து வானவில் போன்று பல வர்ணங்களில் ஒளிர்ந்தது , உடனே இவன் அதனை ஏதோ ஒரு இரும்பு என்று எண்ணி தனது அறையில் வைத்து விட்டு தனது வேலையை தொடர்ந்து செய்யலானான்.

அன்று மதிய நேரம் ஞானி வந்து அந்த கல் அங்கு மினுங்குவதை பார்த்து விட்டு அந்த விவசாயின் பெயரைக் கூறி அவர் திரும்பி வந்து விட்டாரா’ என்று வினவினார். அதற்கு நிலத்தை வாங்கியவர் ,இல்லை , எதற்கு கேட்டீர்கள் ?இல்லை அதோ இருக்கிறதே அது தான் வைரக்கல், அது விலைமதிக்க முடியாதது என்று கூறினார். அதற்கு அந்த நிலைத்தின் சொந்தக்காரர் , இது வெறும் கல் , நான் எனது நிலத்தில் இருந்து எடுத்தேன் , வாருங்கள் நான் காட்டுக்கிறேன், அங்கு இன்னும் ரொம்ப கிடக்கிறது என்று அழைத்து சென்றான் ஞானியை.

அங்கு சென்று பார்த்த ஞானி ஆச்சரியத்தில் மூழ்கி போனார்.அத்தனையும் வைரக்கற்கள் , அதனை நம்பாத அந்த புதிய நிலத்துக்காரரிடம் இரண்டு கற்களை எடுத்துக்க சொல்லிவிட்டு நேரா ஆராய்ச்சியாளர்களிடம் சென்றனர்.

அங்கு அவைகள் வைரக்கற்கள் என்று நிருபணம் ஆகியது. அந்த நிலம் முழுவதும் வைரக்கற்களா கிடைத்தன.


இதுல இருந்து என்ன தெரியுது ?

1.உங்கள் அதிர்ஸ்டம் உங்கள் காலுக்கடியில் தான் இருக்கிறது , அதனை உணரமறுக்கும் வரை நாம் வெளியில் தான் தேடித்திரிவோம்.
2.உணருங்கள் , உங்களுக்கானவை உங்களுக்கு அருகிலையே !
3. அதிர்ஸ்டம் வெளியில் இல்ல, உங்களுக்குள்ளையே !


இது ஒரு ஆங்கில புத்தகத்தில் வந்த கதை அப்படியே தமிழாக்கமும் அல்ல கதை முழுவதும் எனது சொந்த கற்பனையும் அல்ல ! படங்கள் இணையம் :-)



உங்களுக்கு எப்படி தோணுதோ ,அத அப்படியே சொல்லிட்டு போங்க

0 comments:

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)